நன்றிக்கடன் – நங்கநல்லூர் J K SIVAN
மஹாளய பக்ஷ தர்ப்பணம்,
இந்த 15 நாட்களும் முன்னோர்க்கு நமது கடமை நன்றியை தெரிவித்துக்கொள்ள நல்ல சுந்தர்ப்பம். மஹாளய அமாவாசையோடு முடிவடைகிறது.அதைப்பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன்.
யாராவது வீட்டுக்கு வந்தால், நாம் கூப்பிட்டால், வரவழைத்தால்,என்ன செய்கிறோம்? மரியாதையோடு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நாம் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக் கிறோம். அதுபோல் தான் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மைத் தேடி வரும், நாம் வரவேற்கும் முன்னோர்களுக்கு இந்த மஹாளய பக்ஷ 15 நாட்களில் திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுகிறோம். இதனால் நம் வாழ்க்கை யும், சந்ததியும் விருத்தியடையும் என்பது காலம் காலமாக நாம் நம்புவது. நம் முன்னோர்கள் பரம்பரையாக செய்து நமக்கும் பழக்கப்படுத்திய வழக்கம்.
இறந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். இந்தியாவில் இருந்து வந்தவர்கள் இந்தியர்கள் போல பித்ரு லோகத்திலிருந்து வந்தவர்கள் பித்ருக்கள். அவர்கள் சரீர மற்றவர்கள், உணவு உடை தேவைப்படாதவர்கள், பேசாதவர்கள், அவர்களுக்கு நாம் அளிப்பது எள்ளும் நீரும் தான். அவர்களின் நினைவால் மற்றவர்களுக்கு உணவளிக்கிறோம். இதை அறிந்து உணர்ந்து அவர்கள் நம்மீது எப்போதும் கொண்ட பாசத்தோடு வாழ்த்தி ஆசி வழங்குகிறார்கள். இது அவசியமில்லையா? பித்ருக்கள் சாபம் பொல்லாதது என்கிறோம். என்ன காரணம்?
நாம் உதவியர்கள், நம்மிடம் பலன் பெற்றவர்கள் நம்மால் உருவானவர்கள், வளர்ந்தவர்கள், நம்மை உதாசீனப்படுத்தினால், நம்மை அலக்ஷியப் படுத்தினால், நமக்கு உள்ளம் கொதிக்கிறது. கோபம் மூக்குக்கு மேல் வரவில் லையா? இந்த மஹாளய பக்ஷம் எப்போது வரும் என்று காத்திருந்து பித்ருலோக அதிகாரி களிடம் அனுமதி பெற்று நம்மைத் தேடி ஓடோடி வரும் முன்னோர்கள் வீடு தேடி வந்தவர்களை நாம் மதிக்கா விட்டால், வா என்று அழைத்து நீரும் எள்ளும் கூட கொடுக்கா விட்டால் எவ்வளவு மனம் வருந்துவார்கள். உள்ளம் உடைந்து நீ உருப்படமாட்டே, நாசமாகத்தான் போவாய் என்று நாம் சொல்வதை அவர்கள் சொன்னால் அதை சாபம் என்று சொல்லலாமா? நாம் மற்றவரை அப்படிச் சொன்னால் அது சாப மில் லையா? நமது முன்னோர்களும் நம்மைப் போன்றவர்கள் தானே, அவர்கள் அவ்வாறு நினைப்பதில் சொல்வதில் என்ன தப்பு? அது தான் பித்ரு தோஷம். ரொம்ப சக்தி வாய்ந்தது. பல குடும்பங்கள் எவ்வளவு தான் உலகத்தில் செல்வம் வசதிகள் படைத்து இருந்தாலும் மன நிம்மதி இன்றி கஷ்டப்படுவதன் காரணம்.
பித்ருக்களின் ஆசி பெறவும், பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள, மகாளய பக்ஷ காலத்தில், பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப் பது அவசியமாகிறது. வருஷத்தில் ஒருநாள், பதினைந்துநாள் ஒரு மணிநேரம் செலவழிக்கக் கூடவா முடியாது?
பித்ரு லோகத்திலிருந்து முன்னோர்கள் அவரக்ளுக்கு விருப்பமான தமது வாரிசுகள் வீடுகளுக்கு சென்று வர இந்த மஹாளய பக்ஷத்தில் அனுமதிக்கப்படுவதால் நம்மைத் தேடி ஆசை ஆசையாக ஓடிவருவார்கள். நம் வீடு தானே அவர்களும் வளர்ந்து வாழ்ந்த வீடுகள், குடும்பம். அதனால் தான் மஹாளய பக்ஷத்தில் அவர்கள் நம் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பார்கள் என நம்பிக்கை.
மஹாளய பக்ஷ பித்ரு தர்ப்பணம் பண்ணினவனின் விருப்பங்கள் பெரியோர் ஆசியால் நிறைவேறும்.
கால சர்ப்ப தோஷங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருப்பான். குடும்பம் சுபிக்ஷமாக இருக்கும்.
தர்ப்பைப் புல் புனிதமானது. மஹா விஷ்ணுவாக கருதப்படுவது. அதில் தான் வீட்டுக்கு வரும் பித்ருக்களை ஆவாஹனம் செய்து வணங்கி எள்ளும் நீரும் இறைக்கிறோம். ஸ்ராத்த நாளில் தர்ப்பை மேல் பிண்ட பிரதானம் செய்கிறோம்.
மஹாளய பக்ஷத்தில் இதர உறவினர்கள், வர்கத்தவர் அத்தனை பேர்களுடைய பேரையும் உறவையும் சொல்லி வணங்குகிறோம். காருணீக பித்ருக்கள் அவர்கள். திருப்தி அடை ,திருப்தி அடை ,திருப்திஅடை ”த்ரிப்தியதா” என்று 3 தடவை சொல்கிறோம்.
வீட்டில் வளர்ந்த நாய் பூனை ஆடு மாடு கூட இறந்தபின் அடுத்த பிறவியில் அமைதியோடு திருப்தியாக நிம்மதியாக இருக்க, ஆசையாக, பாசமாக, மனதில் நினைத்து வேண்டிக் கொள்வதுமுண்டு. ஆத்மா ஒன்றே தான். அதற்கு உடல்கள் தான் வெவ்வேறு, பெயர்கள் அடையாளம் தான் வெவ்வேறு. கர்மா வினைப்பயனால் அடைவது அந்தந்த உடம்பு.
இன்னொரு விஷயம். பாற்கடலை தேவர்களும் ராக்ஷஸர்களை கடைந்தபோது ராக்ஷசர்களால் பல தேவர்கள் ரிஷிகள் மாண்டார்கள். அவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது மஹாளயம் என்று சொல்வதுண்டு. அவர்களை முன்னோர்களாக தர்ப்பணம் செய்கிறோம். தேவரிஷி கணங்கள், அந்த ரிஷிகளின் பத்னிகளுக்கும் நாம் தர்ப்பணம் செய்கிறோம். இதில் நவக்கிரஹங்கள் , அஷ்டதிக் பாலகர்கள், சகல தேவர்களும் சேர்த்தி. மஹாளய பக்ஷத்தில் தான் பாற்கடல் கடையப்பட்டது.
ஐந்து ஆறு பிராமணர்களை முன்னோர்கள், தேவதைகளாக, மஹா விஷ்ணுவாக பாவித்து தர்ப்பண மந்திரங்கள் சொல்லி அவர்கள் ஆசி பெற்று, அவர்களுக்கு தக்ஷிணை தாம்பூலம், நமஸ்காரம் பண்ணுகிறோம். மேலே சொன்ன ஐந்து ஆறு பிராமணர்கள் யாருடைய பிரதிநிதிகள் தெரியுமா?
விஷ்வே தேவா எனும் தேவதைகள் நமது பித்ருக்களை அவர்களுடன் பூமிக்கு அழைத்து வருகிறார்கள்.
2. தந்தை வழி ( 3 தலைமுறை)
3. தாய் வழி ( 3 தலைமுறை)
4. தாயின் தாய் மற்றும் தந்தையர் வழி ( 3+3 தலைமுறை)
5. காருணிக பித்ருக்கள் (நெருங்கிய உறவினர்கள்)
6. மஹா விஷ்ணு ( ஷ்ராத்தத்தை பாதுகாப்பவர்)
இந்த மஹாளய நேரத்தில் ப்ராஹ்மணர்கள் கிடைக்காத காரணத்தினால் மஹாவிஷ்ணுக்கு பதிலாக விஷ்ணு பாதம்/ஷாலிக்ராமம் அல்லது கூர்ச்சம் வைக்கிறார்கள்.
கருணீக பித்ருக்கள் யார்? இறந்துபோன உங்கள் தந்தை மற்றும் தாய் வழி உறவினர்கள் – மாமா, தந்தை , தாய் சகோதரர்கள், சகோதரிகள், ஆகியோர்.