கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா
கேள்வி பதில் ரத்னமாலை 131-145
131. எதை அழகு எனகருதவேண்டும்?
நல்ல குணம் ஒன்று தான் ஒருவனுக்கு அழகு. பௌடர் மேக்கப் இல்லை.
132 அப்படியென்றால் அழகான வார்த்தைகள் எவை?சத்யம் உண்மை,நிஜம்,நியாயம், நேர்மை த்வனிக்கும் சொற்கள் தான் அழகானவை.
133. ஒருவன் செல்வந்தன் என்றால் எதற்கு, எப்போது புகழ் சேரும்?
அவன் செல்வம் அவன் குடும்பத்துக்கு மட்டும் பயன் பட்டால் என்ன பிரயோஜனம். தான தர்மம் முகம் தெரியாத பலருக்கு உதவும். அவர்கள் போற்றுவது உலகமெங்கும் எதிரொலிக்கும்.
134. எப்போது ஒரு குலம் முகத்தில் ஒளி பிரதிபலிக்க பெருமைப்படும்?
அதில் எவராவது அன்பும், பண்பும், தாராள மனப்பான் மை,இரக்கம்,கருணை,எளிமை கொண்ட நற் குணவான்
களாக இருக்கும்போது.
135. எவன் காலடியில் உலகமே அடிமையாக நிற்கும்?எவன் இனிமையாக மிருதுவாக எல்லோருக்கும் நன்மை பயக்கும் சொற்களாக பேசி தர்மத்தை கடைபிடிக்கிறானோ, அவன் தான் உலகத்தின் எஜமானன்.
136. எவனுக்கு அபாயமே இல்லை?
தானும் நேர்மையாக, எளிமையாக இருந்து, பெரியோர், மூத்தோர்,சான்றோர் வாக்கை மதித்து பின்பற்றுகி றானோ அவனுக்கு.
137. உலகில் எவன் துன்பம் துயரத்தில் மூழ்கி இருப்பவன்?
தன்னிடத்தில் அளவற்ற செல்வம் இருந்தும், அதை புதையல் காக்கும் பூதமாக வைத்துக்கொண்டு எவருக் கும் உதவாமல் செய்பவன் சதா பயம்,துக்கம், துன்பத்தில் ஆழ்ந்திருப்பவன்.
138. இரவும் பகலும் எந்த சிந்தனை நமக்கு இருந்து கொண்டே இருக்கவேண்டும்.?
இறைவன் திருவடி மட்டுமே நெஞ்சில் சதா நிறைந்தி ருக்கவேண்டும். இந்த உலக வாழ்க்கை பற்றிய நினைவு மறையும்.
139. ஒவ்வொருவரும் எதை சம்பாதிக்க வேண்டும் ?ஞானம், செல்வம், பலம், புகழ், புண்யம் இதைத் தவிர வேறென்ன இருக்கிறது சம்பாதிக்க.
140. எது சுத்தமாக நல்ல குணத்தை அழித்து சாப்பிட்டு விடும்?
கஞ்சத்தனம்,கருமித்தனம், இருக்கவே கூடாது.
141. நம்முடைய முதல் எதிரி யாரப்பா?
வீணாக்கும் காலம் ஒன்றே தான். நேரத்தை வீணாக்கு பவன் வாழ்வை சுருக்கிக் கொள்கிறான்.
142. மூச்சை காட்டிலும் உயர்ந்தது எது?
அவரவர் ஸ்வதர்மம், நல்லோரின்நட்பு, சத்சங்கம் மிகவும் அத்யாவஸ்யம்.
143. வாழையடி வாழையாக நிலையாக வாழவைப்பது?எளியோர், தக்கவர்களுக்கு, அளிக்கும் மனமுவந்த தான தர்மங்கள்
144. விஷம் எங்கே இருக்கிறது?
கெட்டவர்கள் ரூபத்தில் உலகெங்கும் விஷம் பரவி உள்ளது. ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
145. தீண்டத் தகாத நீசன் யார்?
கொடுத்த வார்த்தையை மீறுபவன், நம்பிக்கை துரோகம் செய்பவன்.