NARAHARI J K SIVAN

நரஹரி – நங்கநல்லூர் J K SIVAN
”நரசிம்மரை வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடா தாமே?”
”யார் சொன்னது? அப்படியெல்லாம் இல்லை. பக்த ப்ரஹலாதனை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ அல்லது லக்ஷ்மி தேவியை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ தாராளமாக வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். என் நண்பன் ராகவய்யங்கார் வீட்டில் லக்ஷ்மி நரசிம்மன் அற்புதமாக இருப்பார்.
மஹா விஷ்ணு நரசிம்ம அவதாரத்துக்கு தேவை யானதால் சிங்க தலையும், மனித உடலும் கொண் டவர்.அருளும் கருணையும் கொண்டகாக்கும் தெய்வம். ஹிரண்யனும், ஹிரண்யாக்ஷன் இருவருமே மஹா விஷ்ணுவின் த்வார பாலகர்கள். மூன்றே பிறவியில் விஷ்ணுவுக்கு எதிரியாக பிறந்து மீண்டும் வைகுண்டம் அடைய வரம் பெற்றவர்கள். பூமியில் ராக்ஷச சகோ தரர்களாக, விஷ்ணுவின் எதிரியாக பிறந்த அவர்க ளுக்கு பழைய முன் ஜென்ம ஞாபகம் இல்லை. இருந்தால் எப்படி எதிரியாக இருக்க முடியும்?
ஹிரண்யாக்ஷனைக் கொன்ற விஷ்ணுவின் மேல் ஹிரண்யனுக்கு கடும் கோபம். விஷ்ணுவை கொல்ல துணிந்தான். அவன் கடுமையாக தவம் இருந்து பிரம்ம தேவனிடம் வரம் பெற்றவன். அவன் கேட்ட வரம் விசித்திரமானது.
‘பிரம்ம தேவா, உன்னிடம் நான் சாகாவரம் கேட்கிறேன்.
எனக்கு மரணம் பகல் பொழுதிலும் நிகழக் கூடாது! இரவு பொழுதிலும் நிகழக் கூடாது!
எனக்கு எந்த மனிதனாலும் மரணம் நிகழக் கூடாது! மிருகத்தாலும் மரணம் நிகழக் கூடாது!
எனக்கு ஆகாயத்திலும் மரணம் ஏற்படக்கூடாது! பூமியிலும் மரணம் ஏற்படக்கூடாது!
எனக்கு எந்தவொரு ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக்கூடாது!’
எனக்கு வீட்டுக்கு வெளியிலும் மரணம் கூடாது உள்ளேயும் கூடாது.
‘ததாஸ்து” என்று அவன் கேட்ட வரம் தந்தார் பிரம்மன்.
ஒரு நாள் ஹிரண்யன் அரண்மனையில் கடும் விவாதம். தனது வாளால் தனது மகனைக் கொல்ல ஹிரண்யன் துணிந்தான்.
”நாராயணன் எங்கேயும் இருக்கிறான் என்கிறாயே, எங்கே உன் நாராயணன்,காட்டு அவனை.”
”அப்பா, நீங்கள் நாராயணனை துதித்து வேண்டினால் எங்குமே உங்களுக்கு தோன்றுவார்’
”முட்டாளே, எனக்கு அவனைத் தேடி போக வேண்டிய அவசியம் இல்லை. நீ சொல்கிற நாராயணன் எங்கே யும் இருப்பவனாக இருந்தால் இங்கேயும் இருக்க வேண்டுமல்லவா?
சொல் இங்கே எங்கே இருக்கிறான்?
இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நாராயணனுக்கு பரிக்ஷை எழுத வினாத்தாளை எதிர்பார்க்கும் மாணவ னைப் போல் வியர்த்தது. என்ன சொல்லப்போகி றானோ இந்த குழந்தை.?
நான் அதற்கு தயாராக இருந்து அவன் வாக்கை நிரூபிக்க வேண்டுமே என்று கவலை, அதிர்வில் இருந்தார் நாராயணன்.
”ப்ரஹ்லாதன் சின்ன குழந்தை. அவனுக்கு ஹிரண்யன் பெற்ற சாகாவரம் தெரியாதே. மிகவும் கடினமான நிபந்தனைகளை அல்லவா ஹிரண்யன் போட்டிருக் கிறான். அதை மீறாமல் அல்லவோ நான் அவனை வதம் செய்யவேண்டும். நான் அவனைக் கொல்லும் போது , இரவும் இல்லாத பகலுமில்லாத அந்தி நேரமாக இருக்க வேண்டும்.”
” இதோ ஹிரண்யன் பிரஹலாதன் வாக்குவாதம் அந்தி நேரத்தை நெருங்கி விட்டது. நான் மிருகமாகவோ மனித னாகவோ தேவனாகவோ இருக்க கூடாதே. ஆஹா ஒரு சிங்க தலையுடன் மனித உடல் எடுக்கி றேன். அப்போது நான் மனிதனுமில்லை, மிருகமு மில்லை. ரெண்டும் கலந்தது. நான் ஹிரண்யனைக் கொல்லும்போது வீட்டிலோ வெளியிலோ கூடாதே. ஆகவே இரண்டுக்கும் நடுவாக வாசல்படியிலேயே அவனை முடிக்கிறேன். அவனை எந்தஆயுதமும் கொல்லக்கூடாதே , ஆகவே என் சிம்ம உருவில் என் கூரான நகங்களையே ஆயுதமாக்கிக் கொல்கிறேன். ஒரு சொட்டு ரதம் கீழே விழாது பார்த்துக் கொள்கிறேன். ஆகாசத்தியிலோ பூமியிலோ அவன் கொல்லப்படாமல் என் மடியிலேயே அவனை முடிக்கிறேன்.”
”நேரமாகிறதே. இந்த அந்திப்பொழுதுக்குள் நான் என் கடமையை நிறைவேற்றவேண்டுமே . தாயாராக இருக்கிறேன். எந்த நேரமும் நான் ஹிரண்யனைக் கொன்றாக வேண்டுமே. குழந்தை ப்ரஹலாதனை ஹிரண்யன் கேட்கிறான். நான் எங்கே இருக்கிறேன்” என்று. குழந்தை என்ன பதில் சொல்லப்போகிறானோ?
என்னை எங்கே இருப்பதாக சொல்லப்போகிறானோ அங்கே ஓடி நான் தயாராக இருக்கவேண்டும்.”
”ப்ரஹ்லாதா , என்னடா பேசாமல் அங்குமிங்கும் பேந்த பேந்த விழிக்கிறாய்.நான் கேட்டது உன் காதில் விழவில்லையா?”
உருவிய வாளுடன் ஹிரண்யன் கர்ஜிக்கிறான்.
”சொல் உடனே, எங்கே இருக்கிறான் உன் நாராயணன், அவனோடு உன்னையும் சேர்த்து கொல்கிறேன் ”
”அப்பா கோபம் வேண்டாம், நாராயணன் இங்குமே எங்கும் இருக்கிறார் ”
ஹிரண்யன் ரத்தம் போல் சிவந்த கோப விழிகளை சுழற்றினான். அரண்மனைத் தூண்கள் எங்கும் தென்பட்டன.
அவன் மனதில் ஒரு எண்ணம் உதித்து அட்டகாசமாக சிரித்தான். அரண்மனை எதிரொலித்தது.
”அடேய் ப்ரஹ்லாதா, பதரே, நீ சொல்வதைப் பார்த்தால் உன் நாராயணன் இங்கே இருக்கும் தூண்களிலும் கூட இருக்கிறானா?’
‘ஆம் அப்பா, நாராயணன் ஒரு சாண் அளவிலும் இருப்பவர். சிறிய அணு வாகவும் இருப்பவர். அந்த அணுவை நூறு கூறாக்கினால் அதன் ஒவ்வொரு கூறிலும் கூட இருப்பவர். அணுவைப் போல மஹா மேருவிலும் உள்ளவர். அப்படிபட்டவர் இந்த தூணிலும் இருப்பவர். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தை யிலும் கூட இருப்பவர்.அதை நிச்சயம் நீங்களே உணர்வீர்கள்”
ப்ரஹலாதன் சொல்வதை அழகாக கம்பர் பாடலாக்கி தந்திருக்கிறார்.
‘ “சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத் தன்மை
காணுதி விரைவின்” என்றான்; “நன்று” எனக் கனகன் சொன்னான்.
கோபத்தின் உச்சியில் ஹிரண்யன் தன் அருகே இருந்த தூணை நெருங்கினான். ”அப்போது இந்த தூணிலும் உன் நாராயணன் இருந்தால் வெளியே வரட்டும் அவனை முதலில் உன் கண்ணெதிரேயே என் வாளால் துண்டிக்கிறேன்”
சூரிய ஒளி போல் ஹிரண்யன் வாள் மின்னியது. எதிரே இருந்த தூணை உதைத்து வாளால் வெட்டி
னான்.”
”அந்திப்பொழுது முடியப்போகிறதே இரவு வந்துவிடுமே சீக்கிரம் ஹிரண்யனை முடிக்கவேண்டுமே” என்று காத்திருந்த நாராயணன் சட்டென்று ஹிரண்யன் உதைத்த தூணுக்குள் ப்ரவேசமாகி அவன் வெட்டின தும் ”ஹா ஹா ஹா என்று இடி போல் கோபாக்னி யுடன் கர்ஜித்து தூப் பிளந்து வெளிப்பட்டார். ஒரு கணம் கோபாவேசமாக ப்ரம்மாண்டமாக நின்ற நரஹரியைப் பார்த்து வாய் பிளந்து திகைக்கிறான் ஹிரண்யன். அடுத்த கணமே முழு பலத்துடன் நரசிம்மனை வாளால் வெட்ட வாளைத் தூக்குவதற்கு முன் அவனை வாரித் துரும்பைப் போல தூக்குகிறார் நரஹரி. கண்மூடி திறக்கும் நேரத்தில் அரண்மனை வாசல்படியில் அமர்ந்து கொள்கிறார். மடியில் ஹிரண்ய னை குழந்தை போல் வாரி இறுக்கி வைத்துக்கொண்ட அதே நேரத்தில் அவரது இரு கரங்களிலுமிருந்த கூரிய பத்து நகங்கள் ஹிரண்யன் வயிற்றையும் மார்பையும் கிழித்து அவன் குடல்களை வெளியே எடுத்து மாலை யாக தரித்துக் கொள்கிறார். ஒரு சொட்டு ரத்தம் விழாமல் சிங்கம் உறிஞ்சிவிடுகிறது. ஹிரண்யன் குறித்த நேரத்தில் மறைகிறான். நரசிம்ம அவதாரம் முடிந்தது.
முழுமையாக நம்பிய பக்தன் ப்ரஹ்லாதனுக்காக இப்படி அவதரித்த நாராயணன் பயந்து நடுங்கி நின்று கொண்டிருந்த ப்ரஹலாதனை வாஞ்சையுடன் அணைத்து அருள் பாலித்து அவன் அடுத்த ராஜா.
நரசிம்மர், விஷ்ணுவின் அம்சம்.துளசி தளங்களால், இலைகளால் அர்ச்சனை செய்யலாம். , செவ்வரளி சிகப்பு செம்பருத்தி பூக்களால் அர்ச்சிக்கலாம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *