ப்ரம்ம ஞான பரிக்ஷை. — நங்கநல்லூர் J K SIVAN
மிதிலையில் ஜனக மஹாராஜா அரண்மனை ஒரு பெரிய கோவில் மாதிரி. யார் வேண்டுமானலும் வரலாம் போகலாம். நேரம் காலம் நிர்பந்தம் எதுவும் இல்லை.
ஒருநாள் ராஜா ஜனகன் முதலானோர் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்க, அரண்மனையில் யாரோ ஒரு பெரிய கற்றறிந்த பண்டிதர் தத்வார்த்தமாக ஏதோ பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தார். அதில் ஒரு சம்பவம்.
”…. குதிரைவீரன் குதிரையின் மேல் ஏறி அமர்வதற்கு ஒரு காலை குதிரை மேல் இருந்த உட்காரும் ஆசனத் தோடு பிணைத்திருந்த கால் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு தாவி அடுத்த காலை குதிரையின் முதுகைத் தாண்டி அடுத்த பக்கத்தில் குதிரையின் மீது அடுத்த பக்க மிதியடியில் காலை வைக்கும் நேரத்தில் அவனுக்கு அவன் தேடிய ஆத்ம ஞானம் வந்தது”
என்று சொன்னார்.” ஞானம் பெறும் நேரம் கை கூடி விட்டால் அந்த க்ஷணமே அதை அடையலாம் என்பத ற்கு மேலே சொன்ன உதாரணம்.
ஜனக மஹாராஜா அந்த பௌராணிகரை ”கொஞ்சம் நிறுத்துங்கள்பண்டிதரே. இப்போது நீங்கள் சொன்ன தை நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டார்.
”மஹாராஜா, நான் குதிரை மேல் சவாரி செய்யாதவன். எனக்கு அதை நிரூபிக்கும் ஞானம் இல்லை.ஏதோ சாஸ்திரத்தில், வேதத்தில் படித்ததை ஆங்காங்கே சொல்பவன்” என்று பௌராணிகர் பதில் சொன்னார்.
”பௌராணிகரே, நீங்கள் சொன்ன உதாரணம் பொருத்த மில்லாதது,பொய் என்று கூட சொல்வேன்”
”இல்லை மஹாராஜா, மஹரிஷிகள் சொன்ன வார்த் தைகள் நிச்சய தப்பாக இருக்காது என்று தோன்று கிறது.ஆனால் என்னால் அதை விளக்கவோ, நிரூபிக்க வோ முடியவில்லை ”
ஜனகருக்கு கோபம் வந்து பௌராணிகர் சிறையில் அடைக்கப்பட்டார். அதே கதைதான் மற்ற வித்வான்க ளுக் கும். நன்றாக கற்றறிந்தவர்கள் போல் வேஷமிட்டு வேதவாக்யங்களை உணர்ந்து நிரூபிக்க இயலாதவர் கள் பண்டிதர்களாக தங்களை காட்டிக் கொள்பவர்கள் பலருக்கும் சிறை தண்டனை தான் கிடைத்தது.
பயத்தில் நிறைய பண்டிதர்கள் நாட்டை விட்டு ஓடி விட்டார்கள்.
பண்டிதர்கள் இவ்வாறு ஓடும்போது வழியே அஷ்டா வக்ரர் எனும் ரிஷியை சந்திக்கிறார்கள். உடம்பில் எட்டு கோணல்கள் சாபத்தால் பெற்ற ரிஷி அவர். எதற்காக ஓடுகிறார்கள் என்று கேட்டு விஷயம் அறிந்த அஷ்டா வக்ரர் ”நான் ஜனகரை நேரில் கண்டு அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். நீங்கள் சொன்ன உதாரணத்துக்கு என்ன அர்த்தம் என்று நிரூபிக்கிறேன். பயப்படாதீர்கள் என்னோடு வாருங்கள்” என்கிறார்.
அஷ்டாவக்ரரரை பல்லக்கில் சுமந்து பண்டிதர்கள் ஜனகரின் அரண்மனைக்கு வருகிறார்கள் . ஜனகர்
அஷ்டாவக்ரரைப் பார்த்ததும் எழுந்து நின்று வணங்கி வரவேற்று உபசரித்து ஆசனத்தில் அமர வைக்கிறார்.
”ஜனக மஹாராஜா, முதலில் சிறையில் உள்ள பண்டிதர் களை எல்லாம் உடனே விடுதலை செய்யுங்கள்.”
இப்படி ஒரு ரிஷி சொன்னால் அவருக்கு ஏதோ அபரிமித சக்தி இருக்கவேண்டும் ஆகவே ஜனகர் அவர்களை விடுவிக்கிறேன். ஆனால் என் சந்தேகம் தீரவிலையே வேத சாஸ்த்ர வாக்கியம் நிரூபிக்க இங்கே ஒரு குதிரையை இங்கே தருவிக்கட்டுமா?”
”அவசரப்படாதீர்கள் அரசே. முதலில் நாம் தனியாக ஒரு இடத்தில் சந்திக்கவேண்டும். பிறகு தான் நிரூபணம் . என்னோடு வாருங்கள் ”
ஜனகன் தன் குதிரை மேல் ஏறிக்கொண்டான், அஷ்டாவக்ரர் ஒரு பல்லக்கில் அவனைப் பின் தொடர்ந் தார். எதிரே ஒரு காடு.
”அரசே நம் இருவரைத் தவிர மற்றவர்களை எல்லாம் உடனே ஊர் திரும்பச் சொல்லுங்கள்’ எல்லோரும் சென்றுவிட்டார்கள்.
”மஹரிஷி, இப்போது நான் என் காலை குதிரையின் இடது பக்கம் உள்ள மிதியடியில் வைத்துக்கொண்டு வலது காலை தூக்கி குதிரையின் வலப்பக்கம் போடப் போகிறேன், அதற்கான நேரத்தில் ஞானம் சாதகனை நெறுங்கும் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்”.
”மஹாராஜா, நீங்களும் நானும் குரு சிஷ்ய பாவத் தில் இப்போது பேசுகிறோமா என்று முதலில் சொல்லுங் கள்?ஜனகருக்கு புரிந்து விட்டது. அஷ்டா வக்ரருக்கு தக்க மரியாதையும் மதிப்பும் தரவேண்டும். அவரை
வணங்கினார். எனக்கு ஆசி அளியுங்கள் என்று வேண்டினார்.
மஹரிஷி இனி அவரை ”அரசே” என்று விளிக்க தேவையில்லை. சிஷ்யனை குரு அழைப்பது போல் ”ஜனகா” என்றே கூப்பிட்டார்.
”ஜனகா, ப்ரம்ம ஞானம் வேண்டுகிற உண்மையான சிஷ்யன் முதலில் சகலமும் துறந்து, சர்வ சங்க பரி த்யாகம் செய்து குருவை சரணடைய வேண்டாமா?” முற்றும் துறந்தவன் தானே ஞானி ஆக முடியும். ஞானம் பெற்றவன் தானே ஞானி’
”அப்படியே ஆகட்டும் குரு மஹராஜ்” என்கிறார் ஜனகர்.
” அதுவே இப்போது இங்கே நடக்கட்டும்” என்று சொல்லியவாறு அஷ்டாவக்ரர் காட்டில் மறைந்து போகிறார். சிலையாக நின்றார் ஜனகர். அவரது ஒரு கால் குதிரை மேல் இடது பக்கம் மிதியடியில் இருக்க வலது கால் குதிரையின் மேல் வலது பக்கம் அந்தரத் தில் தூக்கியவாறு நிற்கிறது. அப்படியே நிற்கிறார் ஜனகர். எவ்வளவு நேரம் நின்றோம் என்று அவருக்கே தெரியவில்லை. அவருக்குள்ளே ஒரு கேள்வி எழுகிறது
?”ராஜா யார், நான் யார், இந்த குதிரை யார், எனக்கும் இதற்கெல்லாமும் என்ன சம்பந்தம்? யாருடைய கால், எது இடது, வலது பக்கம்?” எல்லாமும் நானே, எல்லாமும் ஒன்றே என்ற போது எப்படி இவ்வளவு வித்யாசம்? எங்கே வித்யாசம்? காலம் என்றால் எது?ஆரம்ப மெது முடிவு எது?
உள்ளே கொதித் தெழுந்த ஆன்ம தேடல், விசாரம், ஜனகரை சிலையாகி நிற்க வைத்தது. இதற் கிடையே
ஜனகரின் மந்திரிகள் ஜனங்கள் எல்லோரும் அவரைத் தேடிக்கொண்டு காட்டுக்கு வந்தவர்கள், அவர் குதிரை மேல் வலது காலை தூக்கிக்கொண்டு சிலையாக நின்ற நிலையைக் கண்டு ஆச்சர்யம் அடைகிறார்கள். அஷ்டா வக்ரரைத் தேடுகிறார்கள்.
‘இந்த அஷ்டாவக்ரன் ஏதோ ஒரு மந்திரவாதியோ, என்னவோ மந்திரம் போட்டு ஜனகரை இப்படி அந்த ரத்தில் வலது காலை தூக்கிக் கொண்டு நிற்க வைத்து விட்டானோ” என்று கோபம் அடைகிறார்கள்.குதிரை
யிலிருந்து ஜனகரை இறக்கி ஒரு பல்லக்கில் தூக்கி வருகிறார்கள்.ஜனகர் பேசவில்லை, அவர் வலது காலும் தூக்கிய நிலையில் தான் இருக்கிறது.
அஷ்டாவக்ரரை தேடிப் பிடித்து மந்திரிகள் அவர் காலில் விழுந்து ”சாமி, எப்படியாவது ராஜாவை சரி செய்து பழையபடி ஆக்கி விடுங்கள்” என கெஞ்சு கிறார்கள்.
”ஜனகா” என்று முனிவர் கூப்பிட ராஜா சமாதி நிலை அகன்று சுய நினைவுக்கு வருகிறார்.
”ஜனகா, உன் மந்திரிகள் நான் ஏதோ உனக்கு வசிய மந்திரம் போட்டு உன்மத்தனாக்கி விட்டதாக நினைக்கி றார்கள். நீ என்ன புரிந்து கொண்டாய் என்று அவர்க ளுக்கு எடுத்துச் சொல்”
ஜனகருக்கு கோபம் வந்தது. ” யார் அப்படி ரிஷியை சொன்னவர்கள்?” என்று கேட்கிறான்ப்ரம்ம ஞானம் தக்க பக்குவம் அடைந்த சிஷ்யனுக்கு தான் குரு உபதே சம் மூலம் பெற முடியும் என்பதை ஜனகர் உணர்கிறார்.
வேதங்கள் சாஸ்திரங்கள் பொய்யில்லை. புரிந்து கொள்ளவேண்டியவை என்று அறிகிறார். ரிஷியின் பரிக்ஷையில் தான் தேறி விட்டது புரிகிறது. அன்றிரவு முழுதும் அஷ்டாவக்ர ரோடு தனியே இருந்து ஜனகர் உபதேசம் பெறுகிறார்.
ப்ரம்மம் எங்கோ தனியாக இல்லை, நம்மை விட புதிதாக வேறே ஏதோ இல்லை. அதை உணர குறிப்பிட்ட இடமோ, நேரம் காலம் எதுவுமே இல்லை. ‘தத்வம் அஸி”. அது நீயாகவே இருக்கிறாய். அந்த உணர்வே ப்ரம்ம ஞானம். ஜனகர் அன்றிலிருந்து மாறிவிட்டார்.
மறுநாள் காலை அரண்மனை அவையில் ஜனகரிடம் அஷ்டாவக்ரர் ”அரசே, வேத சாஸ்திரங்களில் சொல்லி யிருக்கிறதே பிரம்ம ஞானத்தை குதிரையின் மேல் அமர்ந்து இடது காலை மிதியடியில் வைத்து வலது காலை தூக்கி குதிரையின் மறுபக்கம் போடும் நேரத்தில் உணர்ந்து கொள்ளலாம் என்று போட்டிருக் கிறதே, அதை நிரூபிக்க முடியுமா என்று நீங்கள் கேட்ட கேள்விக்கு இன்னும் நான் பதில் சொல்லவில்லையே, எங்கே உங்கள் குதிரையை இங்கே கொண்டுவரச்சொல்லி அதன்மேல் ஏறி காலைத்தூக்கி போடுங்கள்?
‘மஹரிஷி. என்னுடைய அஞ்ஞானத்தால், சாஸ்தி ரங்கள்,வேதங்களில் சொல்லியிருப்பதை சந்தேகப் பட்டேன். இப்போது என் தவறை உணர்ந்து கொண்டு விட்டேன். சாஸ்திரங்கள், வேதங்களின் ஒவ்வொரு எழுத்தும் எவ்வளவு முக்கியமானவை, அழுத்தம்,அர்த்த புஷ்டி ஆனவை என்று அறிந்து கொண்டேன். என்று வணங்கி னார் ஜனகர்.