இப்படியாக துவங்கியது தான் கல்திரை யுக்தி. கர்பக்ருஹத்திற்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்து விடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான்.
இதை கேள்விப்பட்ட மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த ஐந்து சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலையும் , விக்ரஹங்களையும் காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.
மெதுவெடுத்தபின் ஒரு நாள் மதுரை சொக்கேசனுக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சுந்தரேசா என்று கதறியபடியே கல் திரை எழுப்பினார்கள்.
வெளியே மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப்போலவே நகை, விளக்கு, மாலை, எல்லாம் ஏற்பாடு செய்தார்கள்.
வந்தான் மாலிக்கபூர். ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். பல ஆயிரம் பேரை மதம் மாற்றினான். விக்ரஹத்தை உடைத்தான். செல்வங்களை எல்லாம் சூறையாடி கொண்டு போனான்.
அதன் பின் 48 ஆண்டுகள் மீனாக்ஷி ஆலயத்தில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, கோவிலே பாழாக போனது.
அப்போது மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் புனருத்தாரண வேலை துவங்கியது. இடிந்து கிடந்தது சிவலிங்கம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.அப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார்.
ரஹஸ்யத்தை சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும் வரை எப்படியாவது நான் இதை சொல்லிவிட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துகொண்டு இருக்கிறேன்” என்று சொல்லி தள்ளாத வயதிலும், தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று சந்தோஷத்துடனும் அழுது கொண்டே அந்த முதியவர் எல்லா விவரமும் சொன்னார்.உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்…..
உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்பக்ருஹத்தில் உள்ளே இருந்து வரும் அந்த நறுமண தெய்வீக வாசம் அப்படியே இருந்தது.
48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும்போது எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது.
உண்மையான சாந்நித்யம் கொண்ட சொக்கநாதரை தரிசித்த அனைவரும் பக்தியில் திளைத்தனா்.
அனைத்து சோக நிழல்களும் மறந்தன, மறைந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீண்டும் புது பொலிவுடன் மீனாக்ஷி அம்மன் ஆலயம் கோவில் திறக்கப்பட்டது. இதில் முக்யம் அன்று தை வெள்ளிக்கிழமை.