ஹே கோவிந்தா – #நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரரின்/ரின் பஜகோவிந்தம்
32. प्राणायामं प्रत्याहारं नित्यानित्य विवेकविचारम् ।
जाप्यसमेत समाधिविधानं कुर्ववधानं महदवधानम् ॥ ३०॥
praaNaayaamaM pratyaahaaraM nityaanitya vivekavichaaram.
jaapyasameta samaadhividhaanaM kurvavadhaanaM mahadavadhaanam
பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் நித்யாநித்ய விவேகவிசாரம்
ஜா�ப்ய சமேத சமாதி விதானம் குர்வவதானம் மஹதவ தானம்
Regulate the pranas, remain unaffected by external influences and discriminate between the real and the fleeting. Chant the holy name of God and silence the turbulent mind. Perform these with care, with extreme care.
யோகம் முழுக்க முழுக்க மூச்சுப் பயிற்சி தான். மூச்சைக் கட்டுப் படுத்தி சுவாச பந்தனம் பண்ணுபவன் தான் புலன்களின் எஜமானன். மூச்சுக்கு இங்கிலீஷில் BREATH என்று பெயர். ஒரு மனிதன் இறந்து போனால் வெள்ளைக்காரன் HE BREATHED HIS LAST என்று சொல்கிறான். ஒவ்வொருவனுக்கும் இத்தனை மூச்சுகள் என்று ஒரு அளவோடு நாம் உலகத்துக்கு அனுப்பப்படுகிறோம். அந்த மூச்சுக்களை எப்படி செலவழிக் கிறோம், சீக்கிரம் காலி பண்ணுபவன் சீக்கிரம் மறைகிறான். அதை அடக்கி கொஞ்சம் கொஞ்சமாக காசு மாதிரி பார்த்து பார்த்து செலவழிப்பவன் நீண்ட காலம் வாழ்கிறான். ஸ்வாஸ பந்தனம் எனும் மூச்சைக் கட்டுப்படுத்துவது யோகம். அது தான் புலன்களை அடக்கி ஆள்பது. இதை கடைப்பிடிப்பவன் ஜிதேந்த்ரியன். இந்திரியங்களை ஜெயித்தவன். எது இருப்பது, எது பறப்பது என்று நன்றாக அறிபவன். எதை பிடிக்க வேண்டும் எதை விட வேண்டும் என்ற ஞானம் உள்ளவன். கோவிந்தனை உள்ளே இருத்தி, அவன் நாமம் பஜித்தால் உன் மனம் ஆடாது, அசங்காது, வா கண்ணா என்று அவனைத் தேடும். மூச்சைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று மூச்சை ஒரே அடியாக விட்டு விடாதே. முழுதுக்குமே மோசமாகிவிடும். விஷயம் தெரியாமல் பிராணாயாமம் பண்ணுவது ஆழம் தெரியாமல், நீந்தத் தெரியாமல் பாசி பிடித்த குளத்தில் மூழ்குவது போல.
பஜ கோவிந்தம் பதஞ்சலி யோக சூத்திரத்தில் மனதை அடக் காததால் தான் எல்லாவித கஷ்டங்களும் உண்டாகின்றன. பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் மனதுதான் காரணம் என்று அறிகிறோம்