ப்ரத்யக்ஷ உண்மை – நங்கநல்லூர் J K SIVAN
பிரயாணம் பண்ணும்போது ரெண்டு கையிலும் ரெண்டு பெரிய பைகள். இன்னொரு பையோ பெட்டியோ இருந்தால் அதை தலையில் சுமப்பார்கள். தானாக சும்மாடு மேல் அது நிற்க வேண்டும். அதைப் பிடித்துக் கொள்ள கை சும்மா இல்லையே. மேலே சொன்ன இந்த ரெண்டு கையிலும் உள்ள பைகள் ஒரு உபமானம். நமது வாழ்க்கை பிரயாணம் இப்போது நடக்கிறதே அது சுகமாக இருக்கிறதா துன்பம் நிறைந்ததா என்பது இந்த ”பை ”சமாச்சாரம் தான். ஏதோ இந்த பிறவியில் நம்முடைய சாமர்த்தியத்தால், படிப்பால் நாம் நிறைய பணம் சேர்த்து அதனால் சுகமாக இருக்கிறோம் என்று மார் தட்டிக் கொள்வது தப்பு. இல்லாத ஒன்று. முந்தைய பிறவிகளில், முன் ஜென்மங்களில் செய்த நல்லதும் கெட்டதும் தான் அடுத்த பிறவியிலும் தொடர்ந்து அதன் பலனைக் கொடுக்கும். நல்ல கர்மாக்களை, காரியங்களை பண்ணி இருந்தால் இப்போது சுகம். அப்போதே பை நிறைய தீய சமாச்சாரங்கள் அதன் பலன் இருந்தால் நிச்சயம் நமக்கு இப்போது அவஸ்தை. நாம் பண்ணிய காரியங்களை ரெண்டாக பிரித்து வைத்திருக்கிறது. புண்யம் பாபம் என்று அவற்றுக்கு பெயர்.புண்யம் அதிகம் செய்திருந்தால் இப்போது சுகம். பாபத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
பூர்வ கர்ம சமாச்சாரம் எப்படிப் போனாலும் இனிமேலாவது கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக் கொள்வதே முக்கியம். பழையதற்குப் பரிகாரம் தேடுவதைவிட, புதிய சுமை சேராமல், பாபம் பண்ணாமல் வாழ்வதற்கு ஈசுவரனை அணுகிஅவன் துணையைப் பெற வேண்டியது முக்கியம்.
நல்லது நடக்கும்போது நாம் முற்பிறவியில் செய்த நற்காரிய பலன் என்று சந்தோஷப்படும்போது அது பகவான் அனுக்ரஹம் என்று ஏன் நாம் நினைப்பதில்லை?அடிமேல் அடி, துன்பம்,கஷ்டங்கள் வாழ்க்கையில் தினமும் அனுபவிக்கும் போது வந்தபோது மட்டும் ஏனோ பகவான் கண் திறக்கலை, அவர் க்ருபை இல்லை, கருணை இல்லை என்று குறைப்படுகிறோம். அது நம் கர்ம பலன் என்று எத்தனை பேர் மனதாலோ வாயாலோ வெளிப்படுத்துகிறோம்.
இது தவிர ராகு தோஷம், செவ்வாய் தோஷம், சனி தோஷம், கேது தோஷம் என்று பரிகாரம் தேடுகிறோம். நாளென் செயும் , கோள் என் செயும் , நம் வினைதான் என் சேயும், எல்லாம் ஈசன் செயல் என்று மனது பக்குவப்பட வேண்டும். பகவன் நாமாவை மறக்காமல் ஜபித்தால் அது தான் மருந்து, நிவாரணி.
மஹா பெரியவா ஏன் எல்லோரிடமும், ”எப்பவும் ”சிவ சிவா, ராம ராமா, கோவிந்தா,கிருஷ்ணா ” என்று எழுந்திருக்கும்போதும்,உட்காரும்போதும், சாப்பிடும் முன்னாலேயும், படுக்க போகும்போதும் சொல்லிக்கொண்டே இரு”சொன்னார் என்று இப்போது புரியும்.மஹா பெரியவா சதா சர்வகாலமும் பகவத் சிந்தனையிலேயே தியானத்தில் இருப்பவர். அவர் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது, அனுபவமும் மிளிர்கிறது.
Namaskaram mama
Mahaperiyavaa sharanam!