திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN
நக்கீரர்
இரண்டாவது அறுபடை வீடு:. திருச்செந்தூர்
வரிகள் 78 முதல் வரை.
திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் 78
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்,79
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் 80
கூற்றத்து அன்ன, மாற்று அரு மொய்ம்பின்81
கால் கிளர்ந்தன்ன வேழம் மேல் கொண்டு, 82
முருகனின் அறுபடைவீடுகளில் கடலோரத்தில் இருப்பது திருச்செந்தூர். ஓவென்று அலைகள் ஓயாமல் சீறி வீசி கரையில் மோதுவதால் அலைவாய், சீரலைவாய், மரியாதைக்குகந்த க்ஷேத்ரம் என்பதால் திரு முன்னாலே இருக்கிறது. திருச்சீரலைவாய் என்றால் என்னது என்று தெரியாமல் தலையைச் சொரியும் காலம் இது.திருச்செந்தூர் என்றால் புரியும்.
ஒருகாலத்தில் ஜயந்திபுரம் என்று கூட பெயர் உண்டு. முருகப்பெருமான் பலம் கொண்ட ஒரு பெரிய ஆண் மத யானையின் மேல் ஏறி பவனி வருகிறார். யானையின் அகன்ற நெற்றியில் பல புள்ளிகள். அங்குசத்தால் அப்பப்போ குத்து வாங்கிய தழும்புகள். அந்த யானையின் நெற்றி கவசம் போல ஒரு கனமான அகல முன்பக்கத்தை காக்கும் கனமான உலோகத் தகடு. நெற்றியின் மேல் ஒளிகுன்றாத, வாடாத, புஷ்பங்களால் ஆன மாலைகள் நிறைய புஷ்பங்கள் தொங்கி அசைகிறது.
யானை வேகமாக நடக்கும். அது நடப்பது யமனே பெரிய உருவம் கொண்டு ஒரு புயல் சீறி வருவது போலிருக்கும் என்கிறார் நக்கீரர். யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்களே. யானைக்கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் யானையின் இரு பக்கமும் அது நடக்கும்போது டாண் டாண் என்று எங்கும் கேட்க ஒலிக்கிறது.
தொடரும்