AATHICHUDI AVVAIYAR J K SIVAN

ஆத்திச்சூடி  – நங்கநல்லூர்   J K  SIVAN
ஒளவையார் 

1 முதல்  10 வரை 

இதைப் படிக்கும் வயோதிகர்களைக் கேட்கிறேன். ஞாபகம் இருக்கிறதா? 

நாம்  பள்ளிக்கூடத்தில் படிக்கும்  போது ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, இதெல்லாம் சொல்லிக்கொடுத்தார்களே  இன்னும் நாம் அதை மறக்கவில்லையே.இப்போது யாருக்காவது  மேலே சொன்னதெல்லாம் தெரியுமா?
அதன் அருமை புரியுமா?
புரிந்திருந்தால், தெரிந்திருந்தால்  இந்த தலை முறை, அடுத்த தலைமுறைக்கு அதெல்லாம்  போதிக்க மாட்டார்களா?

பரவாயில்லை, அவர்களுக்கே  தெரியாவிட்டாலும் ,தெரிந்து மறந்து போயிருந்தாலும்  ஊதுர  சங்கை நானாவது ஊதி வைக்கிறேன். நல்லது தானே. எனக்கும் இன்னொரு முறை  ரிவிஷன் பண்ணினது மாதிரி இருக்கும்.அதன் ஆனந்தத்தை மீண்டும் ஒருமுறை அனுபவிக்கிறேனே .

முதலில் ஒளவையாரின்  ஆத்திச்சூடி. அருமை யான தமிழ்க்  கிழவி  ஒளவையார்  அற்புதமாக  குட்டி குட்டியாக மனதில் பதியும்படி சொன்ன வார்த்தைகள் தான் ஆத்திச் சூடி. உயிரெழுத்து,  மெய்யெழுத்து வரிசையாக  எழுதிய நீதி வாக்கியங்கள். ஆத்திப்பூ  அணிந்த சிவனை மனதில் துதித்து ஆரம்பிக்கிறார். 

1.அறம் செய விரும்பு –
நீ டாடா  பிர்லா  இல்லை. உன்னாலான தானத்தை,  தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.உனக்கு என்று ஒரு கடமை,தாய் தந்தை, குடும்பம், பிறர் என்று பலருக்கு உன்னாலான சேவையைப்   புரிய ஆசைப்படு.

2. ஆறுவது சினம்  –
 எது உன்னால்  கட்டுப்படுத்த முடியுமோ முடியாதோ, முதலில்  கொஞ்சம் கூட கோபம் வேண்டாம். தணிக்கப் பட வேண்டிய உன் முக்கிய  எதிரி கோபம். அதனால் உன் உடல், மனம் ரெண்டும் பாழாகும்.

3. இயல்வது கரவேல் –
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு. உனக்கு வேண்டாததை வெளியே தரையில் கொட்டுவதற்கு பதிலாக  தர்மம் தானம் என்று கொடுக்காதே.அதனால் பிரயோஜனமில்லை. பிறர்  மனமும் அதனால் வாடும்.உனக்கு பிடித்ததை, நல்லதை மற்றவர்களோடு பங்கிட்டுக்கொள்.

4. ஈவது விலக்கேல் –
சார்  அவன்  ஒரு பிராடு FRAUD  என்று  ஒருவர  மற்றவர் க்கு உதவுவதை, கொடுப்பதை,  கொடுக்காதே  வேண் டா மென்று தடுக்காதே.

5.உடையது விளம்பேல்-
 என்னிடம்  அது இருக்கிறது  இது இருக்கிறது.நான் யார் தெரியுமா?  என்றெல்லாம் உன்னைப்பற்றி, உன்னிடத்தி லுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியு மாறு சொல்லாதே.  அதனால் நன்மை விளையாது.தீமை மட்டுமே  விளையும்.

6. ஊக்கமது கைவிடேல்-
முயற்சியுடையார்  இகழ்ச்சி  அடையார்.  விடாமல்  மனம் தளராமல் உன்னாலான  முயற்சியை ஒரு போதும் தள்ளிப்போடாமல் விடாமல் செய்து கொண்டே வா.

7. எண் எழுத்து இகழேல்-
ஒருவன் வாழ்வில்  வெற்றிகரமான  முன்னேற  அவனுக் கு தெரிந்து இருக்கவேண்டியது எண்ணும்  எழுத்தும் தான். நம்பர்  தான் கணிதம்.  எழுத்து தான்  பாஷை, மொழி,  இலக்கண நூல்கள் . தொடர்ந்து கற்றுக் கொண்டே உன் திறமையை  வளர்த்துக் கொள் .
8. ஏற்பது இகழ்ச்சி- இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது. தனது சொந்தமுயற்சயால்  தனக்கு வேண்டியதை உழைத்துப் பெற முயல வேண் டும். பிறரிடம் கையேந்தி வாழ்வது சுயதர்மத்துக்கு புறம்பானது.

9. ஐயம் இட்டு உண்-
பசி என்று  உன்னை அடியவர்களுக்கு,  அவர்கள் கேட்ப தற்கு முன்பே உன்னாலான  பிக்ஷையை  அளித்து பசியாறச் செய்.  அதிதிதிகளுக்கு பசியாற  உபசரித்து உணவளித்துவிட்டு பிறகு மீதமிருப்பதை உண்பது தான் நமது  பாரம்பரிய  மரபு.

10. ஒப்புரவ ஒழுகு-
மாறுவது உலகம். அதன் வேகத்தை, நியதியை  அனுசரித்து  உலக நடையை அறிந்து, புரிந்து கொண்டு, உன்னை அதற்கேற்ப  பொருந்துமாறு நடந்துகொள். இது காலத்தின் கட்டாயம்.

இன்னும் சொல்லட்டுமா.  ஒளவையார் பிடிக்கிறாளா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *