BEESHMAN 2 ——- J K SIVAN

பீஷ்மன் -2 – நங்கநல்லூர் J K SIVAN
அஷ்ட வசுக்களில் ஏழுபேர் மேல் தப்பு அதிகம் இல்லை. எட்டாவது வசு ப்ரபாஸனுடன் சேர்ந்து அவனுக்கு உதவ இந்த காமதேனு திருட்டில் ஈடுபட்டதால் பூமியில் பிறந்த உடனே மீண்டும் விண்ணுலகம் திரும்புவார்கள். எட்டாவது வசு ப்ரபாஸன் நீண்டகாலம் அங்கே வாழவேண்டும் அவன் தனது வீரத்தை அங்கே காட்டட்டும் .” என்று வசிஷ்டர் சொல்லிவிட்டார். காலம் ஓடியது.
சந்தனுவின் மனைவியாக கங்காதேவி முதல் குழந்தையை பெற்றாள் . பிறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு போய் கங்கைநதியில் வீசி எறிந்தாள். அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க அவள் பின்னாலே போன சந்தனுவால் அவள் செய்கையை தடுக்க முடியவில்லை. அவன் கொடுத்த வாக்கு. எதிர்த்தால் பிரிந்து விடுவாளே. ஏழு குழந்தைகள் இவ்வாறு பிறந்ததுமே மறைந்தன. எட்டாவது குழந்தை பிறந்ததும் கங்கை அதை தூக்கிக்கொண்டு கங்கைக்கு செல்லும்போது ”நில்” என்று சந்தனு தடுத்தான். ”கொடு அந்த குழந்தையை” என்று கோபமாக கட்டளையிட் டான். கங்கை கொடுத்தாள். ”சொன்ன வாக்கை மீறி நடந்ததால் நான் இப்போதே உன்னைப் பிரிகிறேன் என்று கங்கை மறைந்தாள். அவள் சாபமும், அஷ்ட வசுக்களில் முதல் ஏழு வசுக்களின் சாபமும் நீங்கியது. கங்கை எட்டாவது குழந்தையை சந்தனுவிடமே கொடுத்துவிட்டு மறைந்தாள். சந்தனு அவனுக்கு தேவவிரதன் என்று பெயரிட்டு வளர்த்தான். . சகல சாஸ்த்ரங்களிலும் தேர்ச்சி பெற்றான். பட்டத்து இளவரசனாக அதிக சக்தி வாய்ந்த க்ஷத்ரியனாக சந்தனுவுக்கு அடுத்த மஹா ராஜாவாக புகழ் சேர்த்தான்.
ஒருநாள் சந்தனு காட்டுக்கு வேட்டையாட போனான். கங்கைக்கரையில் தான் அவனுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் காத்திருக்கும் போல் இருக்கிறது. கங்கையில் மீன் பிடிப்பவர்கள் வசிக்கும் குடிசைக்கு அருகே ஒரு அழகிய மீன்பிடிக்கும் செம்படவ குல பெண்ணைக் கண்டதும் காதல் கொள்கிறான். அவள் பெயர் சத்யவதி. அவளை எப்படியாவது மணக்க ஆசை. அவள் இருந்த இடம் எல்லாம் சுகந்த மணம் வீசியது. இதன் பின் ஒரு குட்டிக்கதை இருக்கிறது.
இந்த சத்யவதியின் மேல் இதற்கு முன்பே காதல் கொண்டு மணந்தவர் பராசர மகரிஷி. சத்யவதிக்கும் பராசர மகரிஷிக்கும் பிறந்தவர் வேத வியாஸர். பின்னர் பராசரர் குழந்தை வியாசரை தன்னோடு அழைத்து அவருக்கு சாஸ்திரங்கள் போதித்தார்.
அப்போதெல்லாம் சத்யவதியின் மேல் மீன் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்ததால் அதை அகற்றி எப்போதும் ஒரு யோஜனை தூரத்துக்கு அவள் உடலிலிருந்து நறுமணம் வீச தனது தவசக்தியால் அவருக்கு முடிந்தது. அவள் பெயர் அதனால் ஆகவே மீன் நாற்றம் கொண்ட மத்ஸ்யகந்தி, என்பதிலிருந்து யோஜன கந்தி , கந்தவதி என்று ஆயிற்று. சுகந்தியானாள் . அந்த மணத்தில் மயங்கியவன் சந்தனு.
சந்தனு தனது பெண் சத்தியவதியை மனைவியாக்கிக் கொள்ள விரும்புவது தெரிந்த அவள் தகப்பன் சில நிபந்தனைகள் போட்டான். அவனுக்கு தெரியும் அடுத்த ராஜா சந்தனுவின் பிள்ளை தேவவிரதன் தான் என்று. அதை தடுத்து தனது பெண்ணுக்கு பிறக்கும் பிள்ளை தான் ராஜாவாக வேண்டும்.இதற்கு ஒப்புக் கொண்டால் கல்யாண மாலை என்று சொல்லிவிட்டான். சந்தனு வருத்தத்தோடு வீடு திரும்பினான், நாளாக நாளாக இளைத்தான். அவன் மனக்குறையை கண்டுபிடித்த தேவவிரதன் அப்பாவை சந்தோஷப்படுத்த சத்யவதி யின் தந்தையை சந்திக்கிறான். அவனது நிபந்தனை யை தான் ஏற்றுக் கொள்வதாக சபதம் செய்கிறான். ”நான் எப்போதும் ராஜாவாக மாட்டேன்.எனக்குப் பிறகு பிறக்கும் என் பிள்ளைகள் ராஜாவாகலாமே என்ற சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் தான் இந்த ஜென்மத் தில் கல்யாணமே பண்ணிக் கொள்ளாத ப்ரம்மச்சாரி யாகவே சாகும் வரை இருப்பேன். இது சத்யம்” என்று சபதம் செய்து கொடுத்து சத்தியவதியை அப்பா சந்தனுவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறான்.
தேவ வ்ரதனின் சபதத்தைக் கேட்டு அதிசயித்த விண்ணுலக தேவர்கள் ”பீஷ்மா பீஷ்மா” என்று ஆர்ப்பரிக் கிறார்கள். இதுவரை எவரும் செய்யாத சபதம் இது. சந்தனு தனது மகனின் தியாகத்தை மெச்சி ஆசிர்வதிக் கிறான்.”மகனே, நான் உனது தந்தை, என்னை மகிழ்விக்க நீ உனது உலக வாழ்வையே, ராஜ்யத்தையே தியாகம் செய்த பீஷ்மன். நான் உனக்கு ஒரு வரம் அளிக்கிறேன். நீ உலகில் எவரும் வெல்ல முடியாத க்ஷத்ரியனாகவே வாழ்வாய். நீ விரும்புகிற நேரத்தில் தான் உன்னை மரணம் தழுவும்”
பீஷ்மன் தான் எடுத்த சபதத்தை இறக்கும் வரை காப்பாற்றினான். ப்ரம்மச்சாரியாகவே வாழ்ந்தான்.
சத்யவதிக்கும் குரு வம்ஸ ராஜா சந்தனுவுக்கும் பிறந்த பிள்ளைகள் சித்ராங்கதன் விசித்ரவீர்யன். . சந்தனு வின் மறைவுக்குப் பிறகு அவர்களை ராஜாவாக்கி பீஷ்மன் அவர்களுக்கு தளபதியாக சேவை புரிந்தான். சித்ராங்கதன் போரில் இளவயதில் மறைய, அடுத்தவன் விசித்திர வீர்யன் குருவம்ச ராஜாவாக பட்டம் ஏற்றான். பீஷ்மன் அவனுக்கு உறுதுணையாக நின்றான். அவனுக்கு அம்பை, அம்பிகை அம்பாலிகை என்ற காசி ராஜன் பெண்களை மணமுடித்து வைக்கிறான். விசித்திர வீர்யனும் குழந்தைகள் இன்றி மறைய, பீஷ்மன் விசித்திர வீர்யன் மனைவி அம்பிகைக்கு பிள்ளைகள் பிறக்க வியாசன் உதவியை நாடுகிறான். அப்படிப்பிறந்த பிள்ளைகள் தான் திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன். மஹா பாரத கதையை மீண்டும் இங்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தெரிந்த விஷயம் ஒன்றை கட்டாயம் சொல்லியே ஆகா வேண்டும். பீஷ்மன் துரியோதனனுக்கு உதவியாக
கடைசிவரை நின்றான். பாண்டு வின் புத்திரர்கள் பாண்ட வர்களுக்கு எதிராக நடந்த யுத்தத்தில் அவர்க ளை துரியோதனன் போரில் ஜெயிக்க கடுமையாக எதிர்த்தான். பாண்டவர்களுக்கு துணையாக கிருஷ் ணன் இருந்த காரணத்தால் துணையால் பீஷ்மன் பாண்டவர்களைக் கொல்ல முடியவில்லை . துரியோத னன் உயிரைக் காப்பாற்றவும் முடியவில்லை. தனது உயிரை தியாகம் செய்து உத்தராயணம் வரை காத்திருந்து மரணத்தை வரவேற்று விண்ணுக்கும் சென்று மீண்டும் அஷ்ட வசுக்களில் எட்டாவது வசு ப்ரபாஸனாகிறான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *