ஸௌந்தர்ய லஹரி – நங்கநல்லூர் J K SIVAN
25.அம்பாள் ஸர்வ ஸக்தி ப்ரதாயினி
त्रयाणां देवानां त्रिगुणजनितानां तव शिवे भवेत् पूजा पूजा तव चरणयोर्या विरचिता ।
तथा हि त्वत्पादोद्वहनमणिपीठस्य निकटे स्थिता ह्येते शश्वन्मुकुलितकरोत्तंसमकुटाः ॥ २५॥
trayāṇāṃ dēvānāṃ triguṇajanitānāṃ tava śivē bhavēt pūjā pūjā tava charaṇayōryā virachitā ।
tathā hi tvatpādōdvahanamaṇipīṭhasya nikaṭē sthitā hyētē śaśvanmukulitakarōttaṃsamakuṭāḥ ॥ 25
த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் தவ ஶிவே பவேத் பூஜா தவ சரணயோர் யா விரஶிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே ஸ்திதா ஹ்யேதே ஶஶ்வன் முகுலித கரோத்தம்ஸ மகுடா 25
ஆதி சங்கரர் அம்பாள் லலிதையிடம் என்ன சொல்கிறார்?
”தேவி பராசக்தி, ப்ரம்மா விஷ்ணு ருத்ரன் என்று தனித்தனியே அந்த தெய்வங்களை வணங்கவேண்டியதே இல்லை, அம்மா, உன் திருவடிகளில் எந்த பூஜை செய்யப்படுகிறதோ அது உன்னுடைய முக்குணங்களை அநுசரித்துத் தோன்றிய மும்மூர்த்திகளுக்கும் பூஜையாக ஆகும். ஏனென்றால், அந்த மூவரும் சிரத்தின் மேல் கரம் கூப்பி வணங்குவதே உன்னுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்ன பீடத்தை. அதுவும் அவர்கள் சிரத்தின் மேல் இருக்கும் கிரீடங்கள் உன் திருவடி பீடத்தை அல்லவோ தொட்டு வணங்கி நிற்கிறது. சிரமேற் குவிந்த அவர்கள் கரங்களும் உனது பாத பீடத்தின் அடியில் தானே!
த்ரிகுண ஜநிதானா: மூன்று குணங்களுடன் கூடிய மாயைக்கு ரஜோகுணம் மேலிட்டிருக்கும்போது அதனுடன் சம்பந்தப்
பட்ட சைதன்யம் பிரம்மா;
சத்வகுணம் மேலிட்டிருக்கும்போது அதனுடன் சம்பந்தப்பட்ட சைதன்யம் விஷ்ணு;
தமோகுணம் மேலிட்டிருக்கும்போது அதனுடன் சம்பந்தப்பட்ட சைதன்யம் ருத்ரன்;
மணிபீடஸ்ய நிகடே: சரீரத்தில் உள்ள ஆறு ஆதாரங்களும் மணிபீடங்கள். அவை மூன்று கண்டங்களாகப் பிரிக்கப் படுகின்றன:
ஆறு ஆதார குண்டலினி சக்ரங்களும் மூன்று முடிச்சுகள் வசம் உள்ளவை என்று ஏற்கனவே விளக்கம் அளித்திருக்கிறேன். அந்த மூன்று முடிச்சுகளும் க்ரந்தி எனப்படுபவை. ப்ரம்ம க்ரந்தி, விஷ்ணு க்ரந்தி, ருத்ர க்ரந்தி.
அக்கினி கண்டத்தில் உள்ள ப்ரம்மக்ரந்தி பிரம்மாவின் இருப்பிடம்.
சூர்ய கண்டத்தில் உள்ள விஷ்ணுக்ரந்தி விஷ்ணுவின் இருப்பிடம்
ஸோம கண்டத்தில் உள்ள ருத்ரக்ரந்தி ருத்திரனன் இருப்பிடம்.