PURATTASI SATURDAY J K SIVAN

ஒரு புரட்டாசி சனி சம்பவம்.–நங்கநல்லூர் J K SIVAN
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் அநேகர். இன்று காலை கூட ஒரு நடுத்தர வயது பெண் மணி மஞ்சள் சேலை உடுத்து கையில் பித்தளை சொம்பில் நாமம் போட்டு, கோவிந்தா கோவிந்தா என்று வாசலில் உரத்த குரல் எழுப்பினாள் . சொம்பில் அரிசியுடன் சேர்த்து பத்து ரூபாய் போட்டேன். வாழ்த்திவிட்டு சென்றாள் .
மதம், கடவுள் விரதம், அனுஷ்டானம் எல்லாமே மனதில் நம்பிக்கையால் வளர்கிறது. பலனளிக்கிறது.
இன்று புரட்டாசி சனிக்கிழமையோடு ஏகாதசியும் சேர்ந்து விட்டதால் விரதம் இன்னும் நல்ல பலன் தரும் .
ஒரு பக்தரின் வாழ்க்கையில் இப்படி ஒரு புரட்டாசி சனிக்கிழமை விரத பலன் ஏற்பட்ட அதிசயத்தை படித்தேன். சொல்கிறேன். நம்புபவர்கள் நம்பலாம்.
விஸ்வபதிக்கு அவ்வளவு நேம நியம அனுஷ்டானங்கள் பழக்கமில்லை. அதற்காக கடவுள் இல்லையென்று எவரிடமும் சொன்னதில்லை. கோவில்களுக்கும் அதிகமாக போனதில்லை. ஹைதராபாத் தெலுங்கு காரர். அன்று புரட்டாசி சனிக்கிழமை ஏகாதசியும் இன்று போல் அன்று சேர்ந்துவிட்டது. விஸ்வபதி சமீபத்தில் ரிட்டையரான சயன்ஸ் வாத்தியார்.
ஒருநாள் ஒரு மாணவன் வகுப்பில், அன்று அவன் பிறந்த நாள் அன்று ”வெங்கடேச விரத கல்பம்” என்ற புத்தகத்தை அவரிடம் கொடுத்து வணங்கி ”எங்கப்பா கொடுக்க சொன்னார்” என்றான். புத்தகத்தை புரட்டிப் பார்த்து விட்டு விஸ்வபதி வீட்டுக்கு சென்று பூஜை அறையில் அதை வைத்து விட்டு மறந்தே போய்விட்டார்.
கார்ப்பரேஷன் அதிகாரிகள் சமீபத்தில் ஒரு நோட்டிஸ் அனுப்பி இருந்தார்கள். வீட்டிற்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி சில வருஷங்களாக கட்டவில்லை. வட்டியோடு 38000 ரூபாய்.இன்னும் ஒரு வாரத்தில்
கட்ட வில்லை என்றால் வீடு ஜப்திக்கு வரும்…கோர்ட்
நோட்டீஸ்.
விஸ்வபதி ஏழை பிராமணன். மூன்று நாட்களாக தூங்க வில்லை. கவலை, துக்கம் வரும்போது தானே கடவுள் நினைவுக்கு வருவார். எங்கே போவது 38000 ரூபாய்க்கு? யார் கடனாக தருவார்கள்? எப்படி திருப்பி கொடுப்பது. வேலையிலிருந்து ஓய்வு வேறே வேறே வருமானம் இல்லையே. பிள்ளைகள் பெண்கள் எங்கெங்கோ இருக்கிறார்கள். இந்த பழைய வீட்டின் கதி என்ன ஆகப்போகிறதோ?
அன்று புரட்டாசி சனிக்கிழமை ஏகாதசி. பூஜை அறை யில் குளித்து விட்டு பேசாமல் உட்கார்ந்தவர் பெருமாள் டத்தின் எதிரே விளக்கேற்றி ஒரு சில காய்ந்த திராக்ஷை பழங்கள், பஞ்ச பாத்திரத்தில் ஜலம்.தட்டில் சில துளசி தளங்கள் போட்டு நைவேத்யம்.மணி அடித்தார். கல்பூரம் காட்டினார். எதிரே வைத்து விட்டு கண்ணை மூடினார். என்னவோ தெரிந்த பிராத்தனை ஸ்லோகங்
கள் சொன்னார்.
கண்ணை திறந்ததும் எதிரே ஒரு ஸ்டூல் மீது அந்த பச்சை கலர் புத்தகம் கண்ணில் பட்டது. மேலே சொன்ன ‘ புரட்டாசி வெங்கடேச விரதம்’ புத்தகம்.. அதை எடுத்து புரட்டினார் படித்தார் சில ஸ்லோகங்கள் அவரால் சொல்ல முடிந்தது. அன்று முழுதும் ஜலம் கூட குடிக்காமல் விரதம் இருக்க தீர்மானித்தார்.
ஆயிரத்தெட்டு தடவை கோவிந்தா கோவிந்தா என்று வேங்கடேசன் நாமம் மனப்பூர்வமாக சொன்னார். அடி மனதில் ஒரு வித இனம்புரியாத ஆனந்தம்
பகல் ஓடிவிட்டது மாலை நாலு மணி. ஹாலில் போன் ட்ரிங் ட்ரிங் என்று ஒலித்தது
”எவரண்டி ?
”’விஸ்வபதி காரு ..நேனு வேங்கடேஸ்வரலு …
”யார் தெரியலியே?’
”’என்ன சார், செகந்திராபாத்தில் உங்க வீட்டிற்கு
பக்கத்தில் சொர்ணம்மா மாமி உங்க மனைவியோடு ப்ரெண்டு FRIEND ஞாபகம் இருக்கா? காலை விந்தி விந்தி நடப்பாளே . அவ ஆத்துக்கார் நான்.. 2005ல் எங்களுக்கு ஒரு பெரிய அர்ஜன்ட் பண முடைன்னு என் ஆத்துக்காரி உங்க மாமிக்கிட்டே சொல்லி அழுத போது உங்காத்து மாமி சொர்ணாவிடம் ஒரு ஜோடி வளையலை கழட்டி கொடுத்து இதை அடகு வச்சு எடுத்துக் கோடி, அப்புறம் மீட்டுத்தா.”ன்னு கொடுத்
தாளாம். அதனாலே எங்களுடைய 22000 ரூபாய் கடன் கட்டினோம். அப்புறம் நீங்களும் வீடு மாறிட்
டேள் .நாங்களும் டெல்லி போய்ட்டோம். சொர்ணாவும் போய்ட்டா. இப்ப ஸ்ரீனிவாசன் ஆசிர்வாதத்தோடு நான் டில்லிலேயே சௌக்கியமா இருக்கேன் .
சமீபத்தில் எனக்கு ஒரு பழைய டயரியிலே சொர்ணா எழுதி வச்சதை பார்த்தப்புறம் தான் இந்த கடனை எப்படி அடைக்காம விட்டோம் னு மனசை உறுத்தி உங்களை தேடி இந்த அட்ரஸ், டெலிபோன் நம்பர் கிடைச்சுது. அதனாலே ஹைதராபாத் வந்து இன்னிக் கி கூப் பிட்டேன். ஒரு ஓட்டல்லே தங்கி இருக்கேன். இப்போ வரலாமா உங்களைப்பாக்க?
”தாராளமா வாங்கோ?”
விஸ்வபதிக்கும் மனைவி இப்போது இல்லை. அவள் எப்போதோ ஒரு ஜோடி வளையலை தந்து பக்கத்தாத்து சொர்ணாவுக்கு உதவி செய்தேன் ன்னு சொன்னது ஞாபகம் இருக்கு. ஆனா அப்புறம் அந்த வளை திரும்பி வந்ததா இல்லையா என்று அவரும் கேட்கவில்லை, அவளும் சொல்லவில்லை. இப்போது சொர்ணாவின் நகைகள் எல்லாம் எதுவுமே இல்லை. குழந்தைகளுக்கு கொடுத்தாகி விட்டதே.
ஒருமணி நேரத்தில் கட்டையாக குட்டையாக நெற்றியில் தென்கலை நாமத்தோடு வெங்கடேஸ்வரலு பஞ்ச கச்சத் தோடு வந்து சிரித்”தார். கையில் ஒரு மஞ்சள் பை . சிரித்தபோது மேல் வரிசை பல் இந்தியா கேட் மாதிரி இருந்தது.
”ஒரு தட்டு கொண்டுவாங்கோ”
”பூஜை அறையிலிருந்து தட்டு கொண்டுவந்து, வேங்க
டேஸ் வரன் பிரசாதமாக திராக்ஷை கொடுத்தார் விஸ்வபதி.
”ரொம்ப சந்தோஷம் . இந்தாங்கோ. தட்டில் சில வாழைப்பழங்கள், வெற்றிலை பாக்கு புஷ்பம் அதோடு ஒரு பிரவுன் கவரில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்’
”’என்னது சார் இது?’
”’நான் தான் சென்னேனே . என் மனைவி சொர்ணா டயரியில் எழுதிவைத்ததை சமீபத்தில் பார்த்த பிறகு டெல்லியிலிருந்து உங்களை ட்ரை பண்ணினேன். உங்க அட்ரஸ் டெலிபோன் கிடைச்சது. பதினோரு வருஷம் ஆயிட்டது. இருபது ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்த உங்க மனைவி வளையல், அதோடு நான் கொடுக்க வேண்டிய பணத்தை டபுளா என் ஆத்ம திருப்தி யோடு இதிலே நாற்பதாயிரம் ரூபாயாக வைத்திருக் கிறேன். வட்டின்னு நினைக்காதேங்கோ. என் ஆத்ம திருப்திக்காக. வேங்கடேஸ்வர பெருமாள் அனுக் ரஹம் என்று எடுத்துக்குங்கோ” நான் போய்ட்டு வரேன். வாசலில் வாடகை வண்டி நிக்கிறது..”
வேங்கடேஸ்வரலு கிடுகிடுவென்று எழுந்து போய் விட்டார்.எதிரே தட்டில் மனைவி வளையல் வேங்கடேஸ் வர விரத கல்பம் பச்சை நிற புத்தகத்தின் மேல் ரூபாய் கத்தைகள்.
”ஏடு கொண்டல வாடா வேங்கட ரமணா…..
விஸ்வபதி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு அன்றே முனிசிபல் ஆபிஸ் போய் வீட்டு வரி பாக்கியை செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டார்…
அதற்கப்புறம்…
இப்போது விஸ்வபதிக்கு பேசவே நேரம் இல்லை. சதா கோவிந்தன் நாமம் தான் பாராயணம்.
அதிருக்கட்டும் வேங்கடேசன் லீலைகள் சொல்லி மாளாது போலிருக்கிறதே!

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1424

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *