பசுவும் பாசமும் – நங்கநல்லூர் J K SIVAN
உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தோடு ஆரம்பிக்
கிறேன்.
யாருடைய அருள் இருக்கிறதோ இல்லையோ, ஒரு வரைப் பற்றி பேசும்போது ரெண்டு விஷயம் மட்டும் கண்டிப்பாக சொல்கிறோம்.
”சாமா மாமாவுக்கு என்னப்பா, ஸரஸ்வதி கடாக்ஷம் பொங்கி வருகிறது. என்னமா பேசுகிறார்,என்னமா எழுதுகிறார்!” என்கிறோம்.
பாலுசாமிக்கு பூர்வ ஜென்ம புண்யம் பா, அதனால் தான் 7ம் க்ளாஸ் படிச்சுட்டு செங்கல் சூளை வச்சவனுக்கு கோடி கோடியாக பணம் புரள்கிறது. எல்லாம் லக்ஷ்மி கடாக்ஷம் தான், வேறென்ன?” என்கிறோம்.
ஸரஸ்வதி கடாக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் இந்த இரண்டை யும் பற்றி மநுஷ்ய சுபாவம் ரொம்பவும் விசித்திரமாக சிந்திக்கிறது. எல்லோருமே, தங்களுக்கு ரொம்பவும் ஸரஸ்வதி கடாக்ஷம், அதாவது புத்திசாலித்தனம் இருப்ப தாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம். தங்களை மஹா புத்திசாலிகளாகவே வெளியில் காட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறோம். ஆனால் நல்ல புத்தி வேண்டும் என்று அதற்கான தாகத்தோடு யாரும் பகவானைப் பிரார்த்திப்பதில்லை.
பொதுவாகப் புத்திசாலித்தனம் என்பது சாமர்த்தியம் என்று தான் நினைப்பு. ஞானமும் விவேகமும்தான் ஒருவனை புத்திசாலியாக்கும். இதற்கு நாம் யாராவது ஆசைப்படுகிறோமா? கோவிலில் சுவாமி முன் நிற்கும் போது எவனாவது எனக்கு ஞானம் வேண்டும் என்று கேட்கிறானா? எனக்கு விவேகம் தேவை என்று வேண்டிக் கொள்கிறானா?
இயற்கையாகவே,நான் சாமர்த்தியக்காரன், புத்திசாலி, சாதுர்யம் கொண்டவன் என்று தான் எவனுமே நம்புகி றான். பகவானிடம் ஒருநாளாவது இன்னும் நான் கெட்டிக் காரன் ஆகவேண்டும் புத்திசாலியாக வேண் டும் சாமர்த்தியம், சாதுர்யம் வேண்டும் என்று ஒரு நாளாவது கேட்கிறோமா? நம்மைவிட கெட்டிக்காரன் எவனும் இல்லை, என்ற இறுமாப்பு வேறு தலையைக் கொழுக்க வைக்கிறது. .அது தான் பாழும் மனசின் தன்மை. சாதாரண மனுஷ்ய ஸ்வபாவம்.
இதற்கு நேர் மாறாக, லக்ஷ்மி கடாக்ஷம் மட்டும் எவ்வ ளவு இருந்தாலும் திருப்தி இல்லை. இன்னும் மேலே மேலே செல்வம் கொழிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவனும் துடிக்கிறான். பண தாகம் தீரவில்லை. முட்டாளாக இருந்தாலும் தன்னை பெரிய புத்திசாலி யாகக் காட்டிக்கொள்வதற்கு நேர் மாறாக, எத்தனை தான் செல்வம் அவனுக்கு இருந்தாலும் அதை வெளி யில் தெரியவிடாமல், மறைத்து, ஒளித்து ,இன்னொரு ஆள் மேல் சொத்தாக காட்டி தகிடுதத்தம் எல்லாம் பண்ணி தான் சாதாரண ஒரு நேர்மையானவனாக காட்டிக்கொண்டு ஏழை வேஷம் போடும் எத்தனை பேரை தினமும் பார்க்கிறோம். படிக்கிறோம். அயோக்
கிய சிகாமணிகள்..
இன்னொரு வேடிக்கை கவனித்தீர்களா?யாராவது நம்மை ”இவன் எத்தனை புத்திசாலி” என்று பேசினால் உச்சி குளிர்ந்து போகிறது. சந்தோஷத்தில் குதிக்கி றோம். ஆனால் நம்மைப் பற்றி ”இவனிடம் பாங்கில் லக்ஷ லக்ஷமாக பணம் இருக்கிறது ” என்று யாராவது பேசினால் சந்தோஷம் வராமல், கடும் கோபம்தான் வருகிறது. தங்களிடம் இருப்பது போதாது என்று நினைப் பதால் தான் நம்மிடம் இருக்கும் செல்வத் தைப் பற்றி பேசினால் கோபம் வருகிறது.
மனதில் உருவாகும் அதிருப்தி தான் உண்மையில் ஏழ்மை .வறுமை, தரித்திரம். இருப்பதைக் கொண்டு திருப்தி படுவது தான் உண்மையான சம்பத்து. செல்வம்.
மொத்தத்தில் நாம் என்ன சொல்கிறோம்? ”ஸரஸ்வதி இருக்கும் இடத்தில் லக்ஷ்மி இருக்கமாட்டாள்” என்பது தான். புத்திமானாக ஒருவன் தரித்திர நாராயணனாக
இருந்தாலும் அதை லக்ஷியம் பண்ணாமல் மனஸால் நிறைந்து, திருப்தியால் பணக்காரர்களாக இருந்தால் அவன் தெய்வத்துக்கு சமம்.
” பாவம் தரித்ரனாக இருக்கிறாயே இந்தா உனக்கு பணம் என்று யார் வந்து தரப்போகிறார்கள்? நமது சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல், வெளியே சொல்லிக் கொள்ளாமலே நாம் பணக்காரனை விடத் திருப்தியாக இருப்போமே. ஏன் நாம் இப்படி நினைத்து நடந்து கொள்வதில்லை?
புத்தி, செல்வம் – இவற்றோடு இன்னொரு விஷயமும் போட்டியில் இருக்கிறதே. அது தான் அழகு. எல்லோ ருக்குமே தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை அடிமனதில் அஸ்திவாரமாக இருக்கிறது.
தான் புத்திசாலி என்று நினைப்பதைப் போல, தான் எல்லோரையும் விட அழகு என்ற எண்ணம் முகத்தில் அச்சடித்திருக்கும். தலையை அடிக்கடி வாரிக் கொள் வான். தன்னை நொடிக்கு நொடி கண்ணாடியில் பார்த்துக் கொண்டு மகிழ்வான். அலங்காரத்தில் ரொம்ப கவனம். எந்த புடவை எந்த சட்டை எந்த நகை,இதில் மனதுக்கு திருப்தி வரும் வரை மாற்றி மாற்றி தேர்வு செய்கிறோம்.
மேலே சொன்னது அத்தனையும் ஒரு புறம் இருக்கட்டும். முதலில் ஒருவனுக்கு இந்தஉலகில் பூரண ஆயுள். தீர்க்காயுசு இல்லாவிட்டால் மேலே சொன்னதெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்?
பகவானின் அனுக்ரஹம் தான் அவசியம் எல்லோருக் கும் வேண்டும்.அதை எந்த மனசு வேண்டுகிறது? பணம், அந்தஸ்து, அழகு, புத்தி, இருந்து நம் காலம் ஓடினாலும் யாருக்கு அதால் பயன்?மனசுக்கு திருப்தி என்றாவது ஒருநாள் உண்டா? ஏதோ ஒரு கவலை, ஒரு தேவை இருந்து கொண்டே தானே நம்மை எங்கெங்கோ அலைய வைக்கிறது? குரங்கு மனதுக்கு நிம்மதி ஒருநாளாவது உண்டா?
என்றும் நிறைந்த, நிரந்த சுகமான மன அமைதியை ஏன் நாம் தேடுவதில்லை? எங்கே இதைப் பெறமுடியும்?
மஹா பெரியவா அடிக்கடி ”காமாக்ஷி அம்பாளை விடாமல் உபாஸி டா, உனக்கு எல்லாம் நிரந்தர சுகமாக கிடைக்கும் என்பார்”.அவரே காமாக்ஷி அம்பாள் அவதாரம் தானே.
மேலே சொன்ன மாயையின் பிடியில் இருந்து தப்ப, அம்பாளை த்யானம் பண்ணவேண்டும். பாசம் என்றால் கயிறு என்று அர்த்தம். பாசக்கயிறு கையில் வைத்துக் கொண்டு தான் யமன் நம்மை அணுகுகிறான். நாம் எல்லோரும் பசு, பாசத்தால் கட்டுப் படுபவர்கள். கட்டிப் போடப்பட்ட பசுவைப் போல நிரந்தரமில்லாத உலக சுகங்களைத் தேடி செக்கு மாடு போல் உழல்பவர் கள். அதிலேயே நமக்கு திருப்தி. மனது அதிலேயே திளைக்கிறது. இந்த பாசக் கயிறு கட்டிலிருந்து விடு பட்ட பிறகு தான் ”ஆனந்த சுதந்திரம் அடைந்து விட் டோம்” என்று ஆடவோ பாடவோ முடியும்.
எப்படியாவது இந்திரிய அல்ப சுகம் தாண்டி அகண்ட மான, சாசுவதமான ஆத்ம ஆனந்தம் அடைய முயற் சிக்க வேண்டும். பாசம் போய், கட்டப்பட்ட பசுவாக இல்லாமல், சுதந்திரமாகி விட்டால் அப்புறம் ப்ரம்மானந்தம் தான்.
நம் உலக வாழ்க்கை அநித்யமானது. கொஞ்சம் காலம் தான். அதில் எதற்கு அழகு, பாசம்,பணம், பெருமை, பொறாமை போன்ற கட்டுக்கள்? இதெல்லாம் வேண்ட வே வேண்டாம் என்ற வைராக்கியம் மனசில் உண்டா னால், கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு பேரின்ப மயமான அம்பாள் அனுக்கிரஹம் தேடும் மனநிலை வளரும். அதை விட ஒரு அற்புதமான சுகம், வழி, வேறே என்னஇருக்கிறது?