சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார்.சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்?நங்கநல்லூர் J K SIVAN சிவம் என்றால் மங்களம். நல்லது, நம்மை செய்பவர் தான் சிவ பெருமான். வேதகாலத்தில் ருத்ரன் என்று அறியப் பட்டவர். அநேக நாமங்களை கொண்டவர். சதா தியானத்தில் தவத்தில் தெற்கு நோக்கி அமர்ந்து மௌனத்தில் இருக்கும் தேவன். தேவர்களில் மிகப்பெரியர் என்பதால் ”மஹா தேவன்” எனப்படுபவர். ஆதி அந்தமில்லாத பழமனாதி . சம்ஹார மூர்த்தி. படைத்தல், காத்தல் அழித்தலில் ஸம்ஹாரம் இன்றியமையாதது. பிறந்தது எதுவும் முடிவில் அழியவேண்டியது தான். சிவன் ஈஸ்வரன். எளிதில் பக்தர்களுக்கு கிடைப்பவர். வேண்டியதைத் தருபவர். அவரைப் போல் கேட்டவுடன் வரம் எதுவானாலும் கொடுப்பவர் கிடையாது. எந்த உருவமும் சேராத லிங்க வடிவத்தில் எங்கும் காட்சி தருபவர். சக்தியோடு இணைந்து சிவசக்தி ஸ்வரூபமாக இயங்குபவர். ஓம் நமசிவாய என்று சிவன் பெயரைச் சொல்வது தான் ஐந்தெழுத்து மந்திரம். பஞ்சாக்ஷரம். காசியில் விஸ்வநாதனாக சகல உயிர்களுக்கும் மோக்ஷம் அருள்பவர். காலனுக்கே காலமாக நின்ற காலசம்ஹார மூர்த்தி. அவரை போற்றி மரணத்தை வெல்ல மஹா மிருத்யுஞ்சய ஜபம் செயகிறோம்.ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् । उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात् ॥ஓம் த்ரியம்பகம் யஜமாஹே சுகந்திம் புஷ்டிவர்தனம் | உர்வாருகமிவா பந்தானன்-மிருத்யர்முக்சீயா மம்ரிதாத் ||Aum Tryambakam yajaamahe sugandhim pushtivardhanam | Urvaarukamiva bandhanaan-mrityormuksheeya maamritaat ||கமகம என சுகந்தம் வீசும் தேஹ காந்தி உடையவரே, அனைத்து ஜீவாராய்ஸ்களையும் அணைத்து காத்திடும் த்ரிநேத்ரனான முக்கண்ண பெருமானே, உன்னை நமஸ்கரித்து வணங்குகிறோம். உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு ப்ரம்மம் ஒன்றையே தியானம் செய்து மரணத்தில் இருந்து விடுபட்டு மோக்ஷம் பெற எமக்கருள்வாய். இந்த சின்ன மந்திரத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இந்த சக்தி வாய்ந்த மூலமந்த்ரம் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும், ஆரோக்கியம், செல்வம், நீண்ட ஆயுள், அமைதி, செழிப்பு மற்றும் மனநிறைவு ஆகியவற்றைக் கொடுக்கும். பல யுகங்களாக ரிஷிகள் முனிவர்கள் மஹான்கள் அனுபவத்தில் கண்ட உண்மை இது. என் தந்தை விடாமல் சொல்லி அந்த பழக்கம் எங்களுக்கும் வந்தது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், கேட்பதில் மூலம் சில தெய்வீக அதிர்வுகள் உருவாகும். எதிர்மறை மற்றும் தீய சக்திகளையும் தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்த பாதுகாப்பு. சிவன் கோவில் இல்லாத கிராமமே தமிழகத்தில் மட்டுமல்ல. பாரத தேசம் முழுதும் ஏன், உலகெங்கும் கூட இருந்தது, இப்போது அநேக இடங்களில் உருமாறி இருக்கிறது. உதாரணம் மெக்கா, தாஜ்மஹால். இது போதாதா?