ஆதி சங்கரரின் பஜகோவிந்தம்33. भजगोविन्दं भजगोविन्दं गोविन्दं भजमूढमते ।
नामस्मरणादन्यमुपायं नहि पश्यामो भवतरणे ॥bhajagovindaM bhajagovindaM govindaM bhaja muuDamate .
naamasmaraNaadanyamupaayaM nahi pashyaamo bhavataraNe ..பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே,
நாமஸ்மரணாதன்ய முபாயம் நஹி பஸ்யாமோ பவதரணே
”ஏ முட்டாளே! நீ எதில் சிக்கிக்கொண்டிருக்கிறாய் என்பது கூட தெரியாமல் அல்லல்பட்டு உழல்பவனே! இந்த மீளமுடியாத சம்சார சாகரத்தில் மூழ்கிக் கொண்டு தவிக்கிறாயே உனக்கு இருக்கும் ஒரே வழி இதிலிருந்து தப்ப, அதோ அந்த நீல நிற புல்லாங்குழல் காரனை பிடித்துக் கொள்வது தான்.
கடவுள் எவ்வளவு நீண்ட ஆயுளை நமக்கு கொடுத்திருக்கிறான். குறைந்தது 50-60 வருஷங்கள் வாழ்வோர் அதிகம். இத்தனை நீண்ட காலத்தில் நாம் என்றாவது ஒரு நாள் இவ்வளவு நீண்ட ஆயுளைக் கொடுத்ததற்காக அவனை நன்றியோடு நினைக்கிறோமா. வியாதிகள் வந்தால் அவை விலகி இன்னும் நீண்ட நாள் வாழவும் ஆசைப்படுகிறோம். நோய் வந்தால் எவ்வளவு ஆனாலும் செலவு செய்து பிழைத்து வாழ தவிக்கிறோம். ஒருவருமே மரணம் வேண்டும் என்று சொல்வதில்லை. இன்னும் இன்னும் என்று தான் ஆயுளை விரும்புகிறோம். ஆனாலும் அவ்வளவு நீண்ட ஆயுள் தந்தவனை ஏனோ ஒருநாளாவது நினைப்பது இல்லை. சிலர் நிச்சயம் நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை வணங்கினாலே இறைவனை வணங்குவது போல தான்.
”ஹே கோவிந்தா, ஹே கோவிந்தா ஹே கோவிந்தா’ என்று அவன் பேரைச் சொன்னால் போதும் அவன் உன்னைக் கரை சேர்ப்பான். நீ கூப்பிட மாட்டாயா என்று தானே அவன் பாவம் கால் கடுக்க காத்துக் கொண்டிருக்கிறான். எவ்வளவு பெரிய ஏக்கரா கோவிலாக இருந்தாலும் கர்ப்ப க்ரஹத்தில் அவன் நின்று கொண்டு தானே பல யுகங்களாக நமக்காக காத்திருக்கிறான்.