UNCERTAINTY OF LIFE J K SIVAN

வாழ்வின் உண்மை – நங்கநல்லூர் J K SIVAN

வேத காலத்து ராஜா முக்தசூடனுக்கு ரெண்டு பிள்ளை கள். ஹேமசூடன் , மணிசூடன். கல்வி கேள்வி களில் குருமாரிடம் கற்று தேர்ந்து, ராஜ வம்சத்துக்கு தேவை
யான ஆயுத பயிற்சி வேட்டை யாடுதல் ஆகியவற்றில் வல்லமை பெற்றவர்கள். ஒருநாள் வேட்டையாட காட்டுக்கு சென்று பல கொடிய மிருகங்களை கொன்றார்கள். திடீரென்று எங்கும் இருள் சூழ்ந்தது. இருட்டில் ஒருவரை ஒருவர் பார்க்க கூட முடியவில்லை. ஹேமசூடன் தட்டுத்தடுமாறி ஒரு முனிவர் ஆஸ்ரமத் தை அடைகிறான். அங்கு சிறிய எண்ணெய் தீபம். அந்த ஆஸ்ரமத்தில் தனியே ஒரு பெண் மட்டும் இருக்கிறாள்
.”யாரம்மா நீ தனியாக இந்த காட்டில் பயமில்லாமல் வசிக்கிறாய்? உன் அப்பா யார்?’
‘முதலில் உட்காருங்கள், பசியோடு களைத்து வந்திருக் கிறீர்கள், இந்தாருங்கள் பழங்கள்.சாப்பிடுங்கள். நீர் குடியுங்கள்.”
ஹேமசூடன் பசியாற உண்டான். களைப்பு நீங்கியது. அந்த பெண் பதில் சொன்னாள்:
”வியாக்ரபாத ரிஷியின் வளர்ப்பு மகள் நான்.என் பெயர் ஹேமலேகா. இங்கே வேணா என்கிற நதியில் வித்யுத்ப்ரபா என்ற தேவ நங்கை ஒருநாள் வந்து குளித் தாள். அப்போது அங்கே வந்த சுஷேணா என்கிற ராஜா அவள் அழகில் மயங்க அந்த தேவ கன்னியும் அவனை விரும்ப இருவரும் சேர்ந்து அங்கே வாழ்கிறார்கள். வித்யுத்ப்ரபாவுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அதை அங்கே விட்டுவிட்டு தேவகன்னிகை சென்று விடுகி றாள். நான் தான் அந்தக் குழந்தை. என்னை ஆற்றங் கரையில் பார்த்த வியாக்ரபாதர் எடுத்து வளர்த்தார். அதுமுதல் இங்கேயே அவருக்கு சேவை செய்து வாழ்கிறேன்.இது தான் என் கதை”
சற்று நேரத்தில் ஆஸ்ரமம் திருப்பிய அங்கே வியாக் ரபாத ரிஷி வருகிறார். ஹேமசூடன் அவரை வணங்கு கிறான். அவனுக்கு ஹேமலேகாவைப்பிடிக்கிறது என்று உணர்ந்த ரிஷி இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறார். ஹேமலேகா ஒரு ரிஷிகுமாரியாக எதிலும் பற்றற்று இருப்பதைக் கண்ட ஹேமசூடன் ஏன் நீ இவ்வாறு எதிலும் பற்றில்லாமல் துறவியாக வாழ்கிறாய்? என்று கேட்கிறான்
”.நான் எதில் பற்றில்லாமல் உள்ளேன், எது பற்று, எது பற்றின்மை என்பதை நீயே விளக்கு? எனக்கு தெரிந்து ”எது ஒரு சமயம் சுகம் தருகிறதோ அதுவே மற்றொரு சமயம் துன்பம் தரும். இதோ பார் நெருப்பு, குளிர் காலத்தில் அது உடலுக்கு இதமாக இருக்கிறது, வெயில் காலத்தில் அது உடலுக்கு தேவையற்றதாக சுடுகிறது. அது மாதிரி தான் மனைவி, குழந்தைகள், தனம் செல்வம் எல்லாமே. எது இன்பமாக சுகம் என தோன்றுகிறதோ அதுவே துன்பத்தின் காரணமாகிறது. ஆசையினாலும் பற்றினாலும் தானே எல்லா துன்பங் கள் உண்டாகிறது?”என்று கேட்டாள் ஹேமலேகா .”ஆம் என்று தலையாட்டினான் ஹேமசூடன்.”நான் ஒரு கதை சொல்கிறேன் கேள் என்று ஹேமலேகா ஆரம்பித் தாள்.
ஒரு ராஜா அதிரூப அழகியாக ஒரு பெண்ணை மணந் தான். அவளே உயிர், உலகம் என்று வியந்தான். ஆனால் ராணிக்கு ஒரு குதிரை லாய வேலைக்காரன் மேல் காதல். வேலைக்காரன் ராஜாவுக்கு மதுவில் மயக்க மருந்து கலந்து குடிக்க வைத்து ராணிக்கு பதிலாக ஒரு பணிப்பெண்ணை ராணியாக படுக்க வைத்துவிட்டு ராணியோடு குலாவுவான். குடி போதை மயக்கத்தில் ராஜா அருகில் இருப்பது தனது ரூப சுந்தரி யான ராணி என்று மகிழ்வான். இப்படியே பல நாள் ஓடியது. ஒருநாள் ராஜாவின் மதுவில் வேலைக் காரன் மயக்க மருந்தை கலக்க மறந்து போகவே ராஜா தன்ன ருகே இருந்த பணிப்பெண்ணை தண்டித்து ”எங்கே ராணி என்று கேட்டு நடந்ததை அறிகிறான். மது, மாது இரண்டாலும் தன் வாழ்வு பாழானதை உணர்கிறான். துறவறம் பூண்டு கானகம் செல்கிறான். கிட்டத்தட்ட ராஜா பர்த்ருஹரி கதை தான் போல் இருக்கிறது இது.
இவ்வாறு பல உதாரணங்கள் சொல்லி ஹேமலேகா ஹேமசூடனுக்கு வாழ்வு நிலையாமை, பற்றினால் வரும் துன்பங்கள் எல்லாம் உணர்த்துகிறாள். அவள் தரும் சில அற்புத கேள்வி பதில்கள் கீழே தருகிறேன்.
கொஞ்சம் நிதானமாக படித்து அனுபவியுங்கள். யோசியுங்கள்
1. யார் அடிமை?”
ஐம்புலன்களின் பிடியில் பற்றுகளை, ஆசைகளை, தேடுபவன்”
2.எது விடுதலை?
உலக பந்தங்களிலிருந்து விடுபடுவது.
3. எது கொடிய நரகம்?
நாம் வளர்க்கும் தேகம்.
4. ஸ்வர்கபுரிக்கு எது வழி?
எல்லா ஆசைகளையும் அறுத்து எறிவது.
5. நரகத்தின் வாசல் எது தம்பி?
பெண்ணாசை.
6. எது ஸ்வர்கத்துக்கு வழிகாட்டும்?அஹிம்சை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமை.
7. நமக்கு உண்மையான எதிரிகள் யார்?
நமது புலன்களைத் தவிர வேறே எதுவாக இருக்க முடியும் சொல்?
8. எவன் பரம ஏழை ?
எண்ணற்ற ஆசைகளை மனதில் தேக்கி வைத்துள்ள வன்.
9. எவன் செல்வந்தன்?
எப்போதும் திருப்தியோடு காணப்படுபவன்.
10. எதை அம்ருதம் எனலாம்?
விருப்பமற்ற ஆனந்தம்.
11. எது நம்மை தண்டிக்கிறது?
”நான்,எனது, ”என்ற பற்று.
12. மதுவைவிட போதை தருவது எது?
பெண்ணாசை
13. எவன் குருடன்?
பேராசையில் மதியிழந்து குழியில் விழுந்தவன்.
14. எது கொடியவிஷம்.
புலன்கள் தரும் அல்ப இன்பம்.
15. எவன் எப்போதும் துன்பத்தில் ஆழ்பவன்?
உலக சுகபோகங்களை நாடுபவன்.
16. எல்லோர் அறிவுக்கும் எட்டாதது எது?
பெண் மனம் அவள் செயல்பாடு.
17. எவன் மிருகம்?
அஞ்ஞானி.
18.எவர் நட்பை நாம் விலக்க வேண்டும்?
முட்டாள்கள் தீய எண்ணம் கொண்டவர்கள் பாபிகள்.
19.எது இழிவானது?
உழைக்காமல் யாசித்துண்பது
.20.எவன் உண்மையில் பிறந்தவன்?
மறுபிறப்பு அற்றவன்.
21. எவன் உண்மையில் இறந்தவன்?
மறுபடி இறப்பு இல்லாதவன்.
22. எதிரிகளிலேயே மோசமானவன் யார்?
காமம், கோபம்,போய், பேராசை, இச்சை.
23. உண்மையான கொள்ளையர்கள் யார்?
தீய எண்ணங்கள்
24. மிருகத்தை விட கேவலமானவன் யார்?
தனது கர்மாவை உணர்ந்து நிறைவேற்றாதவன், ஆத்ம ஞானம் இல்லாதவன்.
25. எது சட்டென்று மின்னல் போல் பிரகாசித்து மறைவது?
செல்வம், இளமை, வாழ்க்கை.
26.எதை விடாமல் நினைவில் கொள்ளவேண்டும்?பிரபஞ்ச அநித்ய மாயை, ப்ரம்மன் இருக்கிறது என்ற ஞானம்.
27. கடைசியாக ஒரு கேள்வி. எது சரியான உண்மை யான செயல்?
எது கிருஷ்ணனுக்கு பிடிக்குமோ அது. தான தர்மம், பிறருக்கு உபகாரம், நன்மை செய்தல்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1419

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *