SOUNDARYA LAHARI 17/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 17/103 – நங்கநல்லூர் J K SIVAN

17. வாக் தேவி அருள்

सवित्रीभिर्वाचां शशिमणिशिलाभङ्गरुचिभिः वशिन्याद्याभिस्त्वां सह जननि संचिन्तयति यः ।
स कर्ता काव्यानां भवति महतां भङ्गिरुचिभिः वचोभिर्वाग्देवीवदनकमलामोदमधुरैः ॥ १७॥

savitrībhirvāchāṃ śaśimaṇiśilābhaṅgaruchibhiḥ vaśinyādyābhistvāṃ saha janani sañchintayati yaḥ ।
sa kartā kāvyānāṃ bhavati mahatāṃ bhaṅgiruchibhiḥ vachōbhirvāgdēvīvadanakamalāmōdamadhuraiḥ ॥ 17 ॥

ஸவித்ரீபிர் வாசாம் சஶிமணி ஶிலாபங்க ருசிபிர் வஶிந்யாத்யாபிஸ் த்வாம் ஸஹஜனனிஸஞ்சிந்தயதி ய:
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்க ருசிபிர் வசோபிர் வாக்தேவீ வதன கமலாமோத மதுரை: lali

லலிதாம்பாளை சூழ்ந்து எட்டு வாக் தேவிகள் உண்டு. அவர்கள் தான் லலிதா ஸஹஸ்ரநாமம் இயற்றியவர்கள். அம்பாளை தூதுக்கும்போது வாக்தேவிகளையும் துதிக்கிறோம். ஸ்ரீ சக்ர ஆவாரணங்களில் அவர்கள் ஏழாவது சக்ரத்தை சேர்ந்தவர்கள். சமஸ்க்ரித 51 அக்ஷரங்களில் வாஸினி வாக்தேவி 16 அக்ஷரங்களின் அதிபதி. காமேஸ்வரி வாக் தேவி ”க” வர்கத்தை சேர்ந்த உயிரெழுத்துக்களுக்கு தலைவி. அதேபோல் மோதினி வாக் தேவி ”ச ” வர்க்கத்துக்கும், விமலா வாக்தேவி ”ட”வர்க்கத்துக்கும், அருணா வாக்தேவி ”த ” வர்க்கத்துக்கும் ஜயினி வாக்தேவி ”ப ” வர்க்கத்துக்கும், ஸர்வேஸ்வரி வாக்தேவி ”ய , ர , ல,வ ” வர்க்கத்துக்கும், கௌலினி வாக்தேவி ”śa, ṣa, sa, ha, ḻa and kṣa (श, ष, स, ह, ळ and क्ष).” வர்க்கத்துக்கும் அதிபதி. ஒவ்வொரு வர்க்கத்துக்கும் 5 எழுத்துக்கள், சிலதுக்கு 10 அக்ஷரங்கள். மொத்தத்தில் 51 அக்ஷரங்கள் கொண்டது சமஸ்க்ரித பாஷை. அம்பாளை அதனால் தான் ‘மாத்ருகா வர்ண ரூபிணி’, என்றும் ‘பஞ்சா சத் பீ த ரூபிணி’ என்றும் நாமங்களில் துதிக்கிறோம். போற்றுகிறோம். எட்டு வாக்தேவிகளுக்கும் ‘வாஸின்யாதி’ வாக்தேவிகள் என்று பெயர். பராசக்தியோடு ரொம்ப நெருக்கமானவர்கள். ஆதிசங்கரர் அதனால் தான் அம்பாளோடு அவர்களையும் ஸ்தோத்ரம் பண்ணவேண்டும் என்கிறார்.

நாம் எதை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கிறோமோ நாம் அதாகி விடுவோம். அம்பாள் மோக்ஷதாயினி, முக்தி தருபவள். அவளிடம் எனக்கு வீடு கொடு, கார் கொடு, சைக்கிள் கொடு என்று கேட்கக்கூடாது. அம்பாளையே தியானம் செய்பவன் அம்பாளோடு இணைகிறான்.

இந்த ஸ்லோகத்தில் அந்த வாக்தேவிகள் சந்திரகாந்தக் கல்லைப் பட்டை தீர்த்து செதுக்கியது போல் மின்னுபவர்கள் என்கிறார். அம்பாளையும் வாக்தேவிகளையும் துதிப்பவன் பாக்கியசாலி காளிதாசன், காளமேகம், பாரதியார் போல் காவிய கர்த்தாவாகிவிடுவான், ஸரஸ்வதி அருள்பெற்று பிரகாசிப்பான். ஆதிசங்கரரே ஒரு சிறந்த உதாரணம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *