ஆத்தி சூடி – நங்கநல்லூர் J K SIVAN
ஒளவையார்
11 முதல் 1 8வரை
எனக்கு ரொம்ப ரொம்ப கெட்டிக்கார பாட்டி ஒளவையாரை. என்ன அறிவு. ஞானம், தெள்ள தெளிவான தமிழ் வார்த்தைகள். தங்கம் வைரம் வைடூர்யம் போன்ற வார்த்தைகள். காலத்தால் அழியாத கருவூலம் ஒளவையார் பாடல்கள்.
அவள் எளிமையானவள். இளம் வயதிலேயே வயோதிகத்தைக் கேட்டு வாங்கி கொண்டவள் என்பார்கள். கூழுக்கு கவிதை பாடியவள். கம்பன் காசுக்கு பாடியவன்.
ஆத்தி சூடியில் அடுத்து சில பாடல்களை அனுபவிப்போம்.
11. ஓதுவது ஒழியேல் –
கல்விக்கு அளவு கிடையாது. எவ்வளவு கற்றாலும் நாம் கற்றது கைம்மண்ணளவு தான் அதுவே ஜாஸ்தி என்று பாட்டி சொல்வாள். என் பாட்டி இல்லை. நம்ப பட்டி. அதான் ஒளவைபாட்டி. நல்ல நூல்களை எப்பொழுதும் தேடிப்பிடித்துப் படித்துக்கொண்டிருக்க வேண்டும். நான் 84+ல் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன். எக் ஸ்ட்ராவாக நான் புரிந்து கொண்டவரை உங்களுக்கும் பரிமாறுகிறேன்.
12. ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே. ரொம்ப முக்கியம் இது. பொறாமையால் எந்த பயனுமில்லை. ஆசிட் ACID ப்ராப்ளம் தான் வரும். வெள்ளைக்கோட்டுக்கு வருமானம்.
13.அஃகஞ் சுருக்கேல்-
இது முக்யமாக நம்மைக் காட்டிலும் ரேஷன் கடை மளிகைக்கடை மற்றும் அளந்து தரும் வியாபாரி களுக்கு பாட்டி சொன்னது. அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே. ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோரும் கம்பிளைன்ட் செய்கிறோம் அளவு கம்மி என்று.என்ன செய்வது. மனசாட்சியை எல்லோரும் மறைக்கிறார்கள். மறக்கிறார்கள் .
14.கண்டொன்று சொல்லேல்-.
கோர்ட்டில் கூட பொய் சாக்ஷி கீதை புத்தகத்தின் மேல் அடித்து சொல்கிறதை சினிமாவில் காட்டும்போது நேரில் நடப்பதை யென்ன வென்று சொல்வது. இந்தியாவில் எத்தனை கேஸ்கள் இன்னும் முடிவு காணமுடியாமல் நீதிமன்றத்தை நிரப்பி பொங்கி வழிகிறது. ஏன். நேர்மை, நியாயம் தனி மனித னுக்கு இல்லை. பள்ளிக்கூடத்தில் ஒளவையாரை படிக்க விடவில்லை எனது முக்கிய காரணம். இளம் வயதில்லேயே நேர்மை உண்மை பேசுவது என்று பழக்கி விட்டால் பின்னால் எவ்வளவோ குற்றங்கள் குறையலாமே .
15. ஙப் போல் வளை -.
‘ங’ என்னும் எழுத்தானது மாதிரி உடம்பும் வளையவேண்டும். நம்மைச் சார்ந்தவர்களால் நமக்கு என்ன பயன் என்று சுயநலம் பாராமல் அவர்களுக்கு உதவவேண்டும். “ங” என்ற எழுத்தை உற்று பாருங்க ளேன். ஒருத்தர் தலையை குனிந்து வணங்கி ரெண்டு கரம் குவிப்பது போல் தோன்றுகிறது எனக்கு. உங்களுக்கும் அப்படி தோன்றினால் ஒளவை வாயில் சர்க்கரை போடலாம். பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்ற ஔவைப்பாட்டியின் உபதேசம் மனதில் நிலைக்கும்.
16.சனி நீராடு -.
இன்றைக்கு சனிக்கிழமை .ஒவ்வொரு சனிக்கிழ மையும் எங்களையெல்லாம் கிணற்றடியில் உட்கார்த்தி வைத்து அம்மா நல்லெண்ணையை இலுப்பை கரண்டியில் மிளகாய்ப் பழம் போட்டு காய்ச்சி தலையில் படபடவென்று தட்டி பரக்க பரக்க சூடு வர தேய்ப்பாள் . ஒரு மணி நேரம் ஊற விடுவாள். அப்புறம் சுகமான வெந்நீரில் சீயக்காய் தலையில் தேய்த்து குளிப்பாட்டி விடுவாள். நல்ல பழக்கங்கள் காலத்தால் விழுங்கப்பட்டுவிட்டன. ஒளவை பாட்டியின் இந்த வாக்கியம் ஞாபகப்படுத்துகிறது. இனிமேலாவது இதைப் படித்தபின் நீங்களும் உங்கள் குடும்பத்தில் ஆண்கள் அனைவரும் சனிக்கிழமை அன்று மறக்காமல் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கவும். உடம்பில் வியாதி வராது.
17 .ஞயம்பட உரை-
ம்ருது பாஷிணி என்று சிலருக்கு பேர். அவர்கள் மெதுவாக புரியும்படியாக புன்னகை யோடு மனமுவந்து பேசுவதை கேட்கும்போது இன்பம் உண்டாகும். என் வாழ்க்கையில் பலரை அப்படி பார்த்திருக்கிறேன். இனிமையாக பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.
18.இடம்பட வீடு எடேல்
ஒளவைப்பாட்டி தான் கெட்டிக்காரி என்று சொன் னேனே. 200- 300 ஏக்கரில் வீட்டைக் கட்டிவிட்டு தலையில் துண்டு வேண்டாம். பாரதியார் ஆசைப் பட்டபடி காணி நிலம் வேண்டும் பராசக்தியும் கூட வேண்டாம். ஊருக்கு கடைசியில் ஆப்பிரிக்கா மாதிரிக் காடு பக்கத்தில் அரை கிரௌண்ட் நிலம் வாங்கி குடிசை கட்டிக்கொண்டால் வாழ்க்கை சுகம்தான். உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே. அவஸ் தைப் படாதே என்கிறாள் பாட்டி.