எல்லாம் ஒன்றே – நங்கநல்லூர் J K SIVAN
பகவான் ரமணருக்கு பிடித்த ஒரு புத்தகம் ”எல்லாம் ஒன்றே”. 1935 ல் வையை சுப்ரமணிய அய்யர் எழுதிய ரெண்டணா புத்தகம்.
இந்த உலகத்தில் எல்லாம் ஒன்றே. காணும் உலகம், காணும் நாம், காணும் செயல் எல்லாமே ஒன்று. எல்லோரையும் ஒன்றாக பார்க்கும்போது வித்யாசம், வேறுபாடு, பாரபக்ஷம் கிடையாது. எல்லாமே நல்லது, நண்மை தான்.பூ, காய்,கிளை, இலை , இவற்றை வேறு வேறாக பார்க்காமல் மரம் என்ற ஒன்றாக பார்க்கி றோம். எல்லோரையும் தானாக, ஒன்றாக பார்ப்பதால் அன்பு ஒன்றே நிலைக்கிறது. பொறாமை, வெறுப்பு எதுவும் இல்லை. சாந்தம் அமைதி ஒன்றே நிலவும். இதை உணர்ந்து தான் வேதம் ”ஓம் தத் ஸத் , நீ தான் அது, அஹம் ப்ரம்மாஸ்மி, நான் தான் அந்த ப்ரம்மம் என்று சொல்லி ஆனந்தத்தை தருகிறது.
விழிப்பு நிலையில் காணும் மனிதனும், கனவில் வந்த இன்னொருவனும், ஒன்றுமே அறியாத ஆழ்ந்த தூக்கத்தில் இல்லாதவனும் ஒன்று தான். வெவ்வேறாக மனம் மாற்றிக் காட்டுகிறது. பிரபஞ்சமே நீ தான் என்று உணரும்போது எது யார்? எதுவும் பாதிக்காத சுத்த சிவாநுபவம் தான் துரீயம் எனப்படும் ஆனந்த நிலை. அது தான் நாம் எல்லோருமான ஒன்று. இப்படிப்பட்ட துரீயத்தை உணர்ந்தவன் தான் ஆத்ம ஞானி. அவனன்றி ஓர் அணுவும் அசையாது எனும்போது எல்லாமே அவன் தானே.
உள் , புறம் என்று தனியே எதுவும் இல்லை. அபேதமான, வித்யாசம் அற்ற நிலையில் மனிதன் என்பவன் தெய்வமாகலாம். என்னையே நினைத்தால் நீ நாணாகிவிடுவாய் என்று கண்ணன் கீதையில் சொன்ன நிலை. உலகம் பிரபஞ்சம் என்பதே நாம் காணும் நிலையில் இருப்பது. அதுவே நான் என்றால் வேறே என்ன இருக்கிறது? ஸ்ரிஷ்டியும் ஸ்ரிஷ்டி கர்த்தாவும் ஒன்றே. கடவுள் சகலத்தையும் மாயையாக காட்டும் போது அவருக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை . நாம் யாரென்று உணராதபோது தான் சகல வித்தியாசங்களும் ஜடமாக, சித், ஆக வேறுபடுவது போல் தோற்றம் அளிக்கிறது. எல்லாமே ஒன்று என்று அறியும்போது ஆனந்தம் கிடைக்கிறது. ஆகவே தான் எல்லாமும் ஒன்றே ஆனபகவானை சச்சிதானந்தம் என்கிறோம். ஸத் : அழியாதது, சித்: தடைபடாத அறிவாற்றல், இது ரெண்டும் தருவது ஆனந்தம். ஆத்ம விசாரம் செய்து துரீய சக்தி அடைந்தவன் சச்சிதா னந்தன். பகவான்.
ரமணரை பகவான் என்று அதனால் தான் அழைக்கி றோம். ஊருமில்லை, பேருமில்லை , உருவமுமில்லை. தோற்றமும் இல்லை, மறைவும் இல்லை. அன்பே சிவம். love is god. ஸத்யம் . பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தம்.
நாம் கொஞ்சம் கொஞ்சமாக மேலே சொன்ன நிலைக்கு முதல் படிக்கட்டு பக்தி, அதன்மூலம் பெறும் ஞானம். ஞான மார்க்கத்தில் செல்ல உதவுபவர் குரு. சைக்கிள் ஓட்ட முதலில் யாராவது நம்மோடு கூடவே பிடித்துக்கொண்டு ஓடிவரவேண்டும். நமக்கு பாலன்ஸ் வந்துவிட்டால் பிறர் உதவி தேவை இல்லை.குரு ஆசார்யன் தான் கூட ஓடிவருபவர்.
உலகம் எனும் பிரபஞ்சம் கனவு. உலகே மாயும். வாழ்வே மாயம். நிலையானது சத்யம் ஒன்று தான். அதுவே சாந்தம், அமைதி. பேரின்பம். பிரகாசம், அஞ்ஞான இருள் நீக்குவது. பகவானை பிரார்த்திக்கும்போது எல்லாம் உன் உடைமையே, எல்லாம் உன்னுடைய செயலே என்று அதனால் தான் சொல்வது. எல்லாம் கடவுள் சித்தம் என்கிறோம். சர்வம் ப்ரம்ம மயம். ஒரு விஷயம் கவனிக்கவேண்டும். எல்லாமே அதுவாக உருவமில்லாமல் இருந்தால் அதை காணமுடியாத நாம், அறிந்து,புரிந்து கொள்ளமுடியாத நாம் ஒன்றுமே இல்லையே, அது இல்லாதது என்று சொல்கிறோம். ஆகவே இருப்பது இல்லாதது ஆகிறது.இல்லாதது இருப்பது ஆகிறது.
மனிதன் மனத்தை ஆக்கிரமிக்கும் அகம்பாவம் தான் அவனை அழிக்கிறது, சகல துன்பங்களையும் தீமையும் விளைவிக்கிறது. ”நான் ” என்ற எண்ணம் அவன் தேகத்தோடு அவனை சம்பந்தப்படுத்தி தவறான பாதையில் செல்ல வைக்கிறது. உண்மையில் ”நான்” தேகமல்ல என்று உணர்ந்தபின் அவன் சரியான பாதையில் வழி நடத்தப்படுகிறான். அதற்கு தான் ஆத்ம விசாரம் அவசியம். ரமணர் போதிப்பது இது தான்.
பகவானை நினைப்பதற்கு கூட அவன் அருள் வேண்டும். அவனருளால் அவன் தாளை வேண்டி…என்று அதனால் தான் சொல்கிறோம். எல்லாவற்றையும் கண்காணித்துக்கொடு சாக்ஷி பூதமாக இருப்பவன் அந்த பரப்பிரம்மம்.
துரீயம் துரீயம் என்கிறாயே அது என்ன என்றால், எதையும் சுட்டிக்காட்டி அதுபோல், அதே தான் என்ற அறிவில் அடங்காமல், ஜடமாக, ஜடத்தன்மை இல்லாமல் இருப்பதாகவும் ஏதாவது ஒன்று இருந்தால் அதை அறிந்துகொள்ளும் அறிவு இருந்தால் அது. உண்மையில் நீ தானப்பா அது. நீ உணரவில்லை. பயிற்சி இல்லை. ஆகவே உனக்கு தெரியவில்லை. அது இல்லை என்கிறாய்? பேத்தல் என்று புறம் தள்ளுகிறாய்.
துரியத்தில் சஞ்சரிப்பவன், இந்த உலகத்தில் இருந் தாலும், ஜாக்ரதா என்ற விழிப்புணர்வில் இருந் தால் அதை துரீயத்தில் இருப்பதாக அறிபவன். ஏற்கனவே கண்ட பழைய உலகம் அல்ல. துரீய உலகம். அது தான் ஐயா ”அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் விளங்கும் ஆனந்த பூர்த்தி” கண்டதை, புறத்தில் காண்பவன். வித்தியாசம் அறியாத அபேத நிலை யில் உள்ளவன். உறக்கம் விழிப்பு, எல்லாம் ஒரே நிலை அவனுக்கு . ரமணர் படத்தில் அவர் முகத்தை உற்று பாருங்கள் இதை படித்துவிட்டு. பாதி புரியும்.
அவர் ப்ரம்ம ஞானி. அகம் புறம் எல்லாமே ஒன்று அவனுக்கு. தான் என்ற எண்ணம் தன்னை அறிந்ததால் விலகியவர் . அலைபாயும், ஆட்டிவைக் கும் மனத்தை அழித்தவர். மனோநாசம் என்று அதற்கு பெயர்.
இந்த உடல் நீக்கினாலும் நீங்காதவன். மரணம் உடலுக்கு வந்தாலும் மரணிக்காதவன். உடல் இருக் கும்போதும் அது இல்லாதவன். அவன் தான் ஜீவன் முக்தன். அது தான் சார் நீங்கள்…. மிஸ்டர் நித்யானந்தம். (நித்யானந்தா என்ற யாரோ ஒருவரை சொல்வதாக நினைக்காதீர்கள்.அப்புறம் இதை எழுதியதே வேஸ்ட்.)