பிரம்ம ஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆனந்தமயாதிகரணம். சூத்திரங்கள் 12 முதல் 19வரை
ॐ आनन्दमयोऽभ्यासात् ॐ ॥ १.१.१२॥
ANANDAMAYO’BHYASAT I.1.12 (12)
ஓம் ஆனந்தமயோபியாஸாத் ஓம்.
ஆனந்தமயம் என்றாலே ப்ரப்ரம்மத்தை உணர்வது தான். அந்த ஆனந்தத்தை, உலகில் ஜீவர்கள் துய்க்கும் சுகம், ஆனந்தத்தோடு ஒப்பிடமுடியாதது. அளவற்றது அது, எல்லையில்லாதது. விவரிக்க ஒண்ணாதது. அனுபவத்தில் மட்டுமே உணரப்படுவது. ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிக்கும் ஆனந்தம்,சுகம், ப்ரம்மமாகாது. தூக்கம் முடிந்தபின் ஜீவன் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறான்,அவன் எப்படி பிரம்மத்தை அடையமுடியும்?
ॐ विकारशब्दान्नेतिचेन्न प्राचुर्यात् ॐ ॥ १.१.१३॥
Vikarasabdanneti chet na prachuryat I.1.13 (13)
‘ஓம் விகாரசப்தன்நெத்தி சேத்ந ப்ரசுர்யாத் ஓம்;
ஆனந்தம் வேறு ப்ரம்மம் வேறு அல்ல. இருந்தாலும் ப்ரம்மத்தை ஆனந்த ”மயம் ” என்று திரித்துக் கூறக்கூடாது.பிரிக்க முடியாத சர்வ வியாபியான ஆனந்தம் சதானந்தம் எனப்படுவது ப்ரம்மம். நிறைந்திருப்பது.
ॐ तद्धेतुव्यपदेशाच्च ॐ ॥ १.१.१४॥
Taddhetuvyapadesaccha I.1.14. (14)
ஓம் தத்வேது வ்யப தேசாச்ச ஓம்
ஒரு ஜீவன் ஆனந்தம் அனுபவிக்கிறான் என்றால் அவன் ப்ரம்மமாகிவிடமாட்டான். ஒரு பஸ்ஸில் கோவிலுக்கு செல்கிறோம் என்பதால் பஸ் கோவிலாகிவிடுமா? தூண்டுகோல் தானே அது.
ॐ मान्त्रवर्णिकमेव च गीयते ॐ ॥ १.१.१५॥
Mantravarnikameva cha giyate I.1.15 (15)
ஓம் மாந்தரவர்ணீகமேவ ச கீயதே ஓம்
மந்த்ர வர்ணத்தில் தைத்ரீய உபநிஷதத்தில் சத்யம்,ஞானம், அனந்தம் என்று சொல்லப்படும் பிரம்மத்தை தான் இங்கே ஆனந்தம் என்று சொல்லி இருக்கிறது.
ॐ नेतरोऽनुपपत्तेः ॐ ॥ १.१.१६॥
Netaro’nupapatteh I.1.16 (16)
ஓம் ந இதரோ அனுபபத்தே ஓம்
ப்ரம்மத்தை ஜீவன் என்று சொல்வது பொருந்தாது.
ॐ भेदव्यपदेशाच्च ॐ ॥ १.१.१७॥
Bhedavyapadesaccha I.1.17 (17)
ஓம் பேத வ்யபதேஸாச்ச ஓம்.
எப்போதும் ஜீவனையும் ப்ரம்மனையும் பிரித்தே சொல்லப்படுவதால் ப்ரம்மம் ஜீவனாகாது.
ॐ कामाच्च नानुमानापेक्षा ॐ ॥ १.१.१८॥
Kamachcha Nanumanapeksha I.1.18 (18)
ஓம்: காமாச்சநானுமான பேக்ஷா ஓம்:
ப்ரபஞ்சத்தை உருவாக்க பரம சக்தி படைத்த பிரம்மத்துக்கு அதன் இச்சை ஒன்றே போதும். ஜீவன் தேவையில்லை.
ॐ अस्मिन्नस्य च तद्योगं शास्ति ॐ ॥ १.१.१९॥
Asminnasya cha tadyogam sasti I.1.19 (19)
ஓம் அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஸாஸ்தி ஓம்
ஏற்கனவே சொன்னதை மேலும் விளக்குகிறது இந்த சூத்ரம். ஜீவன் இந்த பரமானந்தமயமான ப்ரம்மத்தை சேர்கிறது என்று சொல்லும்போது ப்ரம்மம் ஜீவனாகாது. ஜீவனும் ப்ரம்மம் இல்லை.