ஒரு அற்புத வித்வான் – நங்கநல்லூர் J K SIVAN
முசிறி சுப்ரமணிய ஐயர்
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரு அற்புத காந்த குரலோன் ஒருவர் தோன்றி அப்போது வேகமாக வளர்ந்து வாழ்ந்த சினிமா உலகிலும் இடம் பிடித்தார். நான் MKT ஐ சொல்லவில்லை. இன்னொரு கர்நாடக இசைக் கலைஞர் முசிறி சுப்ரமணிய ஐயரை குறிப்பிடுகிறேன். சில தமிழ் சினிமாக்களுக்கு இசை அமைத்தவர். செம்மங்குடி சீனிவாச ஐயர் அவரது உற்ற நண்பர். மயிலாப்பூர் ஆலிவர் சாலையில் ஒரு மனை வாங்கி வீடு கட்டியவர். அந்த தெருவின் பகுதி அவர் பெயரால் இன்று விளங்குகிறது. வீட்டை ஜம்மென்று அக்கால மோஸ்தர் படி சிவப்பு ஆக்சைட் முற்றம், வெராண்டா, முதல் மாடியில் தனது சங்கீத பயிற்சி ஹால் என்று விஸ்தாரமாக கட்டினார். மைலாப்பூர் அப்போது இவ்வளவு கூட்டம் நெரிசல் இல்லாத காலம். அந்த மாடி அறையில் தான் தானும் சாதகம் பண்ணி சீடர்களுக்கும் சங்கீதம் கற்பிப்பார்.
அந்த காலத்தில் எல்லோருமே ஆங்கிலம் சரளமாக பேசுவார்கள். ஐயருக்கு வியாபாரிகள், அரசு அதிகாரிகள், வக்கீல்கள் என நிறைய ஏராள ரசிக நண்பர்கள். அவர் வீடு எப்போதும் ஜேஜே என்று நண்பர்களாலும் ரசிகர்களாலும் நிரம்பி இருக்கும். கச்சேரிகள் அடிக்கடி நடக்கும்.
முசிறி, மத்திய கர்நாடக இசைக்கல்லூரியின் முதல்வராக 1948ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டு வரை பணியாற்றியவர் . இன்றும் அவர் இல்லத்தை அவர் பெயர் கொண்ட தெருவில் காணலாம். சினிமாவிலும் தலை காட்டி பாடி நடித்த ஒரு சங்கீத வித்வான்.
முசிரி சுப்பிரமணிய ஐயர் (9.4.1899 – 25.3.1975) குரலை பல இசைத்தட்டுகளில் இன்றும் கேட்கலாம். ஐயரின் மாணவர்கள்
டி. கே. கோவிந்தராவ்
மணி கிருஷ்ணஸ்வாமி
பம்பாய் சகோதரிகள்
சுகுணா புருசோத்தமன்
சுகுணா வரதாச்சாரி
முசிறி பெற்ற விருதுகள்:சங்கீத கலாநிதி விருது, 1939.மியூசிக் அகாதெமி, சென்னை, சங்கீத நாடக அகாதமி விருது, 1957. இசைப்பேரறிஞர் விருது, 1963, தமிழ் இசைச் சங்கம், சென்னை.சங்கீத கலாசிகாமணி விருது, 1966. தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, 1971இல் பத்ம பூஷன். 1999இல் அவரது பெயரில் தபால் தலை வெளியிடப்பட்டது.
நான் முதலில் அவரது குரலை கேட்டது விரித்த செஞ்சடையாட என்ற இசைத்தட்டு மூலம். ராகமாலிகை மூலம் என்னை கவர்ந்தவர் . நீங்களும் அவர் குரலைக் கேட்டு மகிழ இந்த யூட்யூப் லிங்க் க்ளிக் பண்ணுங்கள்
https://youtu.be/K-QBo57pay8