படிக்காத பாட்டி வைத்தியம் – நங்கநல்லூர் J K SIVAN
”பாட்டி வெயிலில் மித்தத்திலே என்ன பண்ணிண்டு இருக்கே?”
இல்லையே தபால் காரன் நேத்திக்கு வரலையே.”
சம்பந்தமில்லால் காமு பாட்டி பதில் சொன்னாள் . காது அவ்வளவாக கேட்காது. கிட்டப்போய் ராமநாதன் கொஞ்சம் உரத்த குரலில் கேட்டான்.
”வெயிலில் என்ன பண்றே?
”’ எல்லப்பன் தோட்டத்திலே நிறைய பாகற்காய் காச்சுதுன்னு ரெண்டு கூடை குடுத்தான்.. அதை அலம்பி வெயிலில் வைக்கிறேன்’
”’யாரும் வேண்டாம் னு சொன்னதால உன்கிட்டே தள்ளிட்டானா?”’
‘பாகற்காய் என்னைப்போல டா. யாரும் வேண்டாம் னாலும் ரொம்ப உதவி செய்யற மருந்து டா”’
‘பாகக்காய்க்கு அப்படி என்ன பெருமை ? சொல்லு பாட்டி ”
”கசப்பான காய் தான். கருகருன்னு கரும்பச்சை யாகவோ, இளம்பச்சை யாகவோ இருக்கும். ஆனா பகவான் கொடுத்த ஒளஷதம் டா இது
.(நாம் இப்போது சொல்கிறோமே ANI OXIDANTS VITAMIN எல்லாம் நிறைஞ்சு இருக்கு என்பதை தான் பாட்டி சொல்கிறாள்) .
பாகக்காய் சாறு ஹ்ருதயத்துக்கு நல்லதுடா.
பாகக்காய் சமையலுக்கு ருசி. சொல்லும்போதே நாக்கு ஊறுது… தேங்காப்பூ போட்ட கறி , காரம் போட்ட கறி ,நிறைய பண்ணுவேன்.ஒரு பெரிய வாணலி நிறைய பண்ணினா ஒரு சுத்துக்கே காணாம போயிடும் அப்போ எல்லாம். மொட்டு மொட்டா இருபது தலை உட்கார்ந்திண்டிருக்குமே. வறுவல் பண்ணு வோம்,தொக்கு,
பாகக்கா பிட்லே பண்ண ஒருநாள் சொல்லித்தரேன் எழுதி வச்சுக்கோ.
பாகக்கா கூட்டு வடக்கே பண்ணுவா. சாப்பிட்டிருக் கியோ?பாகக்காயிலே பகவான் இரும்பு சத்து நிறைய வச்சிருக்கான்
(பாட்டி என்ன சொல்றா தெரியுமா? VITAMIN A, B ,C BETA CAROTENE , LUTINE, IRON ,MANGANSESE ZINC MAGNESIUM எல்லாம் இருக்கு என்கிறாள்
)பாகக்காய்க்கு ஆதித்தனை மஹத்வமா பாடடி?
ஆமாண்டா, ”கொர் கொர்” ன்னு ஆஸ்த்மா என்கிறா ளே அது, நெஞ்சு சளி, இருமல் எல்லாத்தையும் விரட்டி டும். மருந்துடா அது. கசக்கும். ஆனால் அது தாண்டா நல்லது. ஒரு வசனம் சொல்வாளே ”அழ அழ சொல்வார் தமர் சிரிக்க சிரிக்க சொல்வா பிறர் ”னு. அது போல. சர்வ ரோக நிவாரணி இந்த பாகக்காய் .
காலம்பற தினோமும் ஒரு டம்ளர் பாகக்காய் சாறு தரேன். குடி. ஈரல் சம்பந்தப்பட்ட வியாதியெல்லாம் போயிடும். ஒருவரத்திலேயே குணம் தெரியும் பார்.
பாகக்காய் மட்டும் இல்லேடா, அதோட இலை இருக்கு பார் அதுவும் மருந்து. காயையோ, இலையை யோ ஜலத்திலே போட்டு வேக வைச்சு தினமும் சாப்பிட்டா நோயே வராது. எதிர்ப்பு சக்தி என்பாள் பாத்தியா அது ரொம்ப ஜாஸ்தி இதிலே.
பெண் குழந்தைகளுக்கு முகத்திலே பரு சருமத்திலே பரு , கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தோல் நோய் இருந்தால் இந்த பாகக்காய் சாறை துளியூண்டு எலுமிச் சை சாறோடு கலந்து வெறும் வயித்தில காலம் பற குடிச்சா போதும். ஆறே மாசத்தில் தங்கம் மாதிரி உடம்பு மின்னும்.
பாட்டி என்னவோ ”டொய்யாடிகப்பட்டில்ஸ்” என்று சொன்ன து நீரிழிவு நோயை ( DIABETES). அதற்கு சிறந்த மறந்து பாகற்காய் சாறு. அதில் உள்ள ஒரு சத்து, இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. பாட்டி இதை தான் அவள் மொழியிலே ”பாகக்காய் , சக்கரைக்கு எமன்” என்று சொல்வாள்.சமையலில் பாகக்காய் சேர்த்துண்டா ஜீரணம் நன்னா ஆகும். மலச்சிக்கல் இருக்காதுடா பாகக்கா சாப்பிட்டா கொல்லைப்பக்கம் அடிக்கடி போகவேணாம் என்பாள். அதாவது ஆரோக்க யமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பாது காக்க பாகற்காய் ரொம்ப உதவும் . சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கும். என்கிறாள். ”கெட்ட கொழுப்பை சம்ஹாரம் பண்ணிடும் ” என்பாள்.
(LDL நீக்கப்பட்டு இருதயம் சீராக இயங்கும் என்கிறாள்)
பாகக்கா சாப்பிட்டா ‘கவாம் கவாம்’ னு பசிக்கும்டா. சாப்பிடணும் ங்கிற ஆசையை கிளைப்பும். ஜீரணமும் ஆகும்.திருப்தியையும் தரும்.
பாட்டியை பிடித்து இன்னும் நிறைய விஷயம் தெரிந்து கொள்வோம்.