HINDU BELIEFS AND PRACTICES – J K SIVAN

ஹிந்து சனாதன தர்ம கோட்பாடுகள் –  நங்கநல்லூர்  J K  SIVAN

நம்மிடம் ஒரு பழக்கம். நமக்குத் தெரியாதவைகள்  எல்லாம் வெறும் பேத்தல்,  மூட நம்பிக்கை,  பத்தாம் பசலி, பழைய பஞ்சாங்கம் என்று விஷயம் தெரியாமலேயே  அபிப்ராயம் சொல்வது.  பகுத்தறிவு வாதிகள் என்று சிலர்  இப்படி  பேசுவதற்கு,   இப்படி  அரைகுறையாக இருப்பதற்கு,   வருந்துகிறோம்.  கீழ்க்கண்ட விஷயங்களை பகுத்து அறிந்தால் நமது பழக்க வழக்கங்களின்  மஹிமை, பகுத்தறிவுக்கு   புலப்படும்.
ஹிந்துக்கள்  மூட நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் செய்கைகள்  வேடிக்கையானவை  என்று கேலி பேசும் நண்பர்களுக்கு மட்டும் அல்ல. விஷயங்கள் முழுமையும் தெரியாத நமக்கும்  சேர்த்து சில உண்மைகளைச்சொல்லவேண்டும்.

அரச மரத்தையும் வேப்ப  மரத்தையும் விடி  காலையில்  சுற்றும் முட்டாள்  பெண்கள்  என்று  கேலி செய்பவர்கள் அறியாத உண்மை: பெண்கள் விடிகாலை சுத்தமாக குளித்து விட்டு 108 முறை வேப்ப  மரத்தையும் அரச மரத்தையும் சுற்றுவதால் காலையில் அந்த மரத்தின் கீழ்  உள்ளிழுக்கும்  மூச்சுக்  காற்று உடலுக்கு மிக மிக  நல்லது, ஆரோக்கியமானது  என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 108 முறை சுற்றுவது உடல் பயிற்சியுமாகும்.

சந்தியாவந்தனம் பண்ணுபவர்கள்   108 முறை காயத்ரி ஜபம்  பிராணாயாமம் பண்ணும்போது  பூரகம், கும்பகம், ரேசகம், என்று  மூக்கின் ஒரு துவாரம் வழியாக காற்றை சுவாசித்து  உள்ளிழுத்து,  கொஞ்சம் உள்ளடக்கி,  அப்புறம்  ஒரே சீராக  அடுத்த  நாசி துவாரம் வழியாக வெளியேற்றுவது மனதில் அழுத்தத்தை குறைக்கிறது.  சிறந்த  யோகப்பயிற்சி இது. நுரையீரல்கள் வலுவடைகிறது.  நீண்ட ஆயுளைத் தருகிறது. நேராக உட்காரும்போது முதுகுத் தண்டு வலுப்பெறுகிறது. இது விஞ்ஞானிகள் கண்டறிந்து சொல்வது.
கோவிலுக்குச் செல்வது பயனுள்ளது. கர்பகிரஹத்தில் சட்டையின்றி  உடலில்  மூலஸ்தான  கர்பகிரஹ வாசலில் நிற்பது அர்த்தமுள்ளது.   கற்பகிரஹத்திலிருந்து  வெளியேறும் மின்காந்த அலைகள்  நம் உடலில் நேரடியாக  படும்போது மிக மிக  நோயற்ற வாழ்வுக்கும்  ஆரோக்கியத்துக்கும்  அவசியம்  என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
கோவிலில் துளசி ஜலம்  பிரசாதமாக பெற்று  பருகும்போது  உடலில் நோய் கிருமிகள் பரவாமல் தடுக்கும் சக்தி துளசிக்கு இருப்பதை  பிரசாதமாக  பக்தியோடு உபயோகப்படுத்திக் கொள்கிறோம்.    ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்.
மந்த்ரங்கள்  பாராயணம் பண்ணுவதை கேட்கிறோம், கோஷ்டியாக சேர்ந்து உச்சாடனம் செய்கிறோம். மந்த்ரங்கள் உச்சரிப்பதை கேட்கும்போது நம்மை அறியாமல் ஒரு  உன்னத  உணர்ச்சி பெறுகிறோம்.  வேதமந்த்ரங்களுக்கு அதிக சக்தி இருப்பது  அநேகருக்கு தெரியவில்லை.  ஒரே சீராக  மீட்டராக   சந்தமாக  ஒலிக்கும் பீஜாக்ஷர மந்த்ரங்கள்  கேட்பவர்கள்  உடலின் பல  சீர்கேடுகளை சரி செய்கிறது.  ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.  சில சப்தங்கள் சக்தி வாய்ந்தவை என்பது  ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த  உண்மை.
நெற்றியில் குளித்து விட்டு தரித்துக் கொள்ளும் விபூதி  சாம்பல்  சிரசில் உள்ள அதிக பக்ஷ  நீரை  உறிஞ்சி வெளியேற் றுகிறது என்று பலருக்கு தெரியவில்லை. தலை நோவு, தலை சம்பந்தப்பட்ட வியாதி எதுவுமே  வரவே வராது.  நான் சொல்லவில்லை, நிபுணர்கள் சொல்வது இது.
இன்னொரு விஷயம் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன். மீதி அப்புறம்  சொல்கிறேன்.
பெண்கள் நெற்றியில், வகிட்டில் குங்குமம் இட்டுக்  கொள்கிறார்களே  அதனால் தீய  வசிய சக்திகள் அவர்களை  நெருங்காது.  தீங்கு செய்யாது.  அவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைப்பது  வேறு விஷயம். ஆனால்  கொடிய சக்திகளிடமிருந்து குங்குமம் பெண்களை பாதுகாக்கிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *