IT IS THY WILL J K SIVAN

எல்லாம் அவன் செயல்     – நங்கநல்லூர்  J K  SIVAN
நம்ம கையிலே  என்ன ஸார்  இருக்கு? அவன் பம்பரமா  ஆட்டி வைக்கிறான். ஆடறோம்.”   இது தான் மனுஷ ப்ரயத்தனத் துக்கும்  தெய்வ சங்கல்பத்துக்கும் உள்ள வித்யாசம். இதைப் புரிந்து கொண்டவனுக்கு கவலை இல்லை.  உடல் ஆரோக்யம் பாதிப்பு இருக்காது. மனது நிம்மதியாக இருக்கும். 

பகவான் மனிதனின்  எண்ணங்களிலோ, முயற்சிகளிலோ  குறுக்கிடுவதில்லை.  அவன் சாக்ஷியாக  சகலத்தையும்  கண்காணிப்பவன்.   பிரபஞ்சத்தில் நடப்பது எல்லாமே  அவன் சங்கல்பத்தாலே தான்.   நமது முயற்சிகள்  எண்ணங்கள் அத்தோடு ஒத்துப் போனால் நாம்  அதிர்ஷ்ட சாலிகள். எதிர்மறையாக, விரோதமாக  நடந்தால் கஷ்டம் காத்திருக்காதா?
நாம் தான் பிரபஞ்சத்தை சிருஷ்டித்தது போல் அதன் மேல்  ஆணை செலுத்தி ஏமாந்து போகிறோம். சுக துக்கங்கள் நமது எதிர்பார்ப்பினால் விளைவது. அதற்கெல்லாம் காரண கர்த்தாக்கள் நாமே தான்.  சாஸ்திரங்களில்  பாரம்பரியத்தில் பெரியோர் அனுபவத்தில்  கண்டபடி  வாழ்க்கை அமைந்தால்  நம் வாழ்க்கையில் தெய்வ சங்கல்பமும்  சேர்ந்து பலமளிக்கும். அப்போது நிறைவேறுவது கூட  நமது முயற்சியின் பலனால்  அல்ல. நமது முயற்சி அவனது சங்கல்பத்தோடு ஒன்றி இருப்பதால். நமக்கு   புத்தியை கொடுத்து அதை எவ்வாறு நல்வழியில் தனக்கும்  பிறர்க்கும் உதவியாக இருக்க நூல்கள், நன்னெறிகளை, வழிமுறைகள் எல்லாம் இருந்தும்  நாம் அதை பின்பற்றாமல் குறுக்கு வழியில் வாழ்க்கைக்காட்டுக்குள் பிரவேசித்து   கொடிய  மிருகங்களை எதிர்கொண்டு பலியாகிறோம். நாம்தான் மிருகங்கள் இருக்கும் இடத்தில் நுழைகிறோம். அவை குறுக்கிடவில்லை.
 நம் செயல்களில் குறுக்கிடாதவன், அதர்மம் தலை தூக்கி  பெருகிய நிலையில் தானே அவதாரம் செய்கிறான்,  ”நானே வருவேன்” என்று வாக்களித்திருக்கிறான் என்று எல்லாம் படிக்கிறோமே . உலகத்தில் அனைவருக்கும் அவன் பொது.  அவனிடம்  பாரபக்ஷம் இல்லை.  கருணா சாகரம். நம்மை பாதுகாப்பவன்.
”பகவானே,  இந்த வாழ்க்கையில் ஆனந்தமான  அனுபவம் பெறுவேனா?”- ஒரு பக்தன் கேட்டான்.”என்ன இப்படி கேட்டுவிட்டாய். எல்லோரையும் ஆனந்த ஸ்வரூபமாக தானே நான் படைக்கிறேன்.  நீயே  ஆனந்தன் என்று உணராமல் உன் கர்மாக்களின் பலனாக  நீ செய்தவற்றுக்கு நீ அனுபவிப்பதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?  பயமில்லாமல் உன் கர்மாக்களை  பலனெதிர் பார்க்காமல் நேர்மையாக நியாயமாக  செய்.  தப்பு செய்தால் வருந்து ‘* என்றான் கிருஷ்ணன்.

ஒவ்வொரு கஷ் டத்திலும்  நாம் விழுந்து தவிக்கும்போது நம்மை தூக்கிவிடவும் அவனே  அருகில் இருக்கிறான் என்பதை மறக்கவேண்டாம்.  ஆங்கிலத்தில் ஒரு அழகான  வாக்கியம்.:God  teaches you : Live without pretending.  Love without depending.  Listen without defending and  Speak without  offending”
இல்லாதபோது  துவள வேண்டாம்,  இருக்கும்போது துள்ள வேண்டாம்.  ஒரே சீராக இருப்போம். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *