POONTHANAM J K SIVAN

பூந்தானம் – நங்கநல்லூர் J K SIVAN
”ரெடியா? கிருஷ்ணனிடம் போகலாம் வா”
நான் ஸ்ரீ மந் நாராயணீயம் ஸ்லோகங்களை தமிழில் விளக்கம் கொடுத்து எழுதிய புத்தகம் 680 பக்கங்க ளோடு ஒரு புத்தக வடிவில் எனக்கு இன்று கூரியரில் வந்தது. அட்டையில் குருவாயூரப்பன் சிரித்தான். என் குருவாயூர் யாத்திரை நினைவுகள் வந்தது.
திருவனந்தபுரத்தில் ஒரு நண்பர் இருந்தார், இப்போது இல்லை, அவரை பூந்தானம் என்போம். அவரோடு குருவாயூரப்பனை மூன்று முறை தரிசித்ததும் நினை
வுக்கு வந்தது. ஆச்சர்யமாக இன்று மலையாள தெய்வீக கவிஞர் பூந்தானம் ஜென்ம தினம் என்றும் ஞாபகம் வந்தது. 1547ல் மாசி மாசம் அஸ்வினி நக்ஷத்ரத்தில் .நம்பூதிரி குடும்பத்தில் கீழத்தூர் என்கிற கிராமத்தில், பெரிந்தலமன்னா, தாலுக்காவில் மலப்புரம் மாநிலத்தில் பிறந்தவர். மற்ற மதத்தினரை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எண்ணற்ற ஹிந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு க்ஷேத்திரங்கள், ஸ்தலங்கள், பெயரை வைப்பது வழக்கம். குலதெய்வம் சுவாமி பெயர், தாத்தா பாட்டி பெயர் வைப்பதும் ஒன்று தான். அந்த தாத்தாக்கள், பாட்டிகள் எல்லோ ருமே அப்படி சுவாமிபெயர், ஊர் பெயர் கொண்டவர் கள் தானே. இப்போது அந்த பழக்கம் தேய்ந்து விட்டது. புதுசு புதுசாக என்னென்னவோ வாயில் நுழையாத பெயர்களை ஸ்டைலாக இருக்கட்டும் என்று வைக்கி றார்கள். ஆனாலும் தமிழர்களில் எத்தனையோ பேர் இன்னும் சிதம்பரம், பழனி, மதுரை, ராமேஸ்வரன், காசி, திருப்பதி, காளஹஸ்தி, கைலாசம், வைகுண்டம், சுசீந்திரன், எல்லாம் இருக்கிறார்கள். மலையாள தேசத்தில் வீட்டு பெயரை சூட்டிக்கொள்வார்கள். பூந்தானம் என்ற வீட்டு பெயர் கொண்ட பக்தர் கிருஷ்ணன் மீது இனிமையாக மலையாளத்தில் நிறைய ஸ்லோகங்கள் எழுதியவர். குழந்தை இல்லாத குடும்பம். ”நான் இருக்கேனே உன் குழந்தையா? போதாதா?” என்று குருவாயூரப்பனே அவரிடம் சொன்னான். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்யம்.
காலம் சென்றது. பாகவதத்திலும் கிருஷ்ண கானத் திலும் தனது காலம் ஓட ஆனந்தமாக எப்போதும் மனதி ல் கிருஷ்ணனோடு இணைந்து வாழ்ந்த பூந்தா னத்தின் பூலோக வாழ்க்கை முடியப்போகிறது என்று கிருஷ்ணனுக்கு தெரிந்தது. பூந்தானத்தை இனி தன்னுடன் வைத்துகொள்ள ஆசை அவனுக்கு.
“பூந்தானம் என்னிடம் வா” என்று அழைத்தான் கிருஷ்ணன். பூந்தானம் தலை கால் புரியாமல் ஆனந்தத்தில் நர்த்தன மாடினார். தெருவெல்லாம் ஓடினார். பார்ப்பவர்கள் பைத்தியம் என்று தான் சிரிப்பார்கள். ஆனால் அவருடைய பிரம் மானந்தம் அவருக்கு தானே தெரியும் . கிராமத்தில் தெருவில் யார் கண்ணில் பட்டாலும் கேட்டார்;
” கிருஷ்ணன் என்னை வரச்சொல்லி இருக்கி றான். நான் வைகுண்டம் போகப்போகிறேன். உங்களில் யார் யாருக் கெல்லாம் என்னோடு கிருஷ்ணனிடம், வைகுண் டத்துக்கு போகவேண்டும் என்ற ஆசையோ உடனே என்னோடு வாருங்கள். போகலாம்”
கொஞ்சம் யோசியுங்கள், அப்போதும் சரி, இப்போதும் சரி. யாராவது பூலோக வாழ்க்கை யை விட்டு மேல் மேல் லோகமோ, கோ லோகமோ போகலாம் வா என்று அழைத்தால் வருவார்களா? சினிமாவுக்கு வா, டூர் போக லாம் வா, குற்றாலம் போகலாம் வா” என்றால் வருவார். கைலாசம் போகலாம், வைகுண்டம் போகலாம் வா” என்று கூப்பிட்டால் ஒரே ஓட்டமாக திரும்பிப் பார்க்கா மல் ஓடுவார்கள். மரணமடைந்ததும் தான் அங்கே போக முடியும். இந்த ஆள் சாகக் கூப்பி டுகிறான் என்று பயப்ப டுவார்கள். ஆகவே, ஊர்க்காரர்கள் ஒரே ஓட்டமாக பூந்தானத்திடமிருந்து கொரோனாவை கண்டு பயந்து ஓடுவது போல் தலை தெறிக்க ஓடினார்கள். அவர் வீட்டில் பணிபுரிந்த ஒரு வயதான பெண்மணி மட்டும் அவரிடம் வந்தாள் .
“ஐயா என்னையும் உங்களோடு கிருஷ்ணனிடம் அழைத்து செல்கிறீர்களா?” என வேண்டினாள்.
ஒருநாள் குறித்த நேரத்தில் பூந்தானத்துக்கு அறிவித் தபடி, ஒரு விமானம் வந்து வீட்டு வாசலில் இறங்கியது. தனது பூத உடலோடு பூந்தானமும் அந்த முதியவளும் அதில் புறப்பட்டு வைகுண்டம் சென்று கிருஷ்ண னோடு கலந்தார்கள்.
இந்த செய்தி காட்டுத்தீ போல் எங்கும் பரவியது. மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி காதிலும் விழுந்தது.
பக்தியை வெளிப்படுத்த மொழியோ இலக்க ணமோ தேவையில்லை. உள்ளத்தில் பக்தி பூர்வ எண்ணம் ஒன்றே போதுமே என்று உணர்ந்து தலை ஆட்டினார். கண்களில் நீர். ” அடாடா, இவருக்கு என்ன தெரியும், வெறும் மலையாளத்தில் மட்டும் இலக்கணம் இல்லா மல் பாடும் அறிவிலி. என்னைப்போல் ஸம்ஸ்க்ரிதம் அறிந்தவரா பூந்தானம்” என்று இகழ்ந்தவர் இல்லையா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *