உடம்பு ஒரு தலைகாணி. அதன் உறைகள். நங்கநல்லூர் J K SIVAN
நாம் எல்லோருமே நமது உடம்பை அழகாக வைத்துக் கொள்ள விரும்புகிறோம், அதை விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கிறோம். கமகம என்று எட்டு ஊருக்கு வாசனை எழுப்ப என்னென்னவோ வாசனை திரவியங்கள் பூசுகிறோம், மேக்கப் பிரமாதமாக செய்து கொள்கிறோம். வெள்ளையை கருப்பாகி கலர் பூசின தலையோடு அலைகிறோம். உண்மையில் இது ஒரு மோசமான வஸ்து . எப்போது அழியும் என்று சொல்லமுடியாத ப்ரயோஜனம் எதுவுமே இல்லாத தண்ட சமாச்சாரம்.
இந்த உடம்புக்குள் இருக்கும் அற்புதமான ஆத்மா தான் சாஸ்வதமானது,கண்ணுக்கு தெரியாதது. அதைப் பற்றி ஏனோ நினைப்பே இல்லை. இந்த உடம்பு பஞ்ச பூதங்களாலானது. (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) உணவால் தான் இது வளர்ந்து வருகிறது. இந்த உடம்புக்கு ஐந்து போர்வைகள் உண்டு; தலைகாணிக்கு உறை போல. இன்னொரு வேடிக்கை, நமது உடம்பு ஒரு பலூன். எப்படி பலூன் உள்ளே காற்று இருக்கும் வரை கலர்கலராக மேலே உல்லாசமாக பறக்கிறதோ அது போலவே நமது உடலில் உள்ள பிராணவாயு இருக்கும் வரை ஆட்டம் பாட்டம் அசைவு பேச்சு செயல் எல்லாம். அது வெளியேறியவுடன் நமதுபேர் இல்லாமல் இது பிணம் எனப்படுவது. இதில் என்ன வேடிக்கை என்றால். இந்த உடலுக்கு ஒன்பது துவாரங்கள் இருந்தாலும் பஞ்ச பிராணன் எனும் ஐந்து வாயுக்கள் உள்ளே உலவிக்கொண்டே இருக்கும். வெளியேறாது. வேளை வந்தால் புஸ் என்று காற்று வெளியேறினால் நாம் மரக்கட்டை. எப்போது வெளியேறும் என்பது இன்றுவரை பிரம்ம ரஹஸ்யம்.
சரி. உடம்பு என்ற தலைகாணிக்கு ஐந்து உறை என்றேனே அது ஒன்றின் மேலொன்று கடுங்குளிருக்கு போர்த்திக்கொள்வது போல் அல்ல. ஒன்றினுள் ஒன்று. ஒன்றோடொன்று. ஐந்து சேர்ந்து ஒண்ணு .இது தான் பஞ்சகோசம். அவற்றின் பெயர் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோன்மய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம். ஒவ்வொரு கோசமும் ஓரு உறை . ஏழு தாதுக்களால் உருவானது
அன்னமய கோசம் நாம் உண்ணும் உணவில் இருந்து பெறும் சாரம்.ப்ராண மய கோசம். ப்ராணனும் பலமும் அடங்கியிருப்பது மனோன்மய கோசம். ப்ராணனின் சக்தியால், பலத்தினால் பெறுவது. விஞ்ஞான மய கோசம் என்பது மனதில் நமது புத்தியின் யோசிக்கும் சக்தியால் அறிந்துகொள்ளும் ஞானத்தினால் அறிவாற்றலால் கிடைப்பது ஆனந்த மய கோசம் என்பது விஞ்ஞானத்தினால் விளைவது ஆனந்த மய கோசம் என்பது அறிவின் தெளிவில் நாம் அறிந்து கொள்வது. இந்த ஐந்தும் ஒன்றை ஒன்று உள்ளடங்கி, ஒன்றொடுன்று தழுவியிருக்கும் உடம்புக்கான உறை .
கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்கிறேன். உணவு நம் உடம்பை மூச்சு விட இயக்குகிறது. மூச்சு காற்று உடலை இயக்குகிறது உணர வைக்கிறது உணர்வு உடலை அறிவு பெற செய்கிறது.அறிவு உடலை அதற்கு மேலிருக்கின்ற இம்மை இன்ப துன்பங்களை அனுபவிக்க இயக்குகிறது.அதற்கு அப்பால் உள்ள ஆனந்த மய கோசம். இம்மை இன்ப உடலை விட்டு அதற்கு மேலிருக்கின்ற மறுமை இன்ப உடல் இயக்குகின்றது. மறுமை இன்ப உடலை அதற்கு மேலிருக்கின்ற பேரின்ப உடல் இயக்குகிறது.
யில் கிடைக்கக்கூடிய பேரின்பத்தை உணரச்செயகிறது. இந்த உடல் எல்லா செயல்களையும் அனுபவிக்க நல்லதை உணரச்செய்ய இயக்குவது திருவருள். அதுதான் எல்லா உயிர்களையும் இயக்குகின்ற உள்ளே ஒளிர்கின்ற ஆத்மா.
ஆகவே அன்னமய கோசம் வளரும் ஸ்தூல சரீரம். சப்த தாதுக்கள் மயமானது. மண்ணிலே தோன்றி மண்ணிலே மறைவது உடம்பு.பிராணமய கோசம் காற்றுடம்பு. வாக்கு, கைகால்கள் ,பாயு என்ற குதம் மலவாய் உபஸ்தம் என்ற கருவாய் எனப்படும் பஞ்சேந்திரியங்களை உடையதாகும்.பஞ்சவாயுக்களான பிராணண், அபானன், சமானன், உதானன், வியானன் என்பவைகளும் அதோடு நாகன், கிருகரன், கூர்மன், தனஞ்செயன், தேவதத்தன் என்ற ஐந்து உப வாயுக்களும் கூடி இந்த அன்னமய கோசத்திலே உலவுகின்றபோது பிராணமய கோசமாகி, இறைச் சேர்க்கைகளாகி, பரமாத்மாவின் உள்ள சத்,சித், ஆனந்தம் என்ற குண இயல்புகளின் காரணமாகி மனிதன் பிராணண் உடையவனாகின்றான். அத்துடன் இருவகை ”நான்” ஐ அது கொள்கிறது. இந்த இரு வகை நான் என்பதை பற்றிய ஒரு தொகுப்பினை திருமூலர் அவர்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றார். அதற்குள் நான் சென்றால் நீங்கள் மேலே படிக்க மாட்டீர்கள். மனோன்மய கோசம் உடம்பு மனம் ரெண்டும் சேர்ந்து பஞ்சேந்திரியங்களையும் இயக்குவது.
விஞ்ஞானமய கோசம் – அறிவுடம்பு
ஆனந்தமய கோசம் எனும் இன்ப உடம்பு மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, மேல், கீழ் என எல்லா இடத்திலும் ஒரு இன்பம் இருக்கிறது என்றால் ஆனந்தமய கோசம் அதை அப்படியே கவர்ந்து விடும். நினைவுகளோடு கூடிய இன்பத்தை புரிந்து கொண்டு மற்ற புலன் அடிப்படைகளில் எது ஒன்று குறைவாகினும் அந்த மகிழ்ச்சியினை அந்தரங்கமாய் நினைத்தாலே போதும். ஆனந்தம் அடைந்து விடுகிறோம். அறியாமை, அஞ்ஞானத்துடன் இணைந்த நுட்பமான, அதாவது ஒரு ஆல விதைக்குள் மிகப்பெரிய மரம் அடங்கியிருப்பதைப் போல கால, ஞான, பரிமாண சுகத்திலே திளைப்பதே ஆனந்த மய கோசம் ஆகும்.
பிரம்மாண்டமான ஒரு ஆல மரத்தின் பரிமாணம் அதன் விதையில் வளர்ச்சியாய் அடங்கியிருப்பதைப் போல, இன்பமானது சிறிய பரிமாணத்தில் அடங்கியிருந்தாலும் அதில் ஆனந்தம் அடைந்து திளைத்து விடுவது. அனேக சுகங்களைக் கொண்டு பெருகி விடுகிறது ஆனந்தமய கோசம்.
இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் துளித்துளி அறிந்து தெரிந்து கொண்டு நாம் எல்லோருமே ப்ரம்ம ஞானிகளாகிவிடுவோமா?