பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
‘அவனுக்கு ஒண்ணும் வராதுன்னு சொல்லு ”
”தாத்தா, உங்க மேலே ஒரு கம்பளைண்ட்” என்றான் என் பேரன்.
”அடே பையா, என் மேலே ஏதாவது கம்பளைண்ட் பண்ணாத யாராவது ஒருத்தர் உண்டா , இருந்தால் அவர் பெயரைச் சொல்லு?” என்றேன்.
”நீங்க ஒரு வேலையும் செயறதில்லே. எப்போதும் கம்பியூட்டரிலே உட்கார்ந்து படிப்பது, எழுதறது இப்படியே பொழுது போக்கினா என்ன அர்த்தம்?”
”போற வழிக்கு புண்யம்னு அர்த்தம்”
”அதனால் தான் நிறைய பேர் உங்களை வந்து பார்க்கறா, பேசறாளா? சரி, நேத்திக்கு சாயந்திரம் ஒரு மாமா வந்து உங்க கிட்டே பேசிண்டே அழுதாரே எதுக்கு?”
”அவரா. ஸ்பென்சர் மஹாலிங்கம். ரொம்ப நல்லவர் டா. மகா பெரியவா பத்தி பேசினாலே கண்லே அளவுகடந்த பக்தியால் ஜலம் காட்டாறு மாதிரி பெருகும்” அப்போது வந்த கமலா டீச்சரும் பேச்சில் சேர்ந்து கொண்டாள்.
”நமஸ்காரம் தாத்தா சார். என்ன விஷயம் பேசினேள், எனக்கும் சொல்லுங்கோ” — கமலா டீச்சர்.
. ”திரும்ப அந்த சம்பவத்தை சொல்கிறேன். மற்ற எல்லோரும் கூட ஆர்வமாக கேட்பார்கள், படிப்பார்கள்
.+++
” மஹா பெரியவாவை தரிசனம் பண்ணி நன்மை பெறாதவா யாரு? அவர் கருணா சமுத்திரம் இல்லையா. 1980-ல் கேரளா கவர்னராக இருந்த திருமதி ஜோதி வெங்கடாச்சலம் கிட்டே P.A வா இருந்தவர் ஸ்ரீ டி.வி.சுவாமிநாதன். ஒரு தடவை டிசம்பர் மாச பனி குளிரிலே உடம்பு சரியில்லை. அடிக்கடி ஜுரம் வந்து மெலிந்து கொண்டே போனார். என்னென்னவோ டெஸ்ட் பண்ணி, மருந்து, மாயம் எல்லாம் எடுத்துக்கொண்டும் வியாதி குணமாகலே . திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் நுரை ஈரல் எக்ஸ்பர்ட்கள் வந்து பரிசோதனை பண்ணி நுரையீரல் மேல் பக்கத்திலே புற்றுநோய் வந்திருக்குன்னு சொன்னார்கள். விஷயம் கவர்னர் கிட்டே போச்சு. ஜோதி வெங்கடாச்சலம் ரொம்ப நல்ல மனிஷி. சுவாமிநாதனை மெட்றா ஸுக்கு உடனே அழைச்சுண்டு போய் ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். பிரபல டாக்டர் K .V. கிருஷ்ணசுவாமி, தீவிரமாக டெஸ்ட் பண்ணினார்.
”கான்சர் மாதிரி தெரியல. ஏதோ ஒரு அழுத்தம் இருக்கு. அதை மறுபடியும் பரிசோதனை பண்ணனும்” என்றார் டாக்டர் கிருஷ்ணஸ்வாமி. இன்னொரு பெரிய டாக்டர் செரியனும் பார்த்தார். எக்ஸ்ரே படம் எல்லாம் அலசி பார்த்து செரியன் இது கான்சர் தான் என்கிறார்.
’இடது நுரையீரல் மேலே புற்றுநோய் இருக்கிறது. உடனே ஆபரேஷன் பண்ணவேண்டும். நாலு மாதம் காலம் விட்டு வைத்ததே தப்பு. உடனே ஏற்பாடு பண்ணுங்கள்” என்றார் செரியன்.மூன்று மாதத்தில் டெல்லி போகவேண்டும் ரொம்ப முக்கியம். என்ன செய் வது? அங்கேயும் டாக்டர் கோபிநாத் கிட்டே இன்னொரு அபிப்ராயம் பரிசோதனை செயது பார்த்து விடுவோமா? என்று சுவாமிநாதனுக்கு குழப்பம்.
டெல்லி போய் டாக்டர் கோபிநாத் பரிசோதனை செயது அவரும் செரியன் சொன்னதையே எதிரொலித்தார்.
”’சில மருந்துகள் விடாமல் சாப்பிடுங்கள். மூன்று மாதத்தில் கொஞ்சம் நிலைமை எப்படி செயற்படுகிறது என்று பார்த்துவிட்டு ஆபரேஷன் பண்ணுவோம். கவலைப் படாதீர்கள் ” என்றார் டாக்டர் கோபிநாத். கவைலப்படாதீர்கள்!’ என்றார்.
சுவாமிநாதன் மஹா பெரியவா பக்தர். ரொம்ப பெரிய டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். இருந்தும் பெரியவா கிட்டே நான் ஏன் இன்னும் போகலே. என்ன ஆச்சு எனக்கு? என்று கவலை வந்தது அவருக்கு. ஆரம்பத்தி லேயே பெரியவாளை ஏன் சரணடையாமல் போய்ட் டேன்” என்று நெஞ்சில் வருத்தம்.
அப்போது கர்நாடகா -மஹாராஷ்ட்ரா எல்லையில் எங்கோ பெரியவா முகாம் போட்டிருந்த சமயம். ஸ்வாமி நாதனின் நண்பர் ஜோஷி என்பவர் மஹா பெரியவா பக்தர். அவர் ஒருநாள் ஸ்வாமிநாதனுடைய கஷ்டத்தை பெரியவா கிட்டே எடுத்து சொன்ன போது பெரியவா மௌனமாக கேட்டார். ஒண்ணும் சொல்லலே. முகத்திலே தேஜஸ் சூரிய பிரகாசம் தோன்றியது. ஒருமணி நேரம் கழிந்தது.
”’ஜோஷி , கண்ணா, நீங்க ரெண்டு பேரும் ஸ்வாமி நாதன் கிட்டே சொல்லிடுங்கோ. அவனுக்கு வியாதி எதுவும் ஒண்ணும் வராது!’’ — பேசும் தெய்வம் சொல்லிவிட்டது.
ஜோஷி ஓடிப்போய், டெல்லியில் இருந்த சுவாமி நாதனுக்கு டெலிபோன் பண்ணி
”உங்களுக்கு ஒன்னும் வராது கவலைப்படவேண்டாம் னு பெரியவா சொல்லிட்டா. கவலைப்படாதேங்கோ” என்கிறார். எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் சுவாமிநாதனுக்கு.!
அதிசயமாக அன்றிலிருந்து ஜுரம் கொஞ்சம் கொஞ்சமாக நின்றது. சோர்வு,ஆயாசம் தளர்ச்சி எல்லாம் குறைய ஆரம்பித்தது. கவலையும் போக ஆரம்பித்தது. எடை கூடியது. ரெண்டு மாத காலம் ஓடியது. மறுபடியும் இருமல், ஜுரம் வர ஆரம்பித்தது. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் நுரையீரல் மேல் பக்கம் கருப்பாக ஒரு நிழல். புற்று நோயின் ரெண்டாம் கட்டம்.
’ஆபரேஷன் பண்ணினால் உடல் தாங்காது. கெமோ தெராபி பண்ணவேண்டும். வேதனையாக இருக்கும் என்ன செய்வது. வேறே வழியில்லையே ” என்றார் டாக்டர் கோபிநாத்.கவர்னர் ஜோதி வெங்கடா சலத்துக்கு ஒரு அவசர கடிதம் எழுதி அனுப்பினார். அதில், மூன்று மாதங்களுக்குள் சுவாமிநாதனின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும்” என்றும் டாக்டர் குறிப்பிட்டிருந்ததை அறிவித்தார் .
கவர்னர் ஜோதி வெங்கடாச்சலத்துக்கு சுவாமிநாதனை ரொம்ப பிடிக்கும். நல்ல பணியாளர். அவர் சிபாரி சில் சுவாமிநாதனை சென்னைக்கு கொண்டு வந்து ரயில்வே ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.
”இதயம் பலவீனமாக இருக்கிறதால் ரத்தம் தேங்கிப் போயிருக்கிறது. குழாய் வெடிக்கும் அபாய கட்டம்.. ஆபரேஷன் ‘செய்யவேண்டும்’ என்றார்கள் டாக்டர்கள்.
ஸ்வாமிநாதன் ஜோஷியை கூப்பிட்டு நிலைமையை சொன்னார் பெரியவா கிட்டே சொல்லுங்கோ, அவர் அனுக்ரஹம் எனக்கு கடைசியா வேணும். அவள் நேரிலே வந்து தரிசிக்க வழியில்லன்னு கண்லே ஜலம் வருது.” சுவாமிநாதனுக்கு பெரியவாளைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம். பேசும் போதே நாக்கு குழறியது. அழுகைக்கு இடையே சேதி சொன்னார் சுவாமிநாதன்.
ஜோஷி பெரியவாளிடம் ”ஸ்வாமிநாதன் மனைவி மாங்கல்ய பிக்ஷை கேக்கறா ” என்று தெரிவித்தார். மஹா பெரியவா மௌனம். சற்று நேரம் கழித்து ஸ்நானம் செய்ய நீர் நிரப்பிய தொட்டியில் இறங்கி நின்றார். ஜோஷியை கூப்பிட்டார்.
”சுவாமிநாதனுக்கு என்ன ஆச்சு என்று மறுபடியும் சொல்லு” ஜோஷி டாக்டர்கள் சொன்னதை சொன் னார்.
தொட்டி தண்ணீரில் மூன்று முறை மஹா பெரியவா முழுகி எழுந்தார்.
”ஜோஷி, சுவாமிநாதனுக்கு தான் ஒண்ணுமே ஆகாதுன்னு சொன்னேனே. மறுபடியும் அதையே சொல்றேன்னு அவன்கிட்டே போய் சொல்லு”
ஸ்வாமிநாதன் பெரியவா தனக்கு புனர்ஜன்மம் அளித்தார் என்று கேள்விப்பட்டு மகிழ்ந்தார்
.ஆஸ்பத்ரியில் டாக்டர்கள் தொடர்ந்து 15 நாள் எண்ணற்ற பரிசோதனைகள் நடத்தினார்கள். மேற்கொண்டு ஆபரேஷன் பற்றி பேசினார்கள்.
அப்போது தான் அந்த அற்புதம் நடந்தது.
திருவனந்தபுரத்தில் டெல்லியில் எடுத்த எக்ஸ்ரேயில் இருந்த கருப்பு நிழல் திடீரென்று சென்னையில் எடுத்த எக்ஸ்ரேயில் காணாமல் போனது. சுவாமிநாதனுக்குப் பிறவியிலேயே மூக்குத் தண்டில் ஒரு வளைவு. அதனால்
அடிக்கடி ஜலேதாஷம் பிடிக்கும் போது சளி வெளியே வராமல் உள்ளே நுரையீரலில் சேர்ந்து உறைந்து போனது. அதால் அழுத்தம் . அதுதான் கரு நிழல். அதைப் போய் கான்சர் என்று காபரா பண்ணியிருக் கிறார்கள்.
சுவாமிநாதனுக்கு ஒரு சிறு அறுவை சிகிச்சை . மூக்கு தண்டின் வளைவு சரி செய்தார்கள். சிகிச்சை முடிந்து பூரண குணம் அடைந்தார். காஞ்சிபுரம் ஓடினார். மஹா பெரிய வைத்யநாதர் காலில் விழுந்தார்.
மஹா பெரியவா சிரித்துக் கொண்டே ஸ்வாமி நாதன் தம்பதிக்கு பிரசாதம் கொடுத்தார். ”என்னடா ஜோஷி நம்ம சுவாமிநாதன் வந்திருக்கானே பாத்தியோ. புத்து நோய் அது இதுன்னு அவனை பயமுறுத்தி னாளாமே” என்கிறார்.
++
எண்ணற்ற ஸ்வாமிநாதன்கள் மஹா பெரியவா வைத்யநாதனைப் பற்றி சொல்லி வருகிறார்கள். டாட்கர்களும் இந்த லிஸ்டில் உண்டு. அடேடே நான் படித்த, பார்த்த, எந்த வைத்யசாஸ்திரத்திலும் இப்படி ஒரு நிவாரணம் இருந்ததில்லையே என்று மூக்கின் மேல் இரு கை விரல்களையும் வைத்தவர்களும் அதில் சேர்த்தி.