PERMANENT FAITH J K SIVAN

பொய்யல்ல நிஜம் தான். – நங்கநல்லூர் J K SIVAN
எதிர்க்க வேண்டும், மறுக்க வேண்டும், என்ற எண்ணத்தோடு பேசுபவனை லக்ஷியமே பண்ண வேண்டாம். அவர்களை பொறுத்தவரை ராமாயணம் மஹா பாரதம், புராணங்கள், எல்லாம் உண்மையில் நடக்காமல் பொய்யாகவே கூட இருக்கட்டுமே.
அதற்காக ஸ்ரீ ராமர் சரித்திரமோ, ஸ்ரீ கிருஷ்ணன் மஹாத்ம்யயமோ, கீதோபதேசமோ, மதிப்பிழந்து போய் விடுமா? அதன் மூலம் நாம் பெறும் படிப்பினை குறைந்து விடுமா? கோயிலில் பக்தி இன்னும் அதிகரிக்கும். . துக்கத்தை போக்கி அருள் சுரக்கச் செய்யும். அதற்காகத்தான் கோயில்கள் அமைக்கப்பட்டன. கோயில்கள் ஏன் அவசியம் என்று புரிந்து கொண்டால் போதும். கோயிலை எப்போ, யார், கட்டினார்கள்? என்று ஆராய்ச்சி செய்வது வீண் வேலை.
தேவர்கள் வந்தார்கள், தவம் செய்தார்கள், தெய்வங்கள் வரம் கொடுத்தன, பூமிக்கு வந்தன, பெண்ணை கல்லாக்கினார்கள், கல் பெண்ணாக மாறியது என இந்த காலத்தில் நடக்காததால் புரளி என்று தோன்றுகிறது.
அதிலும் சூரியனை உதிக்காமல் நிறுத்துவதெல்லாம் நம் சக்திக்கு முடியாததால் வெறும் கட்டுக்கதை என நினைக்க தோன்றுகிறது.
நமக்கு தெரியாதது, நாம் அறியாதது பொய்யாகி விடுமா? நாம் என்ன எல்லாம் அறிந்தவர்களா? இப்போது முடியவில்லை, நடக்கவில்லை என்பதற்காக எந்த காலத்திலும் நடக்காது, முடியாது என யார் எந்த தைரியத்தில் ஆதாரத்தில் சொல்லி விட முடியும்?
வேத மந்திர சக்தி, உயர்ந்த தவம், யோக அனுஷ்டானம் ஆகியன முந்தைய காலத்தில் இருந்துள்ளதற்கு பல நூல்கள், புத்தகங்கள் ஆதாரமாக உள்ளன. இதனால் தேவசக்திகளெல்லாம் இந்த லோகத்தினராலேயே எளிதில் உணர முடிந்தது. வெளிச்சம் இருந்தால் கூடவே நிழலும் இருக்கும். அதே போல் தேவசக்திகளை போலவே அசுர சக்திகளும் இருந்து கொண்டு தான் உள்ளன.
தேவ அசுர வதம் இப்போதும் நன்மை – தீமைக்கு இடையில் போராட்டமாக இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த காலத்தில் இந்த சக்திகளை தபோ சக்திகளைக் கண்களால் உணர முடிந்தது. இப்போதும் மனிதர்களின் கண்ணுக்கு புலப்படாத மர்ம சக்திகள், ஒலி-ஒளி அலைகள் நம்மை சுற்றி உள்ளதாக இருப்பதாக விஞ்ஞானமும் சொல்கிறது. இதற்கும் ஒரு படி மேலே போய், நல்ல வேவதைகள், துர்தேவதைகள் உள்ளன என்பதையும் விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. அதற்கு பிறகும் நம்ப முடியாது என எப்படி சொல்ல முடியும்.
அதிசயமான விஷயங்களை வரலாறுகளாக ஏற்றுக் கொள்வதில்லை. பல்லவ மன்னனும், பாண்டிய மன்னனும் ஜைன மதத்தை விட்டு, சைவத்திற்கு மாறியதற்கு எந்த எழுத்துப்பூர்வ ஆதாரங்களும் இல்லை தான். அதனால் அவர்கள் மாறியது இல்லை என்று ஆகி விடுமா, ஏதாவது காரணம் இல்லாமல் அல்லது ஏதாவது பெரிய விஷயம் நடக்காமல் இரு பெரும் ராஜாக்களும் தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொண்டிருக்க முடியுமா?
சமீபத்தில் திருச்சி யாத்திரையின் போது ஸ்ரீரங்கத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு யானை பொம்மை, சர்வ ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு நான்கு தந்தங்களோடு வாகனமாக மண்டபத்தில் பார்த்தேன். இப்போது யானைக்கு ரெண்டு தந்தம் தானே. இது பேத்தல், முட்டாள் தானம் என்று சொல்லமுடியும். பழைய சரித்திர ஆராய்ச்சியாளர்கள் பெரியபெரிய விலங்குகள் ஆரம்பகாலத்தில் இருந்தன,அதில் யானை பெரிதாக,உடல் முழுதும் ரோமமாக, நான்கு தந்தங்களோடு வாழ்ந்தது என்கிறார்கள். ராமாயணத்தில் திரிசடை நான்கு தந்தங்கள் கொண்ட யானையை கனவில் காண்கிறாள். ராமன் வானரப் படையோடு இலங்கையில் நுழைந்து
ராவணனை கொல்வது போல் கனவில் கண்டதை சீதையிடம் சொல்கிறாள் என்று வருகிறதே. புராணங்கள் இதிகாசம் இதைச் சொன்னால் பொய்யா?
ஒரு காலத்தில் பெரிய உருவத்தில் மனிதர்கள், விலங்குகள் இருந்ததாக எலும்புகள், படிமங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இதையே புராணங்களும் சொல்கின்றன. பூர்வ ஜென்மங்கள் பற்றி புராணங்கள் சொன்னால் நாம் சந்தேகிக்கிறோம். ஆனால் அதே விஷயம் செய்திதாள்களில் வந்தால் உண்மை என்று நம்புகிறோம். புராணங்களில் சிலவை கற்பனையாக இருக்கலாம். பிற்காலத்தில் வந்தவர்களின் இடை செருகல்களாக இருக்கலாம். அதற்காக அதில் குறிப்பிட்ட அனைத்துமே , எல்லாமே பொய், கற்பனை, கட்டுக்கதை என்று ஆகி விட்டாதே.
நமது மன அழுக்கை, சித்த மலத்தை போக்குவற்காகத்தான் புண்ய கதைகள், புராணங்கள் ,இதிகாசங்கள் இயற்றப்பட்டன. அதை மனதில் வைத்து பயபக்தியோடு படித்தால் அதற்குரிய பலன் கிடைக்கும். ஆட்சேபங்களுக்கும், சந்தேகங்களுக்கும் இடம் இருக்காது. ஆராய்ச்சி, விஞ்ஞானம் என சொல்லி விட்டால், அதன் பெயரால் என்ன சொன்னாலும் நம்பி விடுவது தான் மூட நம்பிக்கை.
ராமாயணம் பாரதம் எல்லாம் கற்பனையாக இருந்தாலும் கூட ‘நல்லது செய்தவன் வாழ்ந்தான். கெட்டது செய்தவன் அழிந்தான். கெட்டவர்களையும் பல சந்தர்ப்பங்களில் இறைவன் கை தூக்கி விட்டிருக்கிறான் என்பதே நமது மனதில் அழுத்தமாக பதிய வைக்கிறது. அது தானே நோக்கம். முக்யம்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *