வஞ்சுவான்சேரி பிருந்தாவனம் – நங்கநல்லூர் J K SIVAN
வடக்கே பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ பன்கே பிஹாரி கிருஷ்ணன் ஆலயம் தெற்கே நம் சென்னையில் படப்பையில் தென் பிருந்தாவனம் என்று அழைக்கப் படும் ஸ்ரீ பங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன் ஆலயமாக இருக்கிறதே தெரியுமா? ஒரு அழகிய கிராமம். அதன் பெயர் வஞ்சுவாஞ்சேரி. ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில் படப்பை அருகே இருக்கிறது. ated in thபத்து வருஷம் முன்பு 10.12.2014 அன்று குருப்ரியாஜி அம்மா அவர்கள் கும்பாபிஷேகம் செய்வித்து நிர்மாணித்த ஆலயம். ”அம்மா” இப்போது இல்லை, 2021ல் சித்தி அடைந்து விட்டார் என்றாலும் அவரது S.M.S. Charitable Trust இன்றும் நன்றாக இயங்கி வருகிறது. இந்த ஆலயத்தில் கிருஷ்ணன் வடக்கே பிருந்தாவனத்தில் காண்பது
போலவே அருள் பாலிக்கிறார்.
”அம்மா” வுக்கு மஹா பெரியவாளிடம் அதிக பக்தி ஈடுபாடு. பெரியவா மறைந்தபிறகும் அடிக்கடி அம்மாவின் கனவில் வந்து அறிவுரைகள் வழங்குவார்.
” என்னை விட வயதில் பெரியவர்கள் கூட என்னை அம்மா என்று அழைக்கிறார்களே சுவாமி” என்ற குருபிரியா ஜியிடம்
”நீ அம்மா தான் எல்லோருக்கும், அதில் சந்தேகம் என்ன? அம்மாவாகவே இருந்து தொடர்ந்து சேவை செய்”
என்று அங்கீகரித்து ஆசி வழங்கியவர் மஹா பெரியவா.
இன்றும் சூக்ஷ்ம சரீரத்தில் இருந்து கொண்டு அம்மா இந்த ஆலயத்தில் வரும் பக்தர்களுக்கு வாழ்க்கையில் பல நன்மைகள் பெற ஆசிர்வதித்து அருள்கிறார்.
சென்னை பைராகி மட பூஜ்ய ஸ்ரீ தாமோதர மஹந்த் அம்மா வுக்கு ”ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ 1008 பூஜ்யஸ்ரீ” பட்டம் வழங்கினார். இதுவரை நமது பாரத தேசத்தில் இருபது பேர் மட்டுமே இந்த அரிய பட்டம் பெற்றவர்கள். மேலே சொன்ன அம்மாவின் டிரஸ்ட் நிறுவனம் எண்ணற்ற பொதுநல சேவைகளை செய்து கொண்டு வருகிறது. தமிழ் தெரியாத வடக்கத்திய இளம் அர்ச்சகர் அலங்காரம், அர்ச்சனை பராமரிப்பு ஆகியவற்றை கவனித்துக் கொண்டு வருகிறார்.
பன்கே பிஹாரி கிருஷ்ணனின் சில மாய லீலைகள்:
கோவில் தரையில் திடீரென்று ஒருநாள் பால கிருஷ்ணன் முகம் தெரிந்தது. அதை வர்ணம் தீட்டி தனியாக கால் படாமல் கண்ணாடிப் பெட்டியில் காணுமாறு வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.
வாசலில் சிமெண்ட் தரையில் கண்ணனின் மயில் பீலி வடிவம் காண்கிறது.
தானாக கிடைத்த அபூர்வ கல் ஆஞ்சநேயர் ஆக அம்மாவிடம் வந்ததில் ஆச்சர்யம் இல்லை.
இதற்கு முன் இருந்த அர்ச்சகர் சரியாக அர்ச்சனை நைவேத்தியம் செய்யாமல் இருந்ததால் ”அம்மா எனக்கு பசிக்கிறது” என்று கிருஷ்ணன் கேட்டு அந்த அர்ச்சகர் அம்மாவால் நீக்கப்பட்டு புதிதாக இப்போதுள்ள அர்ச்சுகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தையல் கலை அறியாத ஒரு பெண் தானாகவே கிருஷ்ணனின் ஆடைகளைத் தைத்து வழங்குகிறார். அந்த பெண்ணை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். ஆஹா எவ்வளவு அழகாக கிருஷ்ணன் பஜனை பாடுகிறார் அவர்!
மஹா பெரியவா அணிந்திருந்த ஒரு பாதுகை இங்கு கவசமிடப்பட்டு 12.12.23 அன்று இந்த ஆலயத்தில் ஸ்தாபிக்கப்படுகிறது.
அதி அற்புதமாக கல்யாண வெங்கடேசன் திருப்பதி யிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு வந்து நிற்பது போல் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார். ஒரு ஆச்சர்யம் என்ன வென்றால் இங்கே ஜருகண்டி என்று தள்ள ஆள் தேவையில்லை, ஏனென்றால் எத்தனை பக்தர்களுக்கு அவன் இங்கே நிற்பது தெரியும்?10.12.23 அன்று இந்த ஆலயத்தின் 10வது வருஷ நிறைவை மனதில் கொண்டு சில பக்தர்கள் கூடி கிருஷ்ணபஜனை ஆரத்தி நிகழ்த்தினார்கள் .
சில நண்பர்கள் என்னை அழைத்தார்கள். அடியேனுக்கு முதன் முதலாக இந்த ஆலயத்தை தரிசிக்கவும் மனமார ஒரு மணி நேரத்துக்கு கிருஷ்ணனின் அற்புதங்களை பேசவும் பாடவும் வாய்ப்பளித்தார்கள். மறக்கமுடியாத அனுபவம். கிருஷ்ணனின் அபிஷேக தீர்த்தம் அனைவர் மேலும் அபிஷேகம் செய்யும் சங்கு மூலம் தெளிக்கப்பட்டது. பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு இந்த ஆலயம் ஒரு அருள் விருந்து. அமைதியான க்ராம சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தை அறியாதவர்கள் அவசியம் சென்று தரிசித்து பன்கே பிஹாரி ஆசி பெறவேண்டும். பிருந்தாவன் சென்று ராதா கிருஷ்ணனை தரிசிக்க முடியாதவர்களுக்கு வஞ்சுவாஞ்சேரி பன்கே பிஹாரி கிருஷ்ணன் ஆலயம் ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகம் இல்லை.
DAKSHINA BANKE BIHARI KRISHNAN J K SIVAN
வஞ்சுவான்சேரி பிருந்தாவனம் – நங்கநல்லூர் J K SIVAN
வடக்கே பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ பன்கே பிஹாரி கிருஷ்ணன் ஆலயம் தெற்கே நம் சென்னையில் படப்பையில் தென் பிருந்தாவனம் என்று அழைக்கப் படும் ஸ்ரீ பங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன் ஆலயமாக இருக்கிறதே தெரியுமா? ஒரு அழகிய கிராமம். அதன் பெயர் வஞ்சுவாஞ்சேரி. ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில் படப்பை அருகே இருக்கிறது. ated in thபத்து வருஷம் முன்பு 10.12.2014 அன்று குருப்ரியாஜி அம்மா அவர்கள் கும்பாபிஷேகம் செய்வித்து நிர்மாணித்த ஆலயம். ”அம்மா” இப்போது இல்லை, 2021ல் சித்தி அடைந்து விட்டார் என்றாலும் அவரது S.M.S. Charitable Trust இன்றும் நன்றாக இயங்கி வருகிறது. இந்த ஆலயத்தில் கிருஷ்ணன் வடக்கே பிருந்தாவனத்தில் காண்பது
போலவே அருள் பாலிக்கிறார்.
”அம்மா” வுக்கு மஹா பெரியவாளிடம் அதிக பக்தி ஈடுபாடு. பெரியவா மறைந்தபிறகும் அடிக்கடி அம்மாவின் கனவில் வந்து அறிவுரைகள் வழங்குவார்.
” என்னை விட வயதில் பெரியவர்கள் கூட என்னை அம்மா என்று அழைக்கிறார்களே சுவாமி” என்ற குருபிரியா ஜியிடம்
”நீ அம்மா தான் எல்லோருக்கும், அதில் சந்தேகம் என்ன? அம்மாவாகவே இருந்து தொடர்ந்து சேவை செய்”
என்று அங்கீகரித்து ஆசி வழங்கியவர் மஹா பெரியவா.
இன்றும் சூக்ஷ்ம சரீரத்தில் இருந்து கொண்டு அம்மா இந்த ஆலயத்தில் வரும் பக்தர்களுக்கு வாழ்க்கையில் பல நன்மைகள் பெற ஆசிர்வதித்து அருள்கிறார்.
சென்னை பைராகி மட பூஜ்ய ஸ்ரீ தாமோதர மஹந்த் அம்மா வுக்கு ”ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ 1008 பூஜ்யஸ்ரீ” பட்டம் வழங்கினார். இதுவரை நமது பாரத தேசத்தில் இருபது பேர் மட்டுமே இந்த அரிய பட்டம் பெற்றவர்கள். மேலே சொன்ன அம்மாவின் டிரஸ்ட் நிறுவனம் எண்ணற்ற பொதுநல சேவைகளை செய்து கொண்டு வருகிறது. தமிழ் தெரியாத வடக்கத்திய இளம் அர்ச்சகர் அலங்காரம், அர்ச்சனை பராமரிப்பு ஆகியவற்றை கவனித்துக் கொண்டு வருகிறார்.
பன்கே பிஹாரி கிருஷ்ணனின் சில மாய லீலைகள்:
கோவில் தரையில் திடீரென்று ஒருநாள் பால கிருஷ்ணன் முகம் தெரிந்தது. அதை வர்ணம் தீட்டி தனியாக கால் படாமல் கண்ணாடிப் பெட்டியில் காணுமாறு வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.
வாசலில் சிமெண்ட் தரையில் கண்ணனின் மயில் பீலி வடிவம் காண்கிறது.
தானாக கிடைத்த அபூர்வ கல் ஆஞ்சநேயர் ஆக அம்மாவிடம் வந்ததில் ஆச்சர்யம் இல்லை.
இதற்கு முன் இருந்த அர்ச்சகர் சரியாக அர்ச்சனை நைவேத்தியம் செய்யாமல் இருந்ததால் ”அம்மா எனக்கு பசிக்கிறது” என்று கிருஷ்ணன் கேட்டு அந்த அர்ச்சகர் அம்மாவால் நீக்கப்பட்டு புதிதாக இப்போதுள்ள அர்ச்சுகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தையல் கலை அறியாத ஒரு பெண் தானாகவே கிருஷ்ணனின் ஆடைகளைத் தைத்து வழங்குகிறார். அந்த பெண்ணை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். ஆஹா எவ்வளவு அழகாக கிருஷ்ணன் பஜனை பாடுகிறார் அவர்!
மஹா பெரியவா அணிந்திருந்த ஒரு பாதுகை இங்கு கவசமிடப்பட்டு 12.12.23 அன்று இந்த ஆலயத்தில் ஸ்தாபிக்கப்படுகிறது.
அதி அற்புதமாக கல்யாண வெங்கடேசன் திருப்பதி யிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு வந்து நிற்பது போல் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார். ஒரு ஆச்சர்யம் என்ன வென்றால் இங்கே ஜருகண்டி என்று தள்ள ஆள் தேவையில்லை, ஏனென்றால் எத்தனை பக்தர்களுக்கு அவன் இங்கே நிற்பது தெரியும்?10.12.23 அன்று இந்த ஆலயத்தின் 10வது வருஷ நிறைவை மனதில் கொண்டு சில பக்தர்கள் கூடி கிருஷ்ணபஜனை ஆரத்தி நிகழ்த்தினார்கள் .
சில நண்பர்கள் என்னை அழைத்தார்கள். அடியேனுக்கு முதன் முதலாக இந்த ஆலயத்தை தரிசிக்கவும் மனமார ஒரு மணி நேரத்துக்கு கிருஷ்ணனின் அற்புதங்களை பேசவும் பாடவும் வாய்ப்பளித்தார்கள். மறக்கமுடியாத அனுபவம். கிருஷ்ணனின் அபிஷேக தீர்த்தம் அனைவர் மேலும் அபிஷேகம் செய்யும் சங்கு மூலம் தெளிக்கப்பட்டது. பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு இந்த ஆலயம் ஒரு அருள் விருந்து. அமைதியான க்ராம சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தை அறியாதவர்கள் அவசியம் சென்று தரிசித்து பன்கே பிஹாரி ஆசி பெறவேண்டும். பிருந்தாவன் சென்று ராதா கிருஷ்ணனை தரிசிக்க முடியாதவர்களுக்கு வஞ்சுவாஞ்சேரி பன்கே பிஹாரி கிருஷ்ணன் ஆலயம் ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகம் இல்லை.