ஒரு மஹா மஹோபாத்யாய…. கதை
ஸ்ரீ திருவிசநல்லூர் நீலமேக சாஸ்திரிகள்.
ஒவ்வொரு வருஷமும்கார்த்திகை அமாவாசை அன்னிக்கு சின்னக் கிணற்றிலே ஆயிரக்கணக்கானோர் ஸ்னானம் பண்ண கங்கை வருமே அந்த ஊர் திருவிசை நல்லூர், அந்த கிணற்றுக்கு சொந்தக்காரர் ஸ்ரீதர ஐயாவாள். அவர் கதை ஏற்கனவே சொல்லியிருக்கேன். ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த ஊர் இப்போது திருவிசலூர், பழைய காலத்தில் ஸஹாஜி புரம் .தஞ்சாவூர் மராட்டி ராஜா பேர் கொண்டது. அங்கே நீலமேக சாஸ்திரிகளை தெரியுமோ? தெரியாதோ. பரவாயில்லை. எனக்கும் தெரியாது.இப்போது தான் தெரிந்துகொண்டதால் உங்களுக்கும்
பட்டம் வெள்ளைக்கார அரசாங்கத்திடம் பெற்றவர். அவர் குரு ராம சுப்பா சாஸ்திரிகள். மைலாப்பூர் சமஸ்க்ரித கல்லூரி நிர்வாகி வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர், நீலமேக சாஸ்திரிகளை கல்லூரில் சமஸ்க்ரித ஆசிரியராக நியமித்தார். அவரோடு படித்தவர் அதே திருவிசநல்லூர் வாசி வேங்கட சுப்பா சாஸ்திரிகள்.
வெள்ளைக்கார அரசாங்கம் தனக்கு மஹாமஹோபாத்யாய பட்டம் கொடுத்தபோது, அவர் கேட்ட கேள்வி.
”எங்க குரு ராம சுப்பா சாஸ்த்ரிகளுக்கு இந்த விருது கிடைச்சிருக்கோ?”
”இல்லையே ”
”ஓ. அப்படின்னா எங்க குருவுக்கு கிடைக்காத அந்தஸ்து, மரியாதை எனக்கு வேண்டவே வேண்டாம்”என்று நிராகரித்து விட்டார்.
”வெள்ளைக்கார அரசாங்கத்துக்கு உண்மையில் ராம சுப்பா சாஸ்திரிகளை பற்றிய விவரம் கிடைக்கவில்லையென்பதால் கொடுக்காமல் விட்டு விட்டார்கள். அப்புறம் கேள்விப்பட்டு கொடுத்தார்கள். ‘
ராமசுப்பா சாஸ்திரிகளுக்கு அந்த விருது கிடைத்த பிறகு தான் நீலமேக சாஸ்திரி மஹா மஹோபாத்யாய ஆனார்.
இவர் படம் எனக்கு கிடைக்கவில்லை. அவர் வம்சத்தில் இருக்கும் யாராவது ஒருவரிடம் அவர் படம் இருந்தால் எனக்கு எனக்கு அனுப்பலாம். அவர்களிடமே கூட இல்லை என்றால் துரதிர்ஷ்டம் நமக்கு தான்.