CHANAKYA NEETHI CH.4 1 -5 J K SIVAN

சாணக்ய நீதி நங்கநல்லூர் J K SIVAN
அத்யாயம் 4. ஸ்லோகங்கள் 1-5
சந்திரகுப்த மௌர்ய சக்ரவர்த்தியாக ஒரு சாதாரணனை மாற்றியவன் ஒரு சிறந்த கல்வி கற்ற தைரியமான வேதமறிந்த ப்ராமணன். வருவதை முன்கூட்டியே சிந்தித்து ராஜாவை சக்திமானாக்கி, சரியாக வழிநடத்திய மந்திரியாக பணியாற்றியவன். அவன் பெயர் தான் உலகம் என்றும் மறவாத சாணக்கியன். இன்னொரு பெயர் கௌடில்யன். சாணக்கியன் எழுதிய ஒரு சிறந்த நூல் சாணக்ய நீதி படிக்க தெவிட்டாத அறிவுக்கு களஞ்சியம்.அதைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக வழங்குகிறேன்.
आयुः कर्म च वित्तं च विद्या निधनमेव च ।पञ्चैतानि हि सृज्यन्ते गर्भस्थस्यैव देहिनः ॥ ०४-०१
āyuḥ karma ca vittaṃ ca vidyā nidhanameva ca pañcaitāni hi sṛjyante garbhasthasyaiva dehinaḥ ॥ 04-01
ஆயு கர்ம ச வித்தம் ச வித்யா நிதானமேவ ச பஞ்ச்சை தானி ஹாய் ஸ்ருஜ்யந்தே கர்பஸ்தஸ்யைவ தேஹிந :
ஒவ்வொரு மானுடனும் தாயின் கருவில் உருவாகும்போதே ஐந்து விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. அது என்ன ஐந்து விஷயம் ?
1. அவன் எத்தனை வருஷம் வாழப்போகிறான்? அவன் ஆயுள் காலம் எவ்வளவு?
2.அவன் என்ன காரியத்தில் ஈடுபடப் போகிறான்?
3.அவனிடம் எவ்வளவு பணம் இருக்கும்? தரித்திரனா? செல்வந்தனா?
4.அவன் எவ்வளவு படிப்பான்? என்ன படிப்பான்? அவன் கல்வியறிவு?
5.அவன் என்று எப்படி கடைசி மூச்சை விடப்போகிறான்?
சாணக்ய நீதி படிப்பதற்கு முன் நான் இதெல்லாம் ப்ரம்ம ரஹஸ்யம் என்று தான் நினைத்திருந்தேன். கௌடில்யனைப் படித்த பிறகு ஒருவேளை சாணக்கியன் தான் ப்ரம்மனோ என்று தோன்றுகிறது. ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பே எவ்வளவு துல்யமாக அவன் மனம் இதையெல்லாம் சிந்தித்திருக்கிறது!.
2. साधुभ्यस्ते निवर्तन्ते पुत्रमित्राणि बान्धवाः ।ये च तैः सह गन्तारस्तद्धर्मात्सुकृतं कुलम् ॥ ०४-०२
sādhubhyaste nivartante putramitrāṇi bāndhavāḥ । ye ca taiḥ saha gantārastaddharmātrsukṛtaṃ kulam ॥04-02
ஸாது⁴ப்⁴யஸ்தே நிவர்தந்தே புத்ரமித்ராணி பா³ந்த⁴வா: । யே ச தை: ஸஹ க³ந்தாரஸ்தத்³த⁴ர்மாத்ஸுக்ரு’தம் குலம்
பகவானை சரணடைந்த தூய பக்தன் வாரிசுகள், சந்ததி, நண்பர்கள், உறவினர், எல்லோரையும் விட்டு பிரிபவன். அப்பற்று கொண்ட பிறகு இப்பற்று எதற்கு என்று இருப்பவன். அவனை பணிந்தவர்கள் பின்பற்றுவோர்கள், அவர்களது பக்தியால்,அவரவர் குடும்பங்களுக்கு நற்பெயரை, நன்மதிப்பை பெற்றுத் தருவார்கள். இதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். என் குடும்பத்தில் ஒருவர் சிறந்த யோகி, அருண கிரிநாதர் போன்றவர் என்றால் எனக்கும் அவரை வணங்கி தொழுவதால், பக்தி, கொஞ்சமாவது இருக்கும், என்னால் என் குடும்பத்துக்கும் மதிப்பு தான் . சந்தேகமில்லை. உண்மையில் என் தாத்தா, வசிஷ்ட பாரதிகள், தூர உறவினர் தமிழ் தாத்தா இவர்களால் எனக்கும் பெருமை. நான் அவர்களை போல் பெருமை பெற யோக்கியதாம்சம் இல்லாதவன் என்பது எனக்கே தெரியும்.
दर्शनध्यानसंस्पर्शैर्मत्सी कूर्मी च पक्षिणी । शिशुं पालयते नित्यं तथा सज्जन-संगतिः ॥ ०४-०३
darśanadhyānasaṃsparśairmatsī kūrmī ca pakṣiṇī । śiśuṃ pālayate nityaṃ tathā sajjana-saṃgatiḥ ॥ 04-03
த³ர்ஶநத்⁴யாநஸம்ஸ்பர்ஶைர்மத்ஸீ கூர்மீ ச பக்ஷிணீ । ஶிஶும் பாலயதே நித்யம் ததா² ஸஜ்ஜந-ஸங்க³தி
மீன் ஆமை போன்றவை கண்ணால், எண்ணத்தால் தமது சந்ததிகளை பரிபாலிக்கின்றன .மஹான்கள், ஆச்சார்யர்கள், தம் கண்ணால், மௌனத்தால், சைகையால் உன்னை ஆசிர்வதித்து, உனக்கு நல்வழி காட்டுபவர்கள் என்று புரிந்து அவர்களை சரணடைவாய். இதற்கு நயன, மௌன, முத்ரா தீக்ஷை என்று பெயர்.
यावत्स्वस्थो ह्ययं देहो यावन्मृत्युश्च दूरतः । तावदात्महितं कुर्यात्प्राणान्ते किं करिष्यति ॥ ०४-०४
yāvatsvastho hyayaṃ deho yāvanmṛtyuśca dūrataḥ ।tāvadātmahitaṃ kuryātprāṇānte kiṃ kariṣyati ॥ 04-04
யாவத்ஸ்வஸ்தோ² ஹ்யயம் தே³ஹோ யாவந்ம்ரு’த்யுஶ்ச தூ³ரத: ।தாவதா³த்மஹிதம் குர்யாத்
ப்ராணாந்தே கிம் கரிஷ்யதி ॥
சுவரை வைத்து தான் சித்திரம் எழுத வேண்டும். நமது தேகம் ஆரோக்கியமாக முழு கட்டுப்பாட்டில் இருத்தால் மரணம் கொஞ்ச தூரத்தில் நம் அட்ரஸ் என்று விசாரித்துக்கொண்டு அலையும் . ஆத்மா என்று உள்ளே இருப்பதை உணரவேண்டும். நமக்கு அதற்கு யாதொரு சம்பந்தமும் இல்லாமல் இருப்பது அறிவீனம். மரணம் என்பது நமக்குள்ளேயே இருக்கிறது, எப்போது தலை தூக்கும் என்பது எவருக்கும் தெரியாதே. ஆகவே அதை கவனத்தில் கொண்டு எப்போதும் உஷாராக செயல்படவேண்டும். மரணத்தின் இன்னொரு பெயர் பிராணன் என்று வைத்துக் கொள்வோம். பிராணன் நம்மைவிட்டு விலகினால் நாம் மரணம் அடைந்ததாக எல்லோரும் கூட்டமாக நம் வீட்டில் கூடிடுவார்கள்.
कामधेनुगुणा विद्या ह्यकाले फलदायिनी ।प्रवासे मातृसदृशी विद्या गुप्तं धनं स्मृतम् ॥ ०४-०५
kāmadhenuguṇā vidyā hyakāle phaladāyinī । pravāse mātṛsadṛśī vidyā guptaṃ dhanaṃ smṛtam ॥ 04-05
காமதே⁴நுகு³ணா வித்³யா ஹ்யகாலே ப²லதா³யிநீ ।ப்ரவாஸே மாத்ரு’ஸத்³ரு’ஶீ வித்³யா கு³ப்தம் த⁴நம் ஸ்ம்ரு’தம்
தம்பி, நான் சொல்வதை உன் மனதில் எழுதி வைத்துக் கொள் .காமதேனு எனும் கேட்டதையெல்லாம் கொடுக்கும் பசுவைப் போல தான் கல்வியும். கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு. கல்வியைத் திருடன் கொள்ளையடித்துக் கொண்டு போக முடியாது. முதுகில் மூட்டையாக சுமந்து கொண்டு போகவேண்டாம். கல்வி ஒரு சுமை அல்ல. அது மனதில் எண்ணத்தில் குவிந்த ஒரு புதையல். கை வீசிக்கொண்டு காலாற எங்கு வேண்டுமானாலும் போகலாம். கல்வி எங்கு சென்றாலும் வாழ உதவும்,. கை கொடுக்கும். மரியாதை பெருமை எல்லாம் பெற்றுத் தரும். ஒன்றுமே தெரியாமல் வளர்ந்த பெரிசு நானே சில விஷயங்களைத்தெறிந்து கொண்டு அதைச் சொல்லும் எனக்கே எவ்வளவோ நண்பர்கள் இருக்கி றார்களே, சிறந்த கல்விமானைப் பற்றி கேட்கவேண்டுமா,சொல்ல வேண்டுமா, எழுத வேண்டுமா? பசித்த போது உணவூட்டும் அம்மா மாதிரி கல்வி. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்வது தான் கல்வி. ஞானம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *