TRUE FRIEND J K SIVAN

நல்ல நண்பன் – நங்கநல்லூர் J K SIVAN
ரொம்ப பிரபலமான கோவிலாக இருக்காது. ஊருக்குள் எங்கேயோ இருக்கும். அதற்கு தரிசனத்துக்கு வருஷம் முழுக்க வந்தவர்களை எல்லாம் எண்ணினாலும் ஒற்றைப்படையான நம்பர் தான் தேறும். அப்படி இருந்தாலும் சில கோவில்கள் அற்புதமானவை. அவற்றின் விசேஷம் வெளியே எவருக்கும் தெரிவதில்லை.
அப்படி ஒரு கிருஷ்ணன் கோவில் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்தது. வளரும் கிராமம். அதன் அருகே ஒரு அலுமினியம் தொழிற்சாலை. அதில் எண்ணற்றோர் பணி புரிந்தார்கள்.
கிருஷ்ணன் கருங்கல்லால் ஆகி நின்றாலும் காண்பதற்கு தத்ரூபமாக இருப்பவன். கோபால தாத்தாச்சாரியார் பல வருஷங்களாக அந்த கோவிலில் வம்சாவளியாக பட்டாச்சாரியார்.
அடிக்கடி ஒருவன் அந்தக் கோவிலில் வந்து ஓரமாக நின்று தரிசிப்பான். யார் வந்தாலும் வராவிட்டாலும் அவன் தினமும் வருவான். ஓட்டுப்போட்டு காக்கி சட்டை,கந்தல் அரைநிஜார் அழுக்காக அவன் வந்து நிற்பதை அருவருப்பாக கவனிப்பார். அவன் கண்மூடி சிலையாகி கிருஷ்ணனை பல நிமிஷங்கள் வணங்கி நிற்பான். ஒவ்வொருநாளும் அவன் வரும் நேரம் தான் அவருக்கு எரிச்சலைத் தந்தது. கோவிலை மூடிவிட்டு செல்லலாம் என்று ஆயத்தம் பண்ணும்போது பகல் 1130 பன்னிரண்டு மணிக்கு வருவான். அவன் கையில் தினமும் ஒரு அழுக்குப்பை. அதில் டிபன்பாக்ஸ் . ஏதோ பகல் உணவோடு அவன் வருகிறான் என்று மட்டும் அவருக்கு கோபம். ஒன்றும் சொல்லமாட்டார். அவனும் பேசமாட்டான்.
ஒருநாள் அவனை வாய் திறந்து கேட்டு விட்டார்.
”நீ யாருப்பா தினமும் வருகிறாய். என்கிருந்து வருகிறாய்?
”ராமசாமிங்க. பக்கத்து கிராமம் பட்டேஸ்வரன்
பட்டிங்க”
”இங்கே இந்த நேரத்துக்கு ஏன் வருகிறாய், ஒன்று காலையில் வரலாம் அல்லது மாலையில் வரலாமே”
”நான் காலையிலேயே ஆறு மணிக்கு வேலைக்கு போயிடுவேனுங்க.”
ஏன் இந்த நேரம் வருகிறாய்?”
”இப்போது தாக்கானுங்க சாப்பிட்டு நேரம். அரைமணி நேரம் விடுவாங்க. அப்போ டைம் கிடைச்சதும் நேரே இங்கே வரேனுங்க ”
”உனக்கு கிருஷ்ணன் பிடிக்குமா தம்பி”
”அவன் என் நண்பனுங்க”
”ஓ அப்படியா?”
”தினமும் ”வாடா கிருஷ்ணா நீயும் என்னோடு வந்து சாப்பிடு ன்னு கூப்பிட்டுட்டு போவேன். நாங்க மனசார சேர்ந்து சாப்பிடுவோம். பேசுவோம்.”
கொஞ்சம் அரை கிறுக்கோ,?லூசோ?” என்று பட்டாச்சா ர்ய ருக்கு தோன்றியது.
”உனக்கு நண்பர்கள் வேறே இருப்பார்களே அவர்க ளோ டு சேர்ந்து சாப்பிடுவதில்லையா?”
”இல்லீங்க எனக்கு இவன் ஒருத்தன் தான் நண்பன். வேறே யாரும் கிடையாதுங்க. இவன் ஒருத்தன் போதுமுங்க ”
கோபால தாத்தாச்சாரியாருக்கு கண்களில் பிரவாகம். எவ்வளவோ வருஷமாக நான் இந்த கிருஷ்ணன் கிட்டேயே நின்று அவனுக்கு கைங்கர்யம் செய்கிறேன். எனக்கு இப்படி ஒரு நெருக்கம் ஏற்படவில்லையே. எங்கோ தொழிற்சாலையில் கூலி வேலை செய்யும் இந்த மனிதனுக்கு கிருஷ்ணனிடம் எவ்வளவு நெருங்கிய நட்பு. ரெண்டு பேரும் தினமும் சேர்ந்து சாப்பிடுவார் களாம். அவனுக்கும் சேர்த்து இவன் உணவு கொண்டு வருகிறானாம்” ஆஹா இவன் பக்தியை என்னவென்று சொல்வேன்?”
வழக்கம்போல் அந்த மனிதன் வந்த சில நிமிஷங்க ளிலேயே திரும்பி போய்விட்டான்.
பட்டாச்சார்யர் ”கிருஷ்ணா, என்னையும் உன் நட்பு வட்டத்துக்குள் சேர்த்துக்கொள்” என்று மனம் வேண்டியது.
திடீரென்று ஒருநாள் ராமசாமி கோவிலுக்கு வரவில்லை. ஒருநாள் ஒருவாரம் பலநாள் ஆகியும் அவனை ஏன் காணோம்?
பட்டாச்சார்யார் மனம் என்னென்னவோ எல்லாம் யோசித்தது. அவன் யார்? எங்கிருப்பவன்? அவனை ஏன் காணோம்.? என்ன ஆயிற்று அவனுக்கு? என்று அறிந்து கொள்ள மனம் துடித்தது.
அலுமினியம் தொழிற்சாலைக்கு சென்றார். அவனைப் பற்றி விசாரித்தார். அடையாளம் எல்லாம் சொன்னார்.
பலபேரை கேட்டதில் ஒருவாறு விஷயம் கிடைத்தது. ராமசாமி நல்ல ஆள். நல்ல பேர் அவனுக்கு. ஏதோ ஆக்ஸிடெண்ட் ஏற்பட்டு பட்டணத்தில் பெரிய ஆஸ்பத் திரியில் சேர்த்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண் டார். ஆஸ்பத்தரிக்கு சென்றார்.
மாடிப்படி ஏறி அவன் எங்கிருக்கிறான் என்று இடம் கண்டுபிடித்துத்தெரிந்து கொண்டார்.
அது ஒரு பெரிய ஹால். அங்கே அநேகருக்கு பாயில் தரையில் படுக்கை. அதைத்தாண்டி சில சின்ன சின்ன தடுப்பு அறைகள். அதில் ஒன்றில் ராமசாமியின் கட்டில். அவனைப் பற்றி அவர் கேட்டதும் மற்றவர்கள் அவரிடம் ராமசாமியைப் புகழ்ந்து பேசினார்கள். அவனுக்கு பெண்டாட்டி பிள்ளை யாரும் இல்லை. அவனைத் தேடி யாரும் வருவதில்லை. இருந்தாலும் அவன் ஆஸ்பத் திரியில் மற்ற நோயாளிகளுக்கு உற்சாகத்தோடு உழைப்பவன் என புரிந்தது. அவனைப்பற்றி ஒரு அதிசய தகவல் மற்றவர்கள் சொன்னதைக் கேட்டு பட்டாச்சாரியர் அசந்து போய்விட்டார்.
பதினொன்றரை மணியாகிவிட்டால் ராமாசாமி ஆவலோடு யாருக்கோ காத்திருப்பது போல் அங்கும் அங்கும் கண்களால் தேடுவான். யாரையோ கண்டு பிடித்துவிட்டது போல் முகத்தில் மகிழ்ச்சி தோன்றும். யாரையோ வரவேற்று பக்கத்தில் கட்டில் மேல் உட்காரவைத்துக் கொள்வது போல் எழுந்து உட்காருவான். தனக்குத் தானே யாருடனோ பேசுவது போல் பேசுவான். அவரோடு சாப்பிடுவது போல் நடிப்பான். சிறிது நேரம் ஆனதும் நண்பன் போய் விட்டான் என்று சொல்வான். பழையபடி ஆஸ்பத்தி ரியில் மற்றவர்களோடு சந்தோஷமாக பழகுவான். ஏதோ மனநோய் போல் இருக்கிறது என்று சொன்னார் கள்.
பட்டாச்சார்யருக்கு புரிந்துவிட்டது.
”ராமசாமி என்ன ஆச்சு உனக்கு ? என்று கேட்டார்
”அலுமினிய பட்டறையில் ஒருவனுக்கு ஆக்சிடேன்ட். அவனுக்கு உதவ கிட்டே போய் அவனை தூக்கினேன் அவனை காப்பாத்தும்போது என் இடது கால் மெஷின் லே சிக்கிடுச்சி. மெஷினை ஆப் பண்ணிட்டாங்க அதுக் குள்ளே முதல் மூன்று விரல்கள் நசுங்கி கூழாயிடுச்சி. எடுத்துவிட்டார்கள்.
ராமசாமி நொண்டி நொண்டி அவன் நடக்க கஷ்டப் பட்டான். ஆஸ்பத்திரியில் சிகிச்சை .அவன் அழுதபோது என்ன காரணம் என்று பெரிய டாக்டர் கேட்டார்.
”தினமும் என் நண்பனைப் போய் பார்ப்பேன்.இப்போது போகமுடியவில்லை என்ற ஒரு வார்த்தை தான் சொன்னான்” என்றார்.
”ராமசாமி, நான் ஒரு வண்டி ஏற்பாடு பண்ணி தினமும் உன்னை கோவிலுக்கு அழைத்து சொல்லட்டுமா?என்று கேட்டார் பட்டாச்சாரியார்.
”வேணாமுங்க, கிருஷ்ணன் தினோமும் டாண்ணு பகல் பன்னிரண்டு மணிக்கு இப்போல்லாம் இங்கே வரானுங் க. ஏண்டான்னு கேட்டேன். ”முதல் ரெண்டு நாள் வெய்ட் பண்ணேன். நீ வரலே. அப்புறம் தான் காரணம் தெரிஞ்சுது. நீ வரமுடியலைன்னா என்னடா ? நான் வரேன் உன்னைப் பார்க்க” ன்னு சொல்றான். தினமும் எனக்கு சாப்பாடு கொண்டுவறான். வழக்கம்போல் ரெண்டு பேரும் சேர்ந்து தான் சாப்பிடுகிறோம் இங்கே ” என்று பதில் சொன்ன ராமசாமி காலில் பட்டாச்சார்யார் மானசீகமாக தடால் என்று விழுந்து வணங்கினார்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *