ரிஷி, ரிஷிபத்னிகள் – நங்கநல்லூர் J K சிவன்
அந்த காலத்து ரிஷிகள் நதிக்கரையில் தனிமையில் உட்கார்ந்து கொண்டு முழு கவனத்தை உள்ளே செலுத்தி வெளி உலகத்தை விட பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை அங்கே புரிந்து கொண்டவர்கள்.
அவர்கள் இறைவனை நேரில் கண்டவர்கள் என்பது அவர்கள் எழுத்தில் உணரமுடிகிறது. உலகத்தை திருத்த, உலகோரை சிறப்பாக வாழ்விக்க அவர்களது உபதேசங்கள் உதவுகிறது. நிச்சயம் அவர்கள் இறைவனின் தூதுவர்கள் தான். அவர்களால் நாம் வேதம் உபநிஷதங்களை அறிகிறோம். அவற்றை படித்தாவது, புரிந்து கொண்டாவது நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும் . ரிஷிகள் ப்ரம்ம ரிஷிகள், (ப்ரம்மாவின் புத்திரர்கள்) தேவரிஷிகள்(நாரதர் தும்புரு போன்றவர்கள்) ராஜரிஷிகள் (ஜனகர், விஸ்வாமித்ரர் போன்றவர்கள் ) என மூவகை.
வாலமீகி வியாசர் போன்றவர்கள் இதிஹாசம் அளித்தவர்கள். காஸ்யபர் , வசிஷ்டர், கபிலர் பாரத்வாஜர், கௌதமர். மார்க்கண்டேயர் சுகர், வைசம்பாயனர், சௌனகர், துர்வாசர், அகஸ்தியர், பிருகு , அத்ரி, மதங்கர் பராசரர் போன்றவர்கள் பிரபலமான ரிஷிகள்.
ஜைமினி, யாஞவல்க்யர், பாணினி, பதஞ்சலி, பாஸ்கராச்சார்யர் ஆகியோர் தத்வ ஞானிகள்.
சரகர் , சுஸ்ருதர் போன்றார் வைத்ய சிகாமணிகள். ஆர்யபட்டர் வராஹமிஹிரர் போன்றவர்கள் வானசாஸ்த்ர ஜோதிட நிபுணர்கள்.
பெண்கள் கூட சிலர் பெருமை பெற்றவர்கள். ரோமசா, கர்கி, லோபாமுத்ரா, மைத்ரேயி, அபலா, கத்ரு , அகலி கை, இந்திராணி, சாவித்ரி, தேவயானி, போன்ற வர்கள் பெயர்கள் நாம் அறிவோம். வேத காலத்தில் பெண்க ளுக்கும் உபநயனம் உண்டு. பூணல், யக்னோ பவீதம் உண்டு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேதம் கற்பதில் சம உரிமை இருந்தது. பூணல் போட்டுக் கொண்ட பெண்களுக்கு ப்ரம்மவாதினிகள் எனப்பெயர் கொண்டு அக்னிஹோத்ரம் ஹோமம் யாகம் எல்லாம் புரிந்தார்கள். மேலே அங்கவஸ்திரம் தரித்தார்கள். பூணலில் மூன்று நூல்கள் முடிச்சுடன் காணப்படும். மூன்று நூல்களும் சாம, ரிக் , யஜுர் வேதங்களைக் கற்றவர்கள் என்று அடையாளம் காட்டுபவை. பின்னர் மனுஸ்ம்ரிதியில் யக்னோபவீதம் ஆண்களுக்கு மட்டும் என்று குறைந்துவிட்டது. அம்பாள் விக்ரஹங்களில்
ஆபரணங்களோடு பூணலும் காணப்படும்.
எத்தனையோ விஷயங்கள் நமக்கு இன்னும் தெரிய வில்லை. தோண்ட தோண்ட புதையல் வந்து கொண்டே இருக்கிறது.