ஹே கோவிந்தா 34- நங்கநல்லூர் J K SIVAN

ஹே கோவிந்தா 34- நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரரின் பஜகோவிந்தம்

34. गुरुचरणाम्बुज निर्भर भक्तः संसारादचिराद्भव मुक्तः ।
सेन्द्रियमानस नियमादेवं द्रक्ष्यसि निज हृदयस्थं देवम् ॥ ३१॥

gurucharaNaambuja nirbhara bhakataH saMsaaraadachiraadbhava muktaH .
sendriyamaanasa niyamaadevaM drakshyasi nija hR^idayasthaM devam. .. (31)

குரு சரணாம்புஜ நிற்பர பக்த: சம்சாரா தச்சிராத் பவ முக்தா
ஸேந்த்ரிய மானச நியமாதேவம் திராக்ஷ்யசி நிஜ ஹ்ரித யஸ்தம் தேவம்

இந்த பதிவோடு ஆதி சங்கரரின் பஜகோவிந்த ஸ்லோகங்கள் விளக்கம் நிறைவு பெறுகிறது. இதை ஒரு சின்ன புஸ்தகமாக்கி இலவசமாக விநியோகிக்க எவராவது விருப்பம் கொண்டிருந்தால் என்னை அணுகினால் நான் இந்த தொகுப்பை வழங்குகிறேன். அல்லது நானே அச்சகத்தோடு தொடர்பு கொண்டு ஆயிரம் பிரதிகள் அச்சிட வைக்கிறேன்.
என்னை அணுக: 9840279080

பஜகோவிந்தம் ஸ்லோகங்களை ஆதி சங்கரரும் அவரது அருமைச் சீடர்களும் கை நிறைய, மனம் தெளிய, வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துக் கூறினார்கள்.

சங்கர குருவின் தாமரைத் திருவடிகளில் பணிந்து வணங்கிய பக்த கோடிகளே! உங்கள் மனதில் உள்ளே குரு வழி காட்ட இருக்கும்போது இந்த சம்சார சாகரத்தை பற்றிய கவலை வேண்டாம். அவர் தான் வழி காட்டி விட்டாரே. கோவிந்தனை, அவன் நாமத்தை, துணையாக கொண்டு சுலபமாக கடக்க முடியுமே. இந்திரியங்களின் ஈர்ப்புக்கு அடிபணியாமல், மனம் திடப்பட வழி கிடைத்து விட்டது. பவ சாகரம் இனி ஒரு சிறிய குட்டை. எளிதில் அதை டபக் என்று தாண்டமுடியும்.

பஜ கோவிந்தத்தை ரசித்து அர்த்தம் தெரிந்து சொல்லும்போது, பாடும்போது, ஒரு புதிய சக்தி, ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் மனம் நிரம்பி வழிகிறது. அதை உங்கள் பக்கம் அனுப்புவது பலருக்கு பிடித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளும்போது மேலும் இது போல் நிறைய விஷயங்கள் அநேகம் இருக்கிறதே அதையெல்லாம் கூட சேர்ந்து அனுபவிக்கலாமே. காசா பணமா என்ற எண்ணம் கூடுகிறது. முடிந்தவரை நிறைய எழுதுகிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *