பாட்டி வைத்தியம் — நங்கநல்லூர் J K SIVAN
பாட்டி எந்த MBBS MD யும் இல்லை. ஏன் பள்ளிக்கூடமே போனதில்லை. ஆ னால் அவளுக்குத் தெரியாத வைத்தியம் இல்லை. அவளே டாக்டர் அவளே நர்ஸ். எந்த FEES ம் வாங்காத வீட்டிலேயே இருக்கும் டாக்டர்.அவள் சொல்வதை கேளுங்கள்:இதோ பார்த்த நான் சொல்ற காய்கறியை பத்தி உன் நோட்டுலே எழுதி வச்சுக்கோ. என்கிட்டே நோட்டை நீட்டாதே. எனக்கு என் பேரைக்கூட எழுத தெரியாது.கத்திரிக்காய் சிறுநீரகத்திலே கிட்னி KIDNEY லே வியாதி இருந்தா குணப்படுத்தும். கொத்தவரங்காய் விடாமல் சாப்பிட்டா Paralysis பக்கவாதம் வராது. தூக்கமில்லாமல் தவிக்கிறவனுக்கு மருந்து Insomniaவுக்கு புடலங்காய் பெஸ்ட்.
விரைவாதம், Hernia குணமாக அரசாணிக்காய் சாப்பிடுவா .
கொழுப்பு இருந்தா Cholesterol , அது குணமாக கோவைக்காய் ரொம்ப நல்லது.
மூச்சு திணறல் Asthma குணமாக முருங்கைக்காய் நிறைய சாப்பிடணும். சர்க்கரை நோய் என்கிறாளே , அந்த Diabetes குணமாக அடிக்கடி பீர்க்கங்காய் சாப்பிடணும்.கால் முடக்குவாதம் இருந்தா Arthritis அதுக்கு மருந்து தேங்காய்.
தைராயுடு என்கிறாளே Thyroid அது குணமாக எலுமிச்சை ரொம்ப நல்லது
ரத்தக்கொதிப்பு இருந்தால் High BP அதுக்கு கைகண்ட ஒளஷதம் வெண்டைக்காய்.
ஹ்ருதயக் கோளாறு இருந்தா Heart Failure வாழைக்காய் அடிக்கடி சாப்பிடணும். குணமாயிடும்.
புற்றுநோய்க்கு மருந்து வெண்பூசணிக்காய்.நான் சொன்னா உனக்கு இளக்காரம். அவஸ்தை பட்டு நீயே தெரிஞ்சுக்குவே. நிறைய காசைக் கொட்டி ஆஸ்பத்திரில போய் நிப்பே. அவன்கொடுக்கிற கருப்பு சேப்பு மாத்திரையை முழுங்குவே. தவிப்பே.