சற்று சிந்திக்க – நங்கநல்லூர் J K SIVAN
இந்த உலகில், என்னவெல்லாமோ எனக்கு அவசியம் வந்தாக வேண்டும், அதை நாம் பெற்றாக வேண்டும். அது எனது பிறப்புரிமை என்று உரக்க பேசுகிறவர்கள் இது வரை மரணம் கண்டிப்பாக உலகில் பிறந்த எவரானபோதிலும் ஒருநாள் வந்தே தீரும் என்று தெரியுமே. மரணம் எனது பிறப்புரிமை என்ற வார்த்தையை உபயோகித்ததுண்டா? அதிலிருந்து எப்படியாவது தப்பவேண்டும் என்று தானே ஆசைப்படுகிறோம். மரணத்தை வெல்ல முடியும் என்று சிந்தித்ததுண்டா?வழக்கமான தினசரி தூக்கத்தை விட கொஞ்சம் நீளமான முடிவில்லாத தூக்கம் என்று ஏன் அதை பயப்படாமல் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை?
தன்னலம் பொறாமை, பேராசை இதிலிருந்தெல்லாம் விடுபட சகல கஷ்டங்களும் வாழ்க்கையில் அனுபவிக்காத பிறகு தாம் பாடமாகுமா? பிறர் அனுபவமே நமக்கு பாடமாகாதா?நெருப்பு தொட்டால் சுடும் என்று கைவைத்த பிறகா தெரிந்து கொள்கிறோம்? கேட்டதும் நம்புவதும் தானே பாடம். எண்ணற்ற ஆன்மீக நூல்கள் பிரசங்கங்கள், எழுத்துக்கள் மரணத்தை வெல்வதைப் பற்றி சொல்கிறதே. அதை ஏன் புரிந்து கொண்டு,நம்பி, பாடம் பெறக் கூடாது?
வாழ்க்கையின் எண்ணற்ற மன உளைச்சல்களுக்கு விஞ்ஞானத்தில் பதில் கிடைக்காது. மனம் தெளிவு பெற ஆன்மிகம் அவசியமாகிறது. மனத்தை மனத்தால் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். கவலைகளை தீர்க்க முடியும்.
நாம் எதைப பார்க்கிறோம், கேட்கிறோம் தொடுகிறோம் நமது ஐம்புலன்களை உபயோகித்து அது தான் உலகமா? அது சாஸ்வதமாக இல்லையே. ஐம்புலன்களால் மாறி மாறி தோற்றமளித்து நம்மை ஈர்க்கிறதே. உலகத்தில் வாழ்க்கை இது மட்டுமே என்று நம்பி மகிழ்ந்து முடிவதற்கு முன் ஒரு முறையாவது அதற்கு அப்பாலும் அற்புத விஷயங்கள் இருக்கின்றன அதுவே உண்மையான இன்பம் என்று மனம் அறிய வாய்ப்பு இருக்கிறது. அது சரி,மனம் அறிய விரும்புகிறதா? ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு தானாகவே கிட்டுகிறது. பாக்கியசாலிகள்.
வெளியே காணும் பிராணபஞ்சத்தை விட மஹா பெரிய உலகம் ஒன்று உள்ளே இருக்கிறது. அதை அறிந்து அனுபவித்து என்றும் மாறாத, சதானந்தத்தில் திளைத்த ரிஷிகள் மஹான்கள் எத்தனையோ பேர் நம்மோடு இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். இத்தகைய பேரின்ப ஞானத்தை பெற்றவர்களை தான் ஞானிகள் என்று அடையலாம் காண்கிறோம்.
அன்றிலிருந்து இன்றுவரை நமது வீட்டிலே சுப கார்யங்கள் நடக்கும்போது வாத்தியார்கள் என்று சொல்லப்படும் வேதமோதும் பிராமணர்கள் நம்மை வாழ்த்துவது, ஆசீர்வாத மந்திரம். ஒரு தட்டில் தேங்காய் , பழம் வெற்றிலை பாக்கு புஷ்பம் இவற்றோடு அவர்கள் கூறும் ஸ்ரீ சூக்த மந்திரம் நமக்கு அர்த்தம் புரியாததால் அதன் பெருமை உணரப்படாமல் போகிறது.
ஸ்ரீ-வர்சஸ்யம்-ஆயுஸ்யம்-ஆரோக்யமா-விதாத் பவமானம் மஹியதே |
தனம் தான்யம் பசும் பஹு-புத்ர-லாபம் ஷதசம்வத்ஸரம் திர்கம்-ஆயுஹ் ||35||
ஸ்ரீ என்பது அம்பாளை, லோக மாதாவை, அவளை நமக்காக வேண்டிக் கொண்டு சொல்லும் மந்திரம் இது: ஓ அம்மா, தாயே, உமது அருள் எங்கள் வாழ்வில் முக்கிய சக்தியாகப் பாயட்டும், எல்லோர் வாழ்வையும் நீண்டதாகவும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியால் நிரப்பி அருள் புரியவேண்டும். உனது அருளால் எங்கும் வளம் பெருக வேண்டும். செல்வம், தானியங்கள், பசுக்கள், (அவை தான் சிறந்த செல்வம் அக்காலத்தில். இப்போது பசுவை நாம் மதிப்பதில்லை. பிரிந்தவனத்திலேயே பெரிய செல்வந்தன் கிருஷ்ணனின் அப்பா நந்தகோபன், ஆயிரக்கணக்கான பசுக்களை உடையவன். கோ மாதா நம் எல்லோருக்கும் தாய்) எல்லோரும் புத்ர பௌத்ராதிகளுடன் பல சந்ததிகளாக நூறாண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழட்டும்.”