PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை –    நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன  மாலிகா

கேள்வி பதில் ரத்னமாலை 101-115

101. எதெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய  விஷயங்கள்?
ஒருவன் அடையும் புகழ், பெருமை,  ஒருவனுடைய சுய அறிவு, ஸ்வதர்மம்  இதெல்லாம் என்றும் விடாமல்  ஒருவனிடம் இருக்கவேண்டியவை.  

102.  இந்த உலகில்  எதற்கு ஈடாக, விரும்பியதை எல்லாம் தரும் கற்பக கொடி, கல்பலதாவை, ஒப்பிடலாம்?
 தகுதி உடைய  அற்புதமான  சீடனுக்கு ஒரு நல்ல  குரு  உபதேசிக்கும்  ஞானம், கல்வி, பக்தி மார்க்க உபதேசங்கள்   கற்பக கொடி , கல்பலதா எனப்படும்.  ஏனென்றால்   அப்படிப்பட்ட  தேர்ந்தெடுக்கப்பட்டு  ஞானம் பெற்ற சிஷ்யனால் உலகில்  எல்லோருக்கும் அவரவர் விரும்பிய ஞானம் பெற இயலும். 

103.  எது ஸாஸ்வதமான  அக்ஷயவட  விருக்ஷம், அரசமரம்  போன்றது?
 சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடி  ஒரு தகுதியுள்ளவனுக்கு அளிக்கப்படும்  தானம் புண்யம் தர வல்லது.

104. ஒவ்வொருவருக்கும் எது தற்காப்பு ஆயுதம்?
 சாமர்த்தியம், சமயோசிதம். தக்க நேரத்தில் புத்திக்கூர்மையோடு செயல் புரிதல்.

105. எல்லோருக்கும் தாய்  யார்?
ஆஹா  இது தெரியாதா?  பசு  ஒன்று தான்.

106.  எது ஒருவனுக்கு பலம்?
தைர்யம், துணிவுள்ள  மனம்.

107.எது மரணத்துக்கு சமம்?அறிவின்மை, பொறுப்பற்ற  அலக்ஷியம் .

108.. எதை விஷமென்று கருதலாம்?
தீய மனிதர்களை.

109.எது அசௌசம், அசுத்தம் எனலாம்?
பிறரிடம் கடன் படுவதை

110. எது பயத்தை போக்கி தைர்யம் அளிக்கிறது?
உலக சமாச்சாரங்களில் பற்று கொள்ளாமல் இருப்பது.

111. அப்படியென்றால் எது பயம்?
பணத்தை எப்படியாவது  முயன்று சேர்த்து வைத்துக் கொள்வது.

112. மனிதர்கள்  கஷ்டப்பட்டு  அடைய முயற்சிக்காதது  எது?

113. எது பாபம் ?
பிற உயிர்களை ஹிம்ஸை  செய்வது.

114. பகவானுக்கு பிரியமானவன் யார்?
எவன் தனது மனதால்  தானும்   சஞ்சலப்படாமல், பிறருக்கும்   எந்தவித மனா வியாகூலமும் தராமல் இருக்கிறானோ அவனை பகவானுக்கு பிடிக்கும்.

115. ஒருவன் வெற்றி பெற  எது ஆதாரம்?
அவன் செய்யும் விடா முயற்சி, தவம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *