கல்யாணமாம் கல்யாணம் நங்கநல்லூர் J K SIVAN
ஆவணி தை மாதங்கள் போல கல்யாண மாதங்கள் வந்துவிடுவதற்கு முன்பே நிறைய கல்யாண பத்திரிகைகள் வந்துவிடுகிறது. ஒரேநாளில் மூன்று நான்கு கல்யாணங்கள். அதில் ஒன்றிரண்டாவது சென்னையில் எங்காவது நடந்தால் கட்டாயம் போயே ஆகவேண்டும். நண்பர்கள் உறவுகள் அப்படி ரொம்ப நெருக்கமானவர்கள். நாம் வரவில்லையென்றால் உடனே தெரிந்துவிடும். பிய்த்து, பிரித்து மேய்ந்து விடுவார்கள்.கல்யாணத்தில் நாதஸ்வர தவில் சப்தம் அத்தியாவசியம். ஆனால் யாரும் இப்போதெல்லாம் கேட்பதில்லை. எங்கோ மேடையிலிருந்து வாத்யார் கண்ணுக்கு தெரியும் இடத்தில் அமர்ந்திருந்து கொண் டு எப்போது கெட்டி மேளம் என்று கையசைக் கிறாரோ அப்போ பீ பீ என்று உச்சஸ்தாயி யில் ஒலிக்க வேண்டும். தவில் தோல் கிழிந்து போகும்படியாக அடிக்கவேண்டும். நாயனக்கார கோஷ்டியும் யாரும் கேட்பதில்லையே என்று கவலைப் படுவதில்லை. அவர்கள் கவனமும் எப்போது முகூர்த்தம் முடியும். பணத்தை வாங்கி கொண்டு சாப்பிட்டு விட்டு போகலாம் என்பதிலேயே இருக்கிறது. சங்கீதம் காற்றில் பறக்கிறது.
என்போல் ஒரு சில கிழடுகள் அரைச் செவிடுகள், அரைகுறை ஞானத்தோடு அவர்களை , பிலஹரி காபி, தன்யாசி காம்போதி பாடுங்கள் ஆலாபனை செய்யுதங்கள் என்று கேட்டு மகிழ்விக்குமோ தொந்தரவு செய்யுமோ ஏதோ ஒன்று. ஒரு ராகத்தை லயித்து வாசித்துக் கொண்டிருக்கும்போது வாத்யார் கை தூக்கி நிறுத்து என்று கட்டளையிடுவார்.
இப்போதெல்லாம் நாதஸ்வர கோஷ்டிக்கு எப்போது நிறுத்தவேண்டும் கெட்டி மேளம் வாசிக்க வேண்டும் என்று தெரிகிறது.
இப்போது மந்திரங்கள் ஒலிபெருக்கி யில் கேட்கிறது. வாத்தியார்கள் நடுநடுவே உபன்யாசம் வேறு செய்கி றார்கள். ஆனால் ஒருவரும் அதை கேட்பதில்லை. நாற்காலிகளை வட்டமாக போட்டுக்கொண்டு அரசியல்,ஊர்க்கதை பேசுகிறார் ரக்ள். எல்லோர் கையிலும் புஷ்பம், அக்ஷதை கொடுத்தாலும் அதை மணமக்கள் மேல் போட முடியாமல் வீடியோ எடுப்பவர்கள் சூழ்ந்து கொண்டு தலையில் வாங்கிக் கொள்கிறார்கள்.
மாங்கல்ய தாரணத்தின் போது கெட்டி மேளம் கண்டிப்பாக வாசிக்க முக்ய காரணம், அசுபமான வார்த்தைகள் யாரிடமிருந்தாவது, ”ஐயோ ,அச்சச்சோ போன்றவையோ தும்மல்களோ வேறு அமங்கல வார்த்தைகளோ காதில் விழக்கூடாது என்பதற்காக. நாதஸ்வர தவில் வாத்தியங்கள் மங்கள வாத்யம் எனப்படுபவை.
அப்போதெல்லாம் பெண்ணை மடியில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு மாப்பிள்ளை தாலி காட்டியதும் அப்பா குடம் குடமாக அழுவார்.
உறவினர்கள் நண்பர்கள் ஊர்க்காரர்கள் பெண் வீட்டாரை, பிள்ளை வீட்டாரை ஆலிங்கனம் செய்து ”மாப்பிள்ளை வந்தாச்சா, மாட்டுப்பொண்ணு வந்தாச்சா” என்றெல்லாம் சந்தோஷமாக விசாரிப் பார்கள். பெரிசுகளிடம் ”பேரன் ஆம்படையா வந்தாச்சா, பேத்தி ஆம்படையான் வந்தாச்சா” ன்னு பல் இல்லாத ஜோடிகள் விஜாரிப்பதும், மற்றவர்கள் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிப்பதும் வழக்கமான முறை. .பாட்டி தாத்தாக்கள் மதிக்கப்பட்டு அவர்களது ஆனந்தம் கண்களில் பொங்கித் ததும்பும். அப்புறம் ஆசீர்வாதங்கள் வாத்யார் எல்லாருடைய பரிசுகளை யும் வேதம் ஓதியிட்டு கொடுப்பார்கள். ”
சுபே சோபனே முஹுர்த்தே…. …. மாமா மாமி ஆசீர்வாதம் பதினாயிரம் கட்டி வராகன்..” என்று சொல்லி ஒரு வெள்ளி ரூபா காசு கொடுத்த காலம் அது. முதலில் வீட்டு பெரியவர்கள் நெருங்கிய உறவுகள் அப்புறம் மற்றவர்கள் என்று ஆசீர்வாதம் தொடரும். கோவில்களிலிருந்து ஸ்வாமிக்கு சாத்திய மாலை பிரசாதங்கள், குலதெய்வம் கோவில் பிரசாதங்கள் வரும்.அப்புறம் தான் சாப்பாடுக்கு போவார்கள்.
இப்போது வரிசையாக ரேஷன் கடையில் அரிசி வாங்குவது போல் ஒரு பக்கம் நின்று மேடையேறி அடுத்த பக்கம் இறங்குகிறார்கள். பரிசைக் கொடுப்ப தை விட வீடியோ போட்டோ எடுப்பதற்கு தான் முக்கியத்வம். அடுத்த கணமே பாய்ந்து சாப்பாடு பந்திக்கு ஓடுகிறார்கள் இடம் பிடிக்க. சாப்பிட்ட பிறகு வாசலில் ஒரு மஞ்சள் பை தேங்காய் வெற்றிலை ஒரு மஞ்சள் வாழைப் பழத்தோடு கையில் திணித்தபிறகு அது தான் அவுட் பாஸ்.
எல்லோர் பையிலும் பக்ஷணங்கள் பாக்கெட்டுகள் இருப்பதில்லை. அதற்கென்று சிலர் நியமிக்கப்பட்டு அவர்கள் யாருக் கெல்லாம் அந்த உபரிப் பையை அளிக்கவேண்டும் என்று அறிந்து கொடுப்பதும் வழக்கமாகி விட்டது.
ஒரே கட்டிடத்தில் ஒவ்வொரு மாடியில் ஒரு கல்யாணம் என்ற கன்பியூஷன். நான் ஏதோ ஒரு கல்யாணத்துக்கு போக நினைத்து இன்னொரு கல்யாணத்துக்குள் நுழைந்து முன் பின் தெரியாத பெண்ணுக்கோ பிள்ளைக்கோ பரிசு கொடுத்துவிட்டு சாப்பிட்டு விட்டு வந்தவன்.
நிறைய விஷயங்கள் நமது ஹிந்து சம்பிரதாயத்தில் புரிந்து கொள்ளாமலேயே கல்யாணங்கள் நடைபெறு கிறது. நடத்திவைப்பவருக்கோ,
சம்பந்தப்பட்டவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ எடுத் துச் சொல்ல வாத்தியார்கள் தயாரில்லை, அவர் கள் தயாராக இருந்தாலும் கேட்பதற்கு ஆளில்லை. மாப்பிள்ளைகள் மந்திரங்கள் சொல்வ தில்லை, மேடையிலிருந்த தபடியே மற்றவர்களோடு பேசுவது, ஜாடை காட்டுவது, தலையாட்டுவது கையாட்டுவது போன்ற வானர சேஷ்டைகள், ஸ்ரத்தையற்ற செயல்கள் அருவறுப்பானவை.
எப்போது சம்பிரதாயப்படி ஒரு காரியம் செய்ய முற்படு கிறோமோ, அதில் கொஞ்சமாவது ஸ்ரத்தை, நம்பிக்கை வேண்டாமா? பெண் பிள்ளை பெற்றோர்களுக்கு இதெல்லாம் கவனிக்க நேரமில்லை. தெரிந்தவராகில் உறவினர்களை கண்டு தேடி பிடித்து வாழ்த்து பெறுவது, ”சாப்பிட்டுவிட்டு போங்கோ”சொல்வதற்கு தான் நேரம் சரியாக இருக்கிறது. வாத்தியார்கள் கோஷ்டி தேங்காய்களை, வஸ்திரம், தக்ஷிணை இத்யாதி களை பையில் திணித்து புறப்படுவதற்கு தயாராகிறார்கள். எல்லாம் இயந்திர வாழ்க்கை யாகிவிட்டது.
இன்னும் நிறைய சொல்கிறேன்.