பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN சாதுர்மாஸ்யம்
அவரை நிழல் மாதிரி பின் தொடர்ந்து கொண்டே இருக்கும் தொண்டர்கள் எத்தனையோ பேர். அவர்களோடு மஹாபெரியவா கொஞ்சம் பிரீயாக free ஆக இருக்கும் நேரத்தில் அவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது தெரிந்த விஷயம். எனக்கு அவர் கண்ணாடிக் கூண்டிலிருந்து, என் எதிரில் படமாக இருந்து கொண்டே மானஸீகமாக என் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது என் பாக்யம். நூறு வருஷங்களில் சந்நியாசியாக அவர் 13 வயதிலிருந்து சொல்லாத விஷயம் என்ன பாக்கி இருக்கிறது?
”என்னடா அப்படி ஏதோ கண்ணிலே ஒரு ஏக்கத்தோடு ஏதோ கேக்கணும்னு பார்க்கிறே . சீக்கிரமே கேட்டுடு” ”பெரியவா மாதிரி சந்யாசிகள் சாதுர்மாஸ்யம் னு ஒரு நாலு மாசம் ஒரே இடத்திலே தங்கி பூஜை, ப்ரவசனம் விரதம்னு இருக்கிறாளே அதைப் பத்தி சொல்லுங்கோ”
வருஷா வருஷம் ஸ்ராவண (ஆவணி) பௌர்ணமி யிலிருந்து கார்த்திகை பௌர்ணமி வரைக்கும் 4 மாசம் தான் சாதுர்மாஸ்யம். ஸ்ராவண ஏகாதசி துவாதசி லேயிருந்து கார்த்திகை ஏகாதசி துவாதசி வரைக்கும். ஆவணி ஏகாதசியில் மஹா விஷ்ணு ஆதிசேஷ சயனம் கொள்வதால் அது ”சயன ஏகாதசி” கார்த்திகை ஏகாதசியில் விஷ்ணு பகவான் சயனம் நீங்கி விழுத்துக் கொள்ளும் அந்த நாளுக்கு ” உத்ஸான ஏகாதசி” என பெயர். இந்த நாலு மாசம் மழைக்காலம். புழு பூச்சிகள் ஆங்காங்கே வெளியே நடமாடும். கால் பட்டு அவை அழியக்கூடாது என்பதற்காகவும் அஹிம்சா காரணமாக ஒரே இடத்தில், தங்கி, சத்சங்கங்கள், பஜனைகள், வேதாந்த காலட்சேபங்களில் ரிஷிகள், மஹான்கள், சந்யாசிகள் பெரியோர்கள் ஆகியோர் ஈடுபடு வார்கள்.குடும்பஸ்தர்கள் சாதுர்மாஸ்ய காலத்தில் கோயிலிலோ, ஏதாவது பொது இடத்திலோ, நதி தீரத் திலோ உட்கார்நது கொண்டு இறைவனைப் பற்றி, பாடல்கள், ஜபங்கள், பாராயணங்கள், ஸ்தோத்ரங்கள், த்யானங்கள் என்று பகவத் சிந்தனையில் ஈடுபடுவார்கள்.
என் போன்ற சன்யாசிகள் பன்னிரெண்டு மாதங்களில், எட்டு மாதம் யாத்திரை செய்து விட்டு, இந்த சாதுர் மாஸ்ய 4 மாச காலம், ஓரே இடத்தில் தங்க வேண்டும். பொதுவாக சன்யாசிகள் ஒரு ராத்திரிக்கு மேல் ஒரு இடத்தில் தங்கமாட்டார்கள். பெரிய ஊராக இருந்தால் மூன்று நாள் தங்கலாம் என்று சாஸ்திரம். சாதுர் மாஸ்ய விரதத்தில் சில மாதங்களில் பால், பருப்பு வகைகள் காய்கறிகள் மோர் தயிர் உபயோகிக்காத கட்டுப்பாடும் உண்டு. மஹாராஷ்டிரத்திலும், தென் மாநிலங்களிலும் சிலர் சாதுர்மாஸ்யம் பின் பற்று பவர்கள் உண்டு. முதலில் சாதுர்மாஸ்யம் கடைபிடித்தவர் வேத வியாசர்.