Category Uncategorized
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN கடன் சுமைக்கு தீர்வு – காஞ்சி மஹா பெரியவா இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார். நம்மை சுற்றிலும், நாம் ஸ்வாசிக்கும் ப்ராணவாயுவிலும் வியாபித்திருக்கிறார். எதற்கு? நம்மை உய்விப்பதற்கு. அது தான் அவர் லக்ஷியம். ஜகதகுருவாக அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு கடமையாக. இப்போதே இப்படி என்றால்…
BATHRAGIRIYAR J K SIVAN
பத்ரகிரியார் புலம்பல் – நங்கநல்லூர் J.K. SIVAN பர்த்ருஹரி என்ற வடக்கத்தி ராஜா, ஒரு விரக்தியில் சகலமும் துறந்து, வாழ்க்கை வெறுத்து, சந்நியாசியாக தெற்கு நோக்கி நடந்து திருவிடைமருதூரில் பட்டினத்தாரின் சிஷ்யனாகி பத்ரகிரியார் என்ற பெயரோடு வாழ்ந்தார் என்கிறார்கள். இதெல்லாம் நிரூபிக்க அவசியமும் இல்லை, தேவையும் இல்லை. யாரோ பத்ரகிரியார் அற்புதமான சில விஷயங்கள் சொல்லி இருக்கிறார் …
OM. J K SIVAN
‘ஓம்” ப்ரணவ சப்தம். – நங்கநல்லூர் J K SIVAN நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு சொல் ”ஓம்”. அது இல்லாமல் எந்த மந்திரமும் ஆரம்பிக்காது. ரெண்டே ரெண்டு எழுத்து ”ஓம்’. அடேயப்பா, அதற்கு எவ்வளவு சக்தி. எவ்வளவு உள்ளர்த்தம். எந்த கடவுள் மேல் அர்ச்சனை ஸ்தோத்ரம் சொன்னாலும் முதலில் இந்த ஓம்…
கடல் கடந்துவந்த தமிழ்
கடல் கடந்துவந்த தமிழ் – நங்கநல்லூர் J K SIVAN தமிழ்த்தாத்தா உ வே சா. தமிழ் தாத்தா உ.வே.சா. சில அற்புத சம்பவங்களை மறக்காமல் பதிவு செய்தவை ”நினைவு மஞ்சரி” என்ற ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு சம்பவத்தை அப்படியே உங்களுக்கு அளிக்கிறேன். கொஞ்சம் நீளமாக இருந்தாலும் சுவை குறையாது. தமிழுக்கு எவ்வளவு பாடு…
AASIRVAADHAM J K SIVAN
ஆசீர்வாதம் – நங்கநல்லூர் J K SIVAN யாராவது நம்மை வாழ்த்தும்போதோ, அல்லது நாம் யாரையாவது வாழ்த்தி, ஆசிர்வதிக்கும்போதோ, ”நூறாண்டு வாழ்க” என்கிறோம். நூறு என்பது ஒரு மனிதனுக்கான ரொம்ப நீண்ட ஆயுட் காலமாக இப்போது கலியுகத்தில் நினைக்கிறோம். இதற்கு முந்திய யுகங்களில் செஞ்சரி CENTURY போட்டவர்கள் ரொம்ப பேர் இருந்திருக் கிறார்கள். யுகங்கள் மாறும்போது மனிதர்களின் ஆயுட்காலமும் குறைந்து கொண்டே வருகிறது. கலியுகத்தின் கடைசியில் 20 வயசு என்பதே மனிதனுக்கு தீர்க்காயுசாக இருக்கும் என்று சுக ப்ரஹ்ம ரிஷி பரிக்ஷித்துக்கு சொன்னது நினைவுக்கு வருகிறது. நினைத்துப் பார்க்கும்போதே இருபது வயது வாழ்வதே தொண்டு கிழ வயசா? நாம் இப்போது அதை அல்பாயுசு என்றல்லவோ கருதுகிறோம். எங்கள் காலத்தில், அதாவது 75-80 வருஷங்கள் முன்பு லெட்டர் எழுதும்போது கூட சிவி. சிவன் என்று தான் என் பெயரை குறிப்பிடுவார்கள். எல்லோரையும் சிரஞ்சீவி என்று சொல்வது வழக்கமாக இருந்தது. சிரஞ்சீவி என்றால் அமரன் , மரணற்றவன் என்று அர்த்தம். கல்யாண பத்திரிகைகளில், ஆயுஷ் ஹோம, உபநயன பத்திரிகைகளில் கூட சிவி . என்ற அடைமொழி இருக்கும். பெண்களை சௌபாக்யவதி என்று தான் குறிப்பிடுவார்கள். …
KOUBEENA PANCHAKAM. 2 J K SIVAN
ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN கௌபீன பஞ்சகம்/ யதி பஞ்சகம் 2 இடையில் கோவணத்தை தவிர வேறொரு பந்தமும் இல்லாதவனை ஞானி, யோகி, முனிவர், ஆண்டி, என்கிறோம். அதையும் திறந்த நிர்வாண ப்ரம்ம ஞானிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். சிவபெருமான் கௌபீனதாரியாக பிக்ஷாடனராக இருக்கும் விக்ரஹங்கள் படங்கள் நமக்கு நிறைய தெரியுமே. ஆதி சங்கரர், பட்டினத்தார்,…
HAPPY BIRTH DAY U.VE.SAA THATHTHAA. J K SIVAN
நமஸ்காரம் தாத்தா – நங்கநல்லூர் J K SIVAN இன்று பெப்ரவரி 19 தமிழ் தாத்தா ஸ்ரீ மஹாமஹோபாத்யாய தக்ஷிணாத்ய கலாநிதி, ஸ்ரீ உத்தம தானபுரம் வேங்கடசுப்பையர் ஸ்வாமிநாதய்யர் (உ வே சா) பிறந்த நாள். 169 வருஷங்களுக்கு முன்பு 19.2.1855ல் பிறந்தவர் ஸ்ரீ உ.வே.சா எனும் அமரர். என் தாய் வழித் தாத்தா பிரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதி அவர்கள் ஒரு தமிழ்க்கடல். பரம்பரை…
APPAIYA DEEKSHIDHAR J K SIVAN
அப்பைய தீக்ஷிதர் நங்கநல்லூர் J K SIVAN அடையபலம் அளித்த அபூர்வ மஹான் அடைய பலம் அப்பைய தீக்ஷிதரை இதுவரை தெரியாதவர்கள் ஒரு மஹானை தெரிந்து கொள்ளவில்லை என்பதால் கிடைத்த நஷ்டத்தை இப்போது தெரிந்து கொண்டு கைமேல் லாபமடைவதற்காக எழுதுகிறேன். நமது தொண்டைமண்டலம் தான் துண்டீர மண்டலம். அதில் தான் காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்ரநாதரும்,…
WHO WAS THE FOURTH PERSON? J K SIVAN
பெண்ணையாற்றங்கரையில் …நங்கநல்லூர் J K SIVAN நாலாம் ஆள் யார்? சில வருஷங்களுக்கு முன் ஒரு சிவராத்திரி யாத்திரை யின் போது சில ஆலயங்களுக்கு சென்றோம். மஹா சிவராத்திரி வைபவம் முடிந்து சென்னை திரும்பும் வழியில் திருக்கோவலூருக்குள் நுழைந்தோம். கண்ணில் முதலில் தென்பட்டது தபோவனம் ஆஸ்ரமம், ஸ்ரீ ஞானானந்தா இன்னும் அங்கே சுவாசிக்கப் படுகிறார். மணக்கிறார்.…
ULLADHU NAARPADHU J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி 11. சித்தத்தை சிவன் பால் வைத்து…. முதலில் உங்களை ஒன்று கேட்கப்போகிறேன். பதில் சொல்கிறீர்களா?நாற்பது செய்யுளில் இதுவரை பத்து செய்யுளுக்கு அர்த்தம் சொல்லியிருக்கிறேன். எத்தனை பேர் விரும்பி படிக்கிறீர்கள்?. பாடலோ, அதை நான் எழுதுவதோ புரிகிறதா? ஏனென்றால் எடுத்துக்கொண்ட விஷயம் ரொம்ப உன்னதமான தத்வம்.எவ்வளவோ முடிந்த…