TRIED A POEM J K SIVAN

முதல் பாட்டு – நங்கநல்லூர் J K SIVAN
எத்தனையோ பாடல்கள், யாராரோ எழுதியதை எல்லாம் படிக்கிறேன். ஒரு நாளும் நாமும் பாடல் ஏதாவது எழுதணும்னு தோண்றியதில்லை. என்னவோ இன்னிக்கு கரெண்ட் கட் . கம்பியூட்டர் பக்கம் போகலே. பழைய டயரி கண்ணுலே பட்டது. அதுலே ஒரு பக்கத்திலே ப்ளூ பேனாவால் பாட்டு எழுத தோணித்து. இது பாட்டா கொலையா தெரியலை.படிச்சவங்க தானே சொல்லணும். காக்கை தன் குஞ்சு பொன் குஞ்சு. இலக்கணம் தேடாமல் மேலெழுந்தவாரியாக படித்தால் எங்காவது ஒரு லயன் புரிஞ்சால் பாஸ் மார்க் எனக்கு. என் சப்ஜெக்ட் எப்போதுமே பழங்காலம் தானே. அதுவே இதிலேயும்.
பட்டப்பகலிலோர் நெட்டை கனவு
படிக்கும் பழக்கம் போச்சு நல்லா பாட கூட தெரியலே
நடிப்பு ஆட்டம் பாட்ட மெல்லாம் டிவி பொட்டி யைப் பாத்து தான்
படத்தை பார்க்க கால் கடுக்க பாதி நாளு நின்னோமே
– இப்போ
இடத்தை விட்டு நகரலை நிறைய சேனல் காட்டுது..
அஞ்சு மணிக்கு கோயில் மணி யிப்போ சத்தம் போடலே
செஞ்ச பாவமோ கோவில் கதவை இன்னும் திறக்கலே
சொத்து பூரா சாமிக்கு ன்னு எழுதிவச்ச தெங்கய்யா?மத்தவங்க கிட்டே இப்போ அது -சாமியின் தூங்குது?
பள்ளிக்கூடம் திண்ணை அப்போ மரத்தடிலே வாத்யாரு துள்ளி ஆடும் வயசிலே பாடம் நல்லா சொல்லி தந்தாங்க இப்போ
பிறக்கும்போதே ஸ்கூல் பீஸ். மூணு வயசுக்கு சிபாரிசு சிறந்த கல்வி வேணுமின்னா இங்கிலிஷ்லே பேசணுமாம் வேலை கிடைக்க பாடம் படிக்க சாதி பாக்கலே அப்போ
காலையிலே கஞ்சி குடிச்சு காத தூரம் நடந்தோம் இப்போ
காசு கொடுத்து ஆளை பிடிச்சு கவர்மெண்ட் வேலை
நாசூக்கா வாங்க நாலு பேரை தேடணும் .
பொண்ணு தேடி போகவேணாம் வரன் வீட்டுக்கே வரும்
ஒண்ணும் கேக்காம சீர் செனத்தி செஞ்ச காலம் போச்சுடா படிக்க வைச்சா வேலைக்குப்போய் பொண்ணு பையனை பிடிக்குது
பொண்ணு கேட்டா பெத்தது கண்டிஷன் ரொம்ப போடுது
சுதந்திரம் வந்துடுச்சே இனிமே நாம சந்தோசத்திலே மிதப்போம்
எதெல்லாம் ஆசையோ அதெல்லாம் ரொம்பவே கிடைக்கும்னு
எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்டோம் இப்போ தெரியுது அதெல்லாம்
பட்டப் பகலிலோர் நெட்டைக்கனவு தான்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *