மஹா பெரியவா விரும்பிய தீக்ஷிதர்-
நங்கநல்லூர் J K SIVAN
தமிழ் தெரிந்த ஒவ்வொரு ஹிந்துவுக்கும் சேங்காலிபுரம் ப்ரம்ம ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் பெயரைத் தெரியா விட் டாலும் குரல் நன்றாக பரிச்சயமுண்டு. 66 வருஷங்கள் வாழ்ந்தவர் (2.8.1903 – 30.10.1969) உபன்யாச சக்கர வர்த்தி. அவர் சொல்லி குருவாயூரப் பனின் நாராயணீ யம் கேட்டவர்கள் பாக்கியசாலிகள். இன்னும் யூட்யூபில் சில உபன்யாசங்கள் இருக்கிறது.
தஞ்சாவூரில் சேங்காலிபுரம் கிராமத்தில் பிறந்தவர். அப்பா சுப்ரமணிய தீக்ஷிதர். இவரை சின்ன முத்தண் ணாவாள் என்று ஊரிலெல்லோரும் அழைப்பார்கள். பெரியப்பா வைத்யநாத தீக்ஷிதர் தான் பெரிய முத்தண்ணாவாள். பேசும் தெய்வம் மஹா பெரியவா போற்றிய ஒரு மஹான்.
அனந்தராம தீக்ஷிதரின் குரு பருத்தியூர் பெரியவா கிருஷ்ண சாஸ்திரிகள். தீக்ஷிதர் முத்தண்ணாவாள் குருகுலத்தில் அக்ஷராப்யாசம் அவரிடம் பெற்றார். மஹா பெரியவா அவருக்கு ”பிரசன்ன ராகவம்” என்ற புத்தகத்தில் பரிசளித்தார். அதிலிருந்து தீக்ஷி தருக்கு ஸ்ரீ ராம பக்தி பெருகியது. இதிஹாஸ புராணங்களில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கடலங்குடி நடேச சாஸ்திரி களிடம் சாஸ்திரங்கள் வேதங்கள் பாடமாகியது. நடேச சாஸ்திரிகள் பெண்ணை மணந்தார்.கும்பகோணம் வேத தர்ம பரிபாலன சபையில் முதலில் பிரவசனம் பண்ணியவர் தீக்ஷிதர். வேத தர்ம சாஸ்திர பரி பால னத்துக்காக இந்த சபையை ஆரம்பித்தவர் மஹா பெரியவா.குருவாயூரில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹங்கள் நிகழ்த்தினார். .கேரளாவில் த்ருப்யார் என்கிற ஊரில் ராமர் ஆலயத்தில் ஒரு நவாஹம் நடத்தவேண்டும் என்று கட்டளை யிட்டதே ஸ்ரீ ராமர் தான் என்று சிருங்கேரி சங்கராசார்யர் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் குறிப்பிட்டு அந்த நவாஹத்தில் பங்கேற்றார். பகவான் ஸ்ரீ ராமரே இந்த நவாஹம் நடப்பதில் ஆர்வம் கொண் டதை அறிந்து எல்லோரும் அதிசயித்தார்கள். தீக்ஷிதர் உபன் யாசத்தை பல்லாயிரக் கணக்கானோர் ஆர்வமாக கேட்டு ரசித்தார்கள். மஹா பெரியவா அறிவுரையின்படி பல கேசட்டுகள் வெளியாயின. இப்படி விற்கப்பட்ட கேசட்டுகள் வருமானம் ஸ்ரீ தீக்ஷிதர் அதிஷ்டானம் நிர்மாணிக்க உதவியது.
.மறைவுக்கு முன்பு ஸ்ரீ தீக்ஷிதர் சன்யாசம் மேற் கொண் டார். சேலம் சின்ன திருப்பதியில் தீக்ஷிதர் அதிஷ்டானம் உள்ளது. நான் சென்று தரிசித்திருக்கிறேன்.
குருவாயூரப்பன் மேல் மேல்பத்தூர் நாராயண நம்பூதிரி இயற்றிய ஸ்ரீமன் நாராயணீயத்தில் ஒரு சிறு பகுதியை தீக்ஷிதரின் குரலில் கேட்டு மகிழ இதனுடன் இணைத் தி ருக்கிறேன்.கேட்டு மகிழவும்.
https://youtu.be/6dt1XrwAo8k?si=8zcwrrJdyMwSL7An