KOOVATHTHUR SIVALAYAM J K SIVAN

கூவத்தூர் சிவாலயம் – நங்கநல்லூர் J K SIVAN
கூவத்தூர் என்றால் ஜெயலலிதா அம்மையார் மறைந்த பிறகு ஏற்பட்ட ஏதோ சில ஆரவாரங்களில் ஆர்ப்பாட்ட குத்தாட்டங்களில் அடிபட்ட அரசியல் பெயராக எனக்கு நினைவு தான் வருகிறது. அங்கே உள்ள ஒரு உல்லாச பொழுது போக்கு விடுதியில் நடந்த படங்களை பார்த்தபோது தான் கூவத்தூர் பற்றே தெரியும். நாம் தேர்ந்தெடுத்த தலைகள் குடித்து கும்மாளமிட்ட விஷயம் தான் வீடியோவாகவும் செயதியாகவும் வந்ததே தவிர அங்கே யுள்ள கோவில்களை பற்றி யாரும்ஒன்றுமே சொல்லவில் லையே. . கூவத்தூருக்கு நேரில் சென்ற போது மூன்று முக்கிய ஆலயங்கள் உள்ளதைப் பற்றி அறிந்தேன். ஒருகோவிலை மட்டும் பார்க்க முடிந்தது. மூன்றில் ரெண்டு சிவன் கோவில்கள் ஒரு பெருமாள் கோவில்.
சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் ECR சாலையில் கூவத்தூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலேயே திருவாலீஸ்வரர் ஆலய ஐந்து நிலை ராஜ கோபுரம் கண்ணுக்கு தெரிகிறது.
கூவத்தூர் என்று ஏன் பெயர்? ஒரு புராண காலத்தில் எட்டு புண்ய நதிகள் கிணறுகளாக மாற முடிவெடுத்தன. எல்லாம் ஒரே இடத்தில் அமைந்தன. ஸமஸ்க்ரிதத்தில் கூபம் என்றால் கிணறு. இப்படி எட்டு கிணறுகள் இருந்த இடம் கூபத்தூர் ஆக அப்புறம் கிணறு காணாமல் போய் பேரும் கூவத்தூர் ஆகிவிட்டதாக அறிகிறேன். ஆயிரம் வருஷ திருவாலீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு இப்போது நமக்கு தரிசனம் தருகிறது. ஆங்காங்கே கல்வெட்டுகள் இருக்கிறது. ஊரில் இது தோன்றிய போது இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் ஆலயமும் உருவானது என்கிறார்கள். விஜயநகர ராயர்கள் எந்தக் கோவிலை யும் கட்டாமல் விட்டதில்லை. வாலி என்ற ராமாயண கால பலமிக்க வானர ராஜா 28 மாதங்களாக விடாமல் மாயாவி என்ற ராக்ஷஸனோடு ஒரு குகையில் சண்டை போட்டு கடைசியில் அவனைக் கொன்றதால் ப்ரம்ம ஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. கூவத்தூர் வந்தான். சிவன் அவன் தோஷத்தை நீக்கினதால், வாலி வழிபட்ட இந்த ஊர் சிவனுக்கு திரு வாலீஸ்வரர் எனப்பெயர் . கூகுளை திறந்தால் வேலுதரனின் அற்புத போட்டோக்கள் பல கோவில்களை அவர் தரிசித்து வெளியிட்ட கட்டுரைகள் படங்களை பார்க்க முடிகிறது. அதில் கூவத்தூர் போட்டோக்கள் சில இணைத்துள் ளேன். கல்பாக்கத்திலிருந்து ECR சாலையில் 8 கி.மி. தொலைவில் கூவத்தூர் உள்ளது. மைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த சிவாலயம். சுவாமி திருநாமம் ஸ்ரீ வாலீஸ்வரர். அம்பாள் ஸ்ரீ திரிபுரசுந்தரி. 16 பட்டை லிங்க ரூபம். கிழக்கு பார்த்த சன்னதி. சிவ கோஷ்டத்தில் பஞ்ச மூர்த்தங்கள் உள்ளன. ஸ்ரீ விநாயகர், முருகன் பைரவர், சூரியன் மற்றும் சண்டிகேச்வர் சன்னதிகள் உள்ளன. ஆலயம் தற்போது புதிதாக கட்டப்பட்டு வருகிறது. எல்லா சிவாலய உற்சவங்களும் நடைபெற்று வருகின்றன.ஆலய திருக்குளம் அருகில் உள்ளது. தல விருட்சம் பவழமல்லிகை. பாண்டிச்சேரி ECR சாலையில் உள்ள கூவத்தூரில் எல்லா பேருந்துகளும் நின்று செல்லும்.அம்பாள் திரிபுரசுந்தரி. ரொம்ப அழகானவள். பெரிய சிவலிங்கம். ஷோடச அங்க, பதினாறு பட்டைகள் கொண்ட பழைய ஆயிரம் வருஷ கோவில். பராமரிப்பு போதாது. வாலி தீர்த்தம் என்ற குளம் இன்னும் சரியாக சீரமைக்கப்படாத நிலையில் . இது வரை ரெண்டு மூன்று தடவை கூவத்தூர் சிவாலயம் சென்று ஆனந்தமானாக தனிமையில் சிவ தர்சனம் பெற்றுள்ளேன்.
சமீபத்தில் 29.9.2023 காலை ஏழரை எட்டு மணிக் குச் சென்றபோது கதவு திறக்கவில்லை. கிராமக் கோயில்களில் குறித்த நேரத்தில் தரிசனம் பெற முடியாததற்கு காரணம் அங்குள்ள அர்ச்சகருக்கு வருமானம் இல்லாததால் வேறு வேலைக்கு போய்வி டுகி றார்கள். பக்தர்கள் வருகை நிச்சயமில்லை என்பதால் ஆலயம் திறக்கப்படுவதில்லை. தனியார் கோவில்கள் ஒருவாறு நிர்வாகத்தின் பொறுப்பில் காலத்தை எண்ணிக்கொண்டு வருகிறது. அர்ச்சகர்கள் பிழைக்கிறார்கள்.
எத்தனையோ கோயில்களில் தரிசனம் பெற வந்த இந்த சிவனும் தரிசனம் தரும் சிவனும் மட்டுமே தனிமையில் பல நிமிஷங்கள் பேசி இருக்கிறோம். அந்த சிவன் படும் கஷ்டத்தை கண்ணால் கண்ட போது இந்த சிவனின் கஷ்டங்களை எப்படி முறையிடுவேன்?
பல கோயில்களின் குளங்கள் சீரமைக்க படாத நிலையில் நீரின்றி வறண்ட பள்ளிகளாக காண்கிறது. , அப்படி நீர் இருந்தால் அது உபயோகத்தில் இல்லாமல் பாசி பிடித்து பச்சை நிறமாக காட்சி அளிக்கிறது. பொறுப்பை ஏற்று கோயில்களை பராமரிக்க அதிகாரம் பெற்றவர்கள், வரும்படிக்கு மட்டும் விஜயம் செய்பவர்களாக இருந்தால், ஆலய பராமரிப்போ, பக்தர்கள் வருத்தத்தையோ கருத்தில் கொள்ள ஏது நேரம்? கோயில்களில் உண்டியல்கள் வேண்டாம். உண்டியலில் காணிக்கை போட்டால் அது கோவில் நலனுக்கு போய் சேரும் என்ற நிச்சயம் இல்லையே. எண்ணற்ற பக்தர்கள் இப்படி நினைத்து உண்டியலில் காசு, காணிக்கை போடுவதை தவிர்க்கிறார்களோ என்று தோன்றுகிறது.. தட்டில் காசு தக்ஷிணை போட ஆளின்மையால் அர்ச்சர்கள் சம்பளம், வருமானம் இல்லாத அர்ச்சகர்கள் வேறே ஏதாவது வேலை தேடி ஓடுகிறார்கள். குடும்பம் பிழைக்கவேண்டுமே? இதே ஊரில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேதராக ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். பல்லவர் காலத்து கோயில். ஏதோ பணத்துக்காக இந்த கோவில் நிர்வாகிகளுக்கும் அரசாங்கத்துக்கும் வியாஜ்யம் என்று கோவில் சந்நிதியிலும் கேஸ் கோர்ட்டிலும் நிற்கிறது. பல அருமையான விகிரஹங்கள் உடைந்த நிலையில் பல போட்டோக்கள் கண்ணில் பட்டது.
உடைக்கப்பட்ட விக்ரஹங்களின் படங்களைப் போட்டு பக்தர்கள் மனதை புண்படுத்த எண்ணமில்லை. கவனிப்பாரற்ற கோவில்களைப் பார்த்தால் முகலாய ஆட்சி எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது. சரித்த்ரம் முடிந்தால் திரும்பட்டுமே. யாரும் கோவில் செல்ல முடியாத பாழடைந்த நிலை. சிதம்பரேஸ்வரர் என்று தன்னை எல்லோரும் காண அனுமதிக்கிறாரோ அன்று நாம் சென்று தரிசிக்கலாம். படங்களை கூகிளில் பார்த்த போது மேலே பார்க்க முடியாதபடி கண்களில் நீர் திரை மறைத்துவிட்டதே.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *