BARE TRUTH J K SIVAN

அப்பட்டமான உண்மைகள் – நங்க நல்லூர் J K SIVAN

இதில் நான் சொல்லும் எல்லாமே அனைவருக்கும் தெரிந்த உண்மைகள் தான். ஆனால் நாம் யாருமே அதைப் பற்றி எல்லாம் வெளியே பிரஸ்தாபிப்பதில்லை. வீட்டுக்கு வீடு வாசற்படி தானே என்று விட்டுவிடு கிறோம். அது எல்லோருக்கும் ஒரு தடவை ஞாபகப் படுத்தினால் என்ன என்று தோன்றியதால் சொல்கி றேன். நன்றியோடு அதெல்லாம் மீண்டும் ஒரு தடவை நினைப்போமே . அப்பா ஒரு பெரிய ஸ்டேட் பேங்க் மாதிரி. அவருடைய பர்சில் ஐந்து ரூபாய் சில்லறை தான் இருக்கும். அன்று முழுதும் குடும்பம் நடத்த அந்த சொல்ப பணம் போதவே பாத்தது. அதில் ஓரணா, அரையணா எடுத்தால் கூட நிதி நிலைமை மோசமாகிவிடும் இருந்தாலும் அப்பா என்ற பேங்கில் நாம் பணம் போடாவி ட்டாலும் அவரிடம் இருப்பதை தாராளமாக என்று வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள நாம் உரிமை கொண்டவர்கள். அவரும் எதிர்க்க மாட்டார். தியாகத்தின் மறுபெயர் அப்பா.

அம்மா இன்னொரு தியாகி. பிள்ளைகள் பெண்கள் எவ்வளவு மனத்தை ஒடித்தாலும், அழ வைத்தாலும், அருவருப்பு காட்டினாலும், தனது மனம் கோணாதவள். உன்னைப் பற்றி பெரிதாக, புகழ்பவள்.

குடும்பத்தில் அக்கா தங்கைகள் அம்மாவின் XEROX காப்பிகள். பிரதிபலிப்புகள். அம்மாவின் அன்பு, ஆதுரம் அவர்களிடமும் காணப்படுகிறது. ரத்த பாசங்களான அவர்களிடம் எல்லா மன உளைச்சல்களையும் கொட்டி ஆறுதல் பெறமுடிகிறது. சிதைந்த உறவுக ளுக்கு காரணம் நாமாகவே இருப்போம்.

அண்ணன் தம்பி உறவு பிரிக்க முடியாதது. தக்க நேரத்தில் கை கொடுக்க ஓடி வருபவர்கள். அதனால் தான் நண்பர்களைக் கூட , ஏன் முன் பின் தெரியாத வர்களைக்கூட ‘அண்ணே, தம்பி’, என்று தான் அழைக்கி றோம். வள்ளுவர் சொல்லும் ”உடுக்கை இழந்த கை ” அண்ணன் தம்பிகள். பாசப்பறவைகள். கீழே விழுந்தால் தூக்கி விடுபவர்கள். அப்படி இல்லாவிட்டால் எங்கோ தப்பிதம் நம்மிடமும் இருக்கிறது என்று உணரவும்.

ஆக மொத்தத்தில் குடும்பம் என்றால் நல்லது கெட்டது எந்த சமயத்திலும் ஒன்றாகவே , பெருந் துணையாக, ஆதரவாக இருக்கும் ஜீவன்கள் சேர்ந்து இருக்கும் அமைப்பு. குடும்பத்தை சிதைக்கவே கூடாது.

நட்பு வட்டாரம். அதே போல் நம்மை சந்தோஷமாகவும், தைரியம் அளிக்கும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷத்தையும் குதூகலமாக்கும் கூட்டம். நண்பன் இல்லாதவன் மனிதனாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

பழசை,கடந்த காலத்தை, மறக்க முடியவில்லை. மனம் அடிக்கடி பின்னோக்கி கடந்த பாதையில் மைல் கல்லை தேடுகிறது. எதுவும் மாறுதல் இல்லாத, அப்படியே என்றும் காட்சி தரும் பின்னணி அது.சில சமயம் துக்கத்தை மீண்டும் கிளப்பி விடும். பல சமயம் ஆனந்தத்தை அள்ளித்தரும் அற்புத கடவுளின் பரிசு

நமக்கு நம்பிக்கை ஒன்று தான் உலகமே எதிர்த்தாலும் நமக்கு தெம்பு தருவது. தன்னம்பிக்கை கொண்டவன் தோற்பதில் லை, பலமுறை விழுந்தாலும் தத்தி தடுமாறி மீண்டும் எழச்செய்யும் சக்தி.அடிக்கடி ராபர்ட் ப்ரூஸ் கதை நினைவுக்கு வரும். உன்னால் முடியும் தம்பி ஒரு அற்புதமான டானிக் வாசகம்.

மனசு இருக்கிறதே அது ஒரு படு பயங்கரமான சமாசாரம். ஒவ்வொருவர் உள்ளேயும் இருந்து கொண்டு என்ன பாடு படுத்துகிறது! . எப்படி எல்லாம் நம்மை ஆட்டுவிக் கிறது! . அதன் பிடியிலிருந்து தப்ப ரொம்ப சாமர்த்யம் வேண்டும். மனத்தை நாம் சரியான வேலைக் காரனாக உபயோகப்படுத்தவேண்டும். இல்லா விட்டால் மோசமான எஜமானனாகிவிடும்.

புன்னகை – பகவான் கிருஷ்ணன் மனிதப் பிறவிகளா கிய நமக்கு மட்டுமே கொடுத்த வரப்ரசாதம். மிகச் சிறந்த அணிகலன். ஆபரணம்.அதை எப்போதும் தரித்துக் கொண்டு அழகாக காட்சி தருவோம். போட்டோ பிடித்துக் கொள்ளும்போது கூட SMILE PLEASE சொல்கி றார்களே அதற்குத் தானே.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *