குமர  குருபரர்  —  நங்கநல்லூர்  J K  SIVAN  

குமரகுருபரர் என்ற  பெயர்  கேள்விப்பட்டதுண்டா? 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அருமையான  சிவ பக்தர், தமிழ்ப் புலவர்வர்  தருமபுரம் ஆதீனம்  அவரை ஆதரித்தது.   தூத்துக்குடி  மாவட்டத்தில்  ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஊரில்  பிறந்த சைவ  வேளாளர்.  அப்பா சண்முக சிகாமணிக் கவிராயர்.  அம்மா  சிவகாம சுந்தரி. ஐந்து வயது வரை பேசாதவர். திருச்செந்தூர் முருகன் சந்நிதியில்  பேச்சு வந்தது.   அங்கேயே  திருச்செந்தூர் முருகனைப் போற்றிப் பாடியவர். தருமபுர ஆதின  ,மாசிலாமணி தேசிகரின்  சீடர்.. அங்கே தான் சைவ சித்தாந்தம்  பாடமாயிற்று.
குமரகுருபரர்  இளம் வயதிலேயே கடவுளைத்தேடி குருவைத் தேடி வீட்டை விட்டுச் சென்றவர்.  ஒரு  அசரீரி ஒலி  ”மதுரைக்கு ப் போ”  என்றதால்  மதுரை சென்று திருமலை நாயக்கர்  ஆதரவில் வாழ்ந்தார். மதுரை மீனாட்சி அம்மன் மேல் மீனாக்ஷி யம்மை பிள்ளைத்தமிழ்  இயற்றினார்.  “வருகைப்பருவம்” என்னும் பகுதியை கோவில் மேடையில் அமர்ந்து  பாடியபோது  மதுரை மீனாக்ஷி அம்மனே சிறு பெண் வடிவத்தில் வந்து குமரகுருபரருக்கு முத்து மாலை பரிசளித்தாள். மீனாக்ஷி அம்மனைப் போற்றி மதுரைக் கலம்பகம், மீனாக்ஷி  அம்மை பிள்ளைத்தமிழ், நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றினார் .திருவாரூர் தியாகராஜனை  வணங்கி  “திருவாரூர் நான்மணி மாலை” பாடினார்.
தர்மபுரி ஆதீன மடத்தில் சீடராகி, சன்யாசம் பூண்டு  குமரகுரு தம்பிரான் என்று அறிமுகமானார். வடக்கே  முஸ்லீம் ஆட்சியில் ஹிந்து சனாதன தர்மம்  நசுக்கப்படுவதை அறிந்து காசிக்கு சென்றார். சைவ சமயத்தைப் பரப்பினார். அங்குள்ள கேதாரேஸ்வர் கோவிலைைப் புதுப்பித்தார். மேலும், காசியில் மடத்தை நிறுவி இறக்கும்வரை அங்குத் தங்கியிருந்தார்.  இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார்.அவர்  எழுதிய  நூல்கள்: மதுரைக் கலம்பகம்,
நீதிநெறி விளக்கம்,
திருவாரூர் நான்மணிமாலை,
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்,
காசிக் கலம்பகம்,
சிதம்பர மும்மணிக்கோவை,
சகலகலாவல்லி மாலை
கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம்

இனிமேல்  அற்புதமான  நீதி நெறி விளக்கம்  என்றுநூலில்  101  பாடல்கள் அற்புதமாக அவர்  இயற்றியதில் சிலதை அறிவோம். எனது ஐந்தாம் வகுப்பில்  நீதி நெறி விளக்கம் செய்யுள் சிலவற்றை   ஆசிரியர் மனப்பாடம் செய்ய   சொல்லிக்கொடுத்தது  ஞாபகம் வருகிறது.  ஒன்றைச் சொல்லி  நிறுத்துகிறேன்.
 ”பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பதொன் றுண்டு  பிறர்பிறர்
சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்  ”

நாம்  குமரகுருபரர் சொல்வதை பின்பற்றாதவர்கள். பிறரிடம்  நல்ல பெயர்  வாங்க  ஒருவன் என்ன செய்ய வேண்டும்?  எவனைப் பற்றி பேசுகிறாயே, எழுதுகிறாயோ,  மறக்காமல்  நீ செய்ய வேண்டிய  ஒரு காரியம் இருக்கிறது.  அந்த மனிதனிடம்  இருக்கும் நல்ல விஷயங்களை பற்றி  பிறருக்கு  எடுத்துச் சொல்.  அவனிடம் இருக்கும்  குறைகளை கண்டுகொள்ளாதே .  குறை  எல்லோரிடமும் இருக்கிறது. நீ யார்  இன்னொருவன் குறையை எடுத்துச்சொல்ல?  அப்படி  நீ  மற்றவர்களைத் தாழ்த்தி  சொல்லாமல்  உயர்த்தி மட்டும் சொல்வதால் உனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்கிறார்.  ஆனால் நாம் ஒவ்வொருவரும் அப்படி செய்வதில்லை.  எந்த பத்திரிகை,  யு ட்யூப்,  வீடியோ, டிவி , வாட்சாப்  பார்த்தாலும்  மற்றவர்களை வாய்க்கு வராத  வார்த்தைகளைப் பேசி ஒருவர் மேல் மற்றவர் மலத்தை வாரி வீசிக்கொண்டு  நாற்றம் எடுக்கிறதே…   குமரகுருபரர்  இந்த காலத்துக்கு  ஏற்றவர் இல்லையோ?.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *