திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம் ,அதிசயம் 2
#நங்கநல்லூர் J_K_SIVAN
சனிக்கிழமை என்றால் சனீஸ்வர பகவான் நினைவில் வருவதற்கு முன்பே திருப்பதி வெங்கடேசன் வந்து மனதில் தோன்றுகிறான்.
சொல்லும் போது நாமும் அந்த தப்பு செய்கிறோமோ என்று ஒரு நெருடல். சொல்லும் விஷயம் உண்மையா நிஜமா என்று அறிந்துகொள்ள முடியாத நிலை. ஒவ்வொன்றுக்கும் மூலம், ஆதாரம் தேடிக் கொண்டிருந் தால் எதையும் சொல்ல முடியாது, எழுத முடியாது. பேசாமல் மெரினாவில் போய் உட்கார்ந்து கடல் அலையை எண்ணலாம். இதை மனதில் வாங்கிக்கொண்டு மேலே படிப்பதை தொடர்வோம்.
ஏழுமலையான் இவ்வளவு பணக்காரனாக இருக்கிறானே என்றாலும் அனுதினமும் ஒரு புது சட்டி பானை வாங்கி அதில் வெறும் தயிர்சாதம் தான் அவனுக்கு நைவேத்தியம். அவன் நமக்கு பிரசாதமாக தருவதோ நெய், முந்திரி மணக்கும் பொங்கல், லட்டு போன்ற பலவித பக்ஷணங்கள். அவனுக்கு எந்த நைவேத்யமும் குலசேகரப்படியைத் தாண்டகூடாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள்…. மூச்ச்… எதுவும் குலசேகரப் படியைத் தாண்டி உள்ளே செல்லாது. ஸ்ரீனிவாசனுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட மண் சட்டியும், தயிர் சாதமும் ஒரு பக்தனுக்கு வாழ்நாளில் என்றாவது ஒருநாள் கிடைத்தாலே அது அவன் செய்த பாக்யம். நமக்கு எப்போது கொடுப்பினையோ?
உயரமாக நிற்கும் ஸ்ரீனிவாசனுக்கு 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரம் தான் தினமும் ஆடை, வஸ்திரம். இதை எந்த கடையிலும் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும். போதுமா? இது ஒரு அதிசயம்.
உள்சாத்து வஸ்திரம் என்று ஒரு ஸ்ரீனிவாசனின் உள்ளாடை. இதை வேங்கடேசனுக்கு சாற்றுவதற்கு
இன்னொரு விஷயம். பக்தர்கள் சாற்றும் மேலே சொன்ன வஸ்திரங்கள் தவிர ஆந்திர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் வருஷத்துக்கு இரண்டு தடவை.ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் இன்று பணம் காட்டினால் அபிஷேகம் காண குறைந்தது மூன்று வருஷம் காத்திருந்தால் அவர்கள் முறை வரும். இந்த அதிசயத்தோடு நிறுத்திவிட்டு மற்ற அதிசயங்கள் அடுத்த பதிவில் சொல்கிறேன்.