LALITHAMBA DHARSAN J K SIVAN

2024 பிப்ரவரி 25 ஞாயிறு – லலிதாம்பாள் தரிசனம்
நங்கநல்லூர் J K SIVAN
அன்று ஞாயிறு. நண்பர் ஒருவரிடமிருந்து டெலிபோன்.
”கிளாம்பாக்கம் அம்பாள் கோவில் போகலாம் வருகி றீர்களா?”
”அங்கே தானே பெரிய பேருந்து நிலையம் சமீபத்தில் உருவாகி இருக்கிறது? அம்பாள் கோவில் வேறு இருக்கிறதா?”
”இது அந்த கிளாம்பாக்கம் இல்லை. இது திருவள்ளூர் பக்கம்’
”’ஓஹோ வேறே கிளாம்பாக்கமா? போகலாம். நான் ரெடியா இருக்கிறேன்’
‘சென்னை – திருமழிசை – திருவள்ளுர் – வேப்பம்பட்டு, வழியாக செவ்வாய் பேட்டை பாதையில், கிளாம் பாக்கம் கிராமம் இருக்கிறது. பரிசுத்தமான கிராமம். அங்கே தான் ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரி இருபது வருஷங்களாக குடி கொண்டிருக்கிறாள். ரெண்டு சந்நிதிகள். முதலில் நாகவல்லி அம்மன். கிராம தேவதை சந்நிதி. அடுத்து லலிதா திரிபுரசுந்தரி.அங்கே ஒரு இளம் அர்ச்சகர் கார்த்திக் என்ற பெயர் கொண்ட வரை சந்தித்தேன். கௌண்டின்ய கோத்ரம், பாரம்பரி யமாக கோவிலை நிர்வகித்து வருகிறார்கள். இருபது வருஷங்களுக்கு முன் கார்த்திக் மற்ற சில குழந்தை களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது பந்து ஒரு புதரில் விழுந்துவிட்டது. அதை எடுக்க நெருங்கியபோது அங்கே ஒரு ராஜநாகம்.
பதறி ஓடிய குழந்தைகள் பெரியவர்களை அழைத்து காட்டியபோது நாகம் அங்கே இல்லை. பிறகு புற்று இருந்தஇடத்தில் அம்மன் பொம்மை ஒன்று கிடைத்து அதை வைத்து விளையாடினார்கள். அந்த அம்மனே ஸ்ரீ நாகவல்லி அம்மன். பெரியவர்களும் அம்மனை வழிபட துவங்க, பலர் கனவில் அம்பாள் அங்கே கோயில் நிர்மாணிக்க கட்டளையிட்டாள் .ஒரு ஸ்தபதியை அணுகினார்கள். அவர் கனவில் அம்பாள் தான் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்று உத்தர விட்டாள்.கருணாமயி ரூபமாக உருவெடுத்தாள். முதலில் நாகவல்லி தோன்றியதால் அவளுக்கு ஒரு சந்நிதி அமைந்துள்ளது.
கார்த்திக் சொன்ன விவரத்தை படி அமெரிக்காவில் இருந்து குமார் என்ற ஒரு பக்தர் வருஷாவருஷம் தமிழ்நாடு வருபவர், பெற்றோர் முன்னோர் திதி முடித்தது திருப்பதி செல்வது அவர் வழக்கம். அவர் கனவில் அம்பாள் தோன்றி ”என்னை சந்தித்து விட்டு ஒரு கோவில் கட்டு” என்று உத்தரவிட்டாள் .’
‘அம்மா உன்னை எங்கே சந்திப்பது?”
”நீ திருப்பதி போகும் வழியில் தான் இருக்கிறேன்’
”’எங்கே?”
”எங்கே ஒரு குளத்தின் அருகே என்னை காண்கிறா யோ அங்கே” என்று பூடகமாக அம்மன் தெரிவித்தாள்
பக்தர் ஒவ்வொரு இடமாக தேடிக்கொண்டே வந்தார், எங்கெல்லாம் குளம் தென்படுகிறதோ அங்கெல்லாம் அதன் கரையில் அம்மன் கோவில் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தவர், கிளாம்பாக்கம் குளத்தங் கரையில் நாகவல்லியை கண்டு ஆனந்தித்தார்.
நாகவல்லி கோவில் உருவாகியது. அதற்கு பிறகு தான் அதை ஒட்டி மேலே சொன்ன பிரமாண்டமான லலிதா மஹா திரிபுரசுந்தரி ஆலயம் தோன்றியது.
திருமெய்யச்சுர் லலிதாம்பா போலவே அற்புதமாக வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் கருணைவடிவாக காட்சி தந்தாள். அருகே நின்று அவளை கண் குளிர தரிசித்தேன்.
கர்ப்பகிரஹத்தில் சுடர் விடும் தீப ஒளியில் அவள் சர்வாலங்கார பூஷிதையாக தரிசனம் தந்தாள். சந்நிதியின் வெளிப்புறம் சரவரிசையாக தீபாலங் காரம்.நானும் என்னுடன் வந்த நண்பர்களும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து பிரசாதம் பெற்று திரும்பினோம். வெளியே உத்சவ விக்ரஹமாக அம்பாள் தரிசனம் பெற்றோம். கோவில் பல சந்நிதிகளைக் கொண்டதாக சிறந்த சுதை, சிற்ப வேலைப்பாடுக ளோடு மும்முரமாக உருப்பெற்று வருகிறது. பக்தர்களின் நிதிஉதவியோடு வெகு சீக்கிரம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தோன்றுகிறது. கோவிலை ஒட்டி பெரிய குளம் அமைதியாக தெளிவாக இருக்கிறது.உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு போற்றாத தக்கது.
ஒரு இளம் அர்ச்சகர் கார்த்திக் என்ற பெயர் கொண்ட வரை சந்தித்தேன். கௌண்டின்ய கோத்ரம், பாரம்பரி யமாக கோவிலை நிர்வகித்து வருகிறார்கள். இருபது வருஷங்களுக்கு முன் சில குழந்தைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது பந்து ஒரு புதரில் விழுந்துவிட்டது. அதை எடுக்க நெருங்கிய போது அங்கே ஒரு ராஜநாகம்.பதறி ஓடிய குழந்தைகள் பெரியவர்களை அழைத்து காட்டியபோது நாகம் அங்கே இல்லை. பிறகு புற்று இருந்தஇடத்தில் அம்மன் பொம்மை ஒன்று கிடைத்து அதை வைத்து விளையாடினார்கள். அந்த அம்மனே ஸ்ரீ நாகவல்லி அம்மன். பெரியவர்களும் அம்மனை வழிபட துவங்க, பலர் கனவில் அம்பாள் அங்கே கோயில் நிர்மாணிக்க கட்டளையிட்டாள் .ஒரு ஸ்தபதியை அணுகினார்கள். அவர் கனவில் அம்பாள் தான் எவ்வாறு அமைக்கப் படவேண்டும் என்று உத்தரவிட்டாள். கருணாமயி ரூபமாக உருவெடுத்தாள். முதலில் நாகவல்லி தோன்றி யதால் அவளுக்கு ஒரு சந்நிதி அமைந்துள்ளது.இந்த கோவிலை பற்றி அர்ச்சகர் கார்த்திக் விளக்கும் வீடியோ ஒன்றை இணைத்திருக்கிறேன்.
https://youtu.be/hAVYFULWnSc?si=-oilqDRJ9Nb1UKUy

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *