கையளவு தான் கற்றது – நங்கநல்லூர் J K SIVAN
யாருமே எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. எத்தனையோ அற்புதமான அழகான தமிழ் பாடல்களை நாம் அறியவில்லை. தேடிப்பார்த்தால் சில அதிசயங்கள் கண்ணில் படுகிறது. நான் தேடினேன். சிலது அகப்பட்டது. அதை தான் அளிக்கிறேன்.
யாரோ ஒரு தமிழ்ப்புலவர் எளிய வார்த்தைகளில் ஒரு அற்புத நாலு வரி எழுதி இருக்கிறார். அதில் என்ன சொல்கிறார் என்றால் :
எங்க மாமி என்று பீற்றுகிறாயே, அந்த மாமிக்கும் ஒரு மாமி இருப்பாள். இவர் சிறந்த கவிஞர் பாணர் என்கிறாயே அந்த பாணனுக்கும் பெரிய இன்னொரு பாணன் இருப்பான். சாமி என்று தோப்புக்கரணம் போடுகிறாய், அந்த சாமிக்கும் ஒரு தகப்பன் சாமி உண்டு.
இதிலிருந்து என்ன புரிகிறது? இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவன் என்று ஒருவன் கிடையாது. அதே சமயம் இவனுக்கு ஒன்றுமே தெரியாது என்று எவனையும் இகழ்வதும் ரொம்ப தப்பு. எல்லாவற்றையும் கண்ணால் பார்த்தவன் எவனுமே இல்லை. எதையுமே பார்க்காதவனும் இல்லவே இல்லை. கண் இல்லையென்றால் இருக்கவேயிருக்கிறது மனக்கண்.அதன் மூலம் பார்த்து அனுபவிக்கிறான். ஸூரதாஸ் கிருஷ்ணனை அப்படித்தானே பார்த்தவர்.
”மாமிக்கோர் மாமியுண்டு வாணருக்கோர் வாணருண்டு
சாமிக்குமேற் றகப்பன் சாமியுண்டு- பூமிக்குள்
எல்லாந் தெரிந்தவரும் இல்லை தெரியாதவரு
மல்லாமற் கண்டவர்க ளார்.”
சாமிக்குமேற் றகப்பன் சாமியுண்டு- பூமிக்குள்
எல்லாந் தெரிந்தவரும் இல்லை தெரியாதவரு
மல்லாமற் கண்டவர்க ளார்.”