ப்ரம்ம ஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN முதல் அத்யாயம் ஜிஞாசஅதிகரணம். சமன்வய அதிகரணம்
ஸூத்ரங்கள்.
1. ॐ अथातो ब्रह्मजिज्ञासा ॐ ॥ १.१.१॥ அதாதோ ப்ரம்ம ஜிஞாஸா ஓம். ”ஆகவே ப்ரம்மத்தை தேடுவதில் விருப்பம் கொள்” . அப்படியென்றால் இதற்கு முன் உனக்கு கர்மகாண்டம், ஞானகாண்டம் பற்றியெல்லாம் கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இது ஆரம்பிக்கிறது. பிரம்மத்தை தேட கொஞ்சமாவது ஆத்மாவைப் பற்றி ஒருவன் தெரிந்திருக்கவேண்டும். அது யார் என்ன? என்று உள்ளே விசாரம் செய்தால் தான் ப்ரம்ம சூத்ரம் புரிதல் எளிது. எதற்காக ப்ரம்மத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் மற்ற எதுவும் நிரந்தரம் இல்லை, பரிசுத்தம் இல்லை. ப்ரம்மம் ஒன்றே ப்ரம்மானந்தம் தருவது. மோக்ஷம் அளிப்பது. ஜைனர்கள், பௌத்தர்கள், கடவுளை நம்பாத சார்வாகர்கள்,லோகாயதிகர்கள், எதுவேண்டுமானாலும் சொல்லி, திசை திருப்பட்டும். நாம் மனஉறுதியோடு ஆத்ம ஞானத்தை தேடுவோம். ப்ரம்ம ஞானம், அவித்யையை,அஞ்ஞானத்தை அழிக்கும்.
2.ॐ जन्माद्यस्य यतः ॐ ॥ १.१.२॥ ஜன்மத்யஸ்ய யத ஓம் : janmadyasya yatah om ”இந்த உலகத்தின், ப்ரபஞ்சத்தின் உற்பத்தி ஸ்தானம் ப்ரம்மம் ஒன்றே”. அது அறிவுசார்ந்தது, நித்யமானது, ஆனந்தமானது. சுதந்திரமானது. முடிவான சத்யம், உண்மை அது ஒன்று தான் என்று எத்தனையோ ரிஷிகள் தவம்,தியானம் செய்து அனுபவித்து சொல்லியிருக் கிறார்களே . இந்த உலகம், ப்ரபஞ்சத்தின் தோற்றத்துக்கு காரணமே ப்ரம்மம் தான். ஐம்புலன்கள் சம்பந்தம் இல்லாதது. அறியாமையை பொசுக்குவது. சம்சார பந்த முடிச்சுகளில் இருந்து விடுவிப்பது.அதுவே பூரண உள்ளுணர்வு. பிறப்பு இறப்பற்றநிலை.
3. ॐ शास्त्रयोनित्वात् ॐ ॥ १.१.३॥ SASTRAYONITVAT I.1.3 – ஸாஸ்த்ர யோனிதவாத் ஓம் வேத சாஸ்திரங்கள் அனைத்துக்கும் உண்மையான ஞானத்துக்கெல்லாம் ஆதாரமானது ப்ரம்மம். பிரம்மசூத்ரம் அறியாமல் பகவானை அறியமுடியாது. நாம, ரூப ,பேதம் எல்லை அற்றது ப்ரம்மம்.
4. ॐ तत्तुसमन्वयात् ॐ ॥ १.१.४॥ TATTU SAMANVAYAT I.1.4 – ஓம் தத்து ஸமன்வயாத் ஓம்:வேத சாஸ்திரங்கள் தான் ப்ரம்மனை நமக்கு அடையாளம் காட்டுகிறது. எத்தனை விதமான சாஸ்திரங்கள் இருந்தபோதிலும் அவற்றின் முரண்பாடுகளை நீக்கி,உண்மையை மட்டும் ஏற்று, அனைத்தையும் ஒருங்கிணைப்பது ,சமன் செய்வது, ப்ரம்மம் ஒன்றே என்கிறது இந்த ஸூத்ரம் . உதாரணமாக நம் தேஹத்தை, ஜீவாத்மாவைப் பற்றி பல சாஸ்திரங்கள் பலவிதமாக சொன்னாலும் தேஹம் ஆத்மா இல்லை. ஆத்மா தேக சம்பந்தமில்லாமல் தாமரை இலை தண்ணீராக அதோடு இருக்கும் .அதுவே ப்ரம்மம் என்று இந்த ஸூத்திரம் கோடிட்டு காட்டுகிறது. அறிவு,புத்தி, ப்ரம்மம் ஆகாது.
5. ॐ ईक्षतेर्नाशब्दम् ॐ ॥ १.१.५॥ IKSHATERNASABDAM I.1.5 (5) ஓம் ஈக்ஷதேர்நாஸப்தம் ப்ரம்மம் என்பது சப்தத்தால்,பார்ப்பதால், நினைப்பதால் மாத்திரம் அறியப்படும் மூலப்பொருள் ஆகவே ஆகாது.
இதுவரை ஐந்து பிரம்மசூத்ரங்கள் மட்டும் குறிப்பிட்டேன்.இன்னும் 550 இருக்கிறது. ஒரு விஷயம் புரிந்துகொள்ளுங்கள். ப்ரம்ம ஸ்தோத்ரம் எனும் சுருக்கமான தத்துவத்தை பல நூறு பக்கங்களில் விளக்கினாலும் புரியாது. அநேகர் உரைக்கு உரை எழுதி இருக்கிறார்கள். எவரும் அது பற்றி பேசுவதில்லை எழுதுவதில்லை சொல்வதில்லை என்பதிலிருந்தே அதனருகே செல்லவில்லை என்று அறிந்து கொள்ளமுடியும். ப்ரம்ம சூத்ரம் ரொம்ப உச்சாணிக் கிளை. அதை அறிய மனப்பக்குவம் வேண்டும். இது அறிமுகம். கொஞ்சம் கொஞ்சமாக நீங்களே அதன் அர்த்தத்தை பலமுறை யோசித்து புரிந்து கொள்ளவேண்டும். போகப்போக ஆங்காங்கே குறுக்கே நடுவே, சில விளக்கங்கள் கொடுத்துக்கொண்டே வருவேன். அப்போது புரியும்.