மஹா பெரியவாளும் காக்காவும் — நங்கநல்லூர் J K SIVAN
என் வீட்டில் ஒரு மாமரம் கிழக்கு காம்பௌண்ட் சுவர் பக்கம் வளர்ந்திருக்கிறது. அதில் எண்ணற்ற பறவை கள் குடும்பங்கள். மரத்தில் உருவாகும் மாம்பழங்கள் அணில்களுக்கும் பறவைகளுக்கும் தான். தானாக நிறைய பழங்கள் கீழே விழும். பக்கத்தில் உள்ள பார்க்கில் குழந்தைகள் பெரியவர்கள் எடுத்துக் கொள்ள விட்டுவிடுவோம்.
சமீப மழையின் போது ஒரு காக்கைக் குஞ்சு பறக்க முடியாத நிலையில் அவசரப்பட்டோ, அல்லது விதி வசத் தாலோ மரத்திலிருந்து கீழே எங்கள் காம்பௌண்ட் சுவர் பக்கம் விழுந்து விட்டது. அதால் பறக்க முடியவில் லை. தாயோ தந்தையோ மற்ற உறவுகளோ அநேக காக்கைகளின் இடைவிடாத ‘கா கா” சப்தம். அந்த பக்கம் போனாலே தலையை சீவுகிறது போல் காலால் இடித்து விடுகிறது. எப்படியோ அந்த குஞ்சை ஒரு பூந்தொட்டியில் வைத்து சில ரொட்டித்துண்டுகள், சாற்று பருக்கைகளை, ஒரு டப்பாமூடியில் குடிக்க நீர் வைத்தும் அதற்கு குடிக்கவோ சாப்பிடவோ தெரியாத அம்மாவால் வாயோடு வாய் ஊட்டி விடப்பட்டு வளரும் குஞ்சு. முடிந்தவரை பூனைகள் நாய்கள் சுவர் பக்கம் வராமல் காவல் காத்தேன்.
காக்கை ஒரு அழகிய பறவை. புத்திசாலி பறவை. கருப்பான நிறம். அது அழகில்லை என்று பலர் சொன்னாலும் அதன் அழகை கருமைநிற கண்ண னாக பாடுவோர் எண்ணற்ற புலவர்களும் பக்தர் களும். காக்கையின் கருப்பு நிறத்தில் அந்த கிருஷ்ணனை காண்பதாக பாரதியார் பாடியிருக் கிறாரே ஞாபகம் வருகிறதா. காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரியநிறம் கண்டேனடா நந்த லாலா. அருமையான குரல் படைத்த ஜேசுதாஸ் இந்த பாடலை பாடியதை கேட்காதவர்கள் செவி என்ன செவியோ!!கருப்பு தான் எனக்கும் பிடிச்ச கலரு என்ற பாட்டை பலர் முணு மூனுப்பது தெரியும்.
தீபாவளிக்கும் பெரியவாளுக்கும் ரொம்ப நெருங்கிய சம்பந்தம் என்றே சொல்லலாம்.
தீபாவளி பொழுது விடியலில் கொண்டாடுகிறோம். வாழ்க்கை நன்றாக விடிய கொண்டாடுகிறோம்.
தீபாவளி சந்தோஷம் தரும் ஒரு பண்டிகை. பெரியவாளின் நினைப்பே குதூகலத்தை உண்டாக்கும் ஒரு செயல்.
தீபாவளிக்கு புதுசு நம் மேலே ஏறிக்கொள்கிறது. பெரியவாளின் எண்ணமே நம் உள்ளத்தை புதுசு பண்ணிடிவிடுகிறது.
தீபாவளிக்கு படார் படார் பட்டாசு உண்டு. பெரியவாளிடம் படார் படார் என்று புதுப் புது அர்த்தங்கள், விவரங்கள் நமக்கு கிடைக்கும்.
தீபாவளி என்றாலே வண்ண வண்ண ஒளி. பெரியவா படமே நமக்கு ஆன்ம ஒளி தரும் ஒரு சாதனம்.
தீபாவளி இனிப்பு ரொம்ப தின்றால் திகட்டும். பெரியவா உபதேசங்கள் எவ்வளவு நாம் கேட்டாலும் இனிக்கும் ஆனால் திகட்டாது
ஒருநாள் மடத்தில் பெரியவாளிடம் ஒரு பக்தை ரொம்ப ஆதங்கத்தோடு ஒரு கேள்வி கேட்டாள் ;
“இந்த காக்காயோட உபத்ரவம் ரொம்ப தாங்கலே பெரியவா! தெருவுல போறச்சே கூட எங்கேர்ந்தோ வந்து தலை மேல உக்காந்துக்கறது… என்னிக்கோ ஒரு நாள் தான் இப்டி நடக்கறதுன்னு இல்லே.. தெனோமும் இப்டியே நடக்கறது; ரொம்ப வேதனையா இருக்கு… பெரியவாதான் எனக்கு ஒரு வழி சொல்லணும். கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு இருக்கா… ரெண்டு பசங்கள் படிச்சிண்டிருக்கா. .. அனாதைகளா போயிடுமோ..ன்னு கவலையா இருக்கு”
“காக்காய்க்கு தெனோமும் சாதம் போடு !… தெனோமும் வீட்டிலே பூஜை அறையில் நல்லெண்ணெய் விளக்கு ஏத்தி வை! சனிக்கிழமை யன்னிக்கு சிவன் கோவிலுக்குப் போய் ஸ்வாமி தர்சனம் பண்ணு !.”
ப்ரஸாதம் வாங்கிக்கொண்டு நிம்மதியாக சென்றாள் அந்த பக்தை. பெரியவா அருகே இருந்த மடத்து பாரிஷதர்களிடம் சொன்னார்..
“நம்ம மடத்துக்கு, யானை,பசு, பூனை, நாய், பெருச்சாளி, எலி, குருவி, கொரங்குன்னு எல்லா ப்ராணிகளும் வருது… ஆனா, காக்கா மட்டும் வரதேயில்லை! கவனிச்சேளோ ?”
“பெரியவா சாக்ஷாத் பரமேஸ்வரனாச்சே! அதுனால சனீஸ்வரனுக்கு மடத்துக்குள்ள நொழையக்கூட பயம்! அதான் தன்னோட வாஹனத்தை கூட அனுப்பறதில்லே !”….என்று கற்பனை வளத்தோடு பதில் சொன்னார் ஒரு பாரிஷதர். மமஹா பெரியவா புன்முறுவல் பூத்தார்.
“நம்ம அஹங்கள்ள காக்காய்க்கு சாதம் போடறச்சே, “காக்காய், காக்காய்..ன்னோ காகம் காகம்..வா!வா! ..ன்னோ கூப்டறதில்லே! கா….கா..ன்னுதானே சொல்றா?… அப்டீன்னா என்ன அர்த்தம்?”
“காக்கா…சாப்ட வா!..ன்னு அர்த்தம்” என்றார் ஒரு பாரிஷதர்.
“அதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே! கா…..கா…..ன்னா, காப்பாத்து! காப்பாத்து..ன்னு அர்த்தம்.
நம்ம பித்ருக்கள் எல்லாருமே காக்கா ஸ்வரூபமா வர்றதா ஐதீகம்! கா….கா……ன்னா, பித்ருக்களே! எங்களை ரக்ஷியுங்கோ!..ன்னு அர்த்தம் சொல்லலா மோல்லியோ? அதுமட்டுமில்லே…பகவான் எல்லா ஜந்துக்கள்கிட்டயும் ஆத்மாவா இருக்கான். காக்கா
ய்க்குள்ளேயும் இருக்கத்தானே செய்வான்? பகவானுக்கு நைவேத்யம் பண்ணறச்சே… அவன் சாப்டறதை நம்மளால பாக்க முடியலே! அவனே காக்காயா வந்து, நாம போடற சாதத்தை சாப்பிடறச்சே, நம்மளால பாக்க முடியறது. ஏதோ ஒரு ஜீவன், வினைப்பயனா,காக்காயா பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு காக்கா ரூபம்.நம்ம ஸரீரத்துக்குள்ள இருக்கற ஆத்மாவுக்கு, ஸ்வரூபம்தான் வேறே! ரெண்டும் ஒன்னு தானே. அதுக்கு சாதம் போடறோம்! திருப்தி அடையறது . அதைப்பார்த்து நம்ம ஜீவன் திருப்தி அடையறது . ரெண்டும் ஒண்ணு இல்லையா. இது அத்வைதம்தானே?”
அத்வைதம் இத்தனை எளிதா? அத்வைதம் ஆஸ்ரமங் களில் மட்டும் இல்லை, அடுப்பங்கரையிலும் இருக்கிறதா! அதைத்தான் மஹாகவி “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று நம் பித்ருக்களை நினைத்து மனதார பாடி இருப்பாரோ ?